வறட்சி தொடர்பில் விசேட கவனம் தேவை: இரா. சம்பந்தன்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி மக்களுக்கு அரசு உரிய நிவாரணங்களை வழங்கவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் தொடர்பில் ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்த கோரிக்கையை...

நாட்டின் பல பாகங்களுக்கு இன்று காற்றுடன் மழை பெய்யும்!

நாட்டின் பல பாகங்களுக்கும் இன்று (09) மழை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள பல பகுதிகளுக்கும் மழை எதிர்பார்ப்பதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Ad Widget

தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை அதிகரிப்பு

தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். சீனியின் இறக்குமதி வரி பத்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டமையால், தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். புதிய விலை திருத்தத்திற்கு அமைய...

இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அடக்க இராணுவம்: ஜனாதிபதி

அரசாங்கத்திற்கும், சிறுபான்மை சமூகங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துவோர் இராணுவத்தை கொண்டு அடக்கப்படுவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அனர்த்த நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் ஆகிய தொடர்பிலான கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நீடித்துவரும் இனவாத செயற்பாடுகளை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாது போனால், அதற்கு மாற்று நடவடிக்கையாக இராணுவம் ஈடுபடுத்தப்படும் என்றும்...

அரச, தனியார் பஸ் ஊழியர்களிடையே மோதல், 2 பேர் வைத்தியசாலையில்

வவுனியா தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இலங்கை அரச போக்குவரத்து சபை பஸ் ஊழியர்களுக்கும் இடையில் நேற்று(08) நண்பகல் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து நேர அட்டவணை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் இந்த மோதலுக்குக் காரணம் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னரும் இதேபோன்று மோதல் ஏற்பட்ட சம்பவங்கள் பல காணப்படுவதாகவும்...

திருமுருகன் காந்தியை விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்

குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டள்ள ஈழத் தமிழர்களின் ஆதரவாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ். நகரில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். பஸ் நிலையத்தின் முன்பாக நேற்று வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் போது, பாரத தேசத்திற்கு விடுதலை...

காங்கேசன்துறை மோசடி: கோட்டாபயவிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை

காங்கேசன்துறை சீமெந்து ஆலையில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விரைவில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை சீமெந்து ஆலையின் இயந்திர சாதனங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பழைய இரும்பாக பல கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பிலேயே குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குறித்த மோசடி தொடர்பில் முன்னாள்...

சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

சிறுநீரக நோயாளிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளார். அதன்படி, இதுவரை 3 ஆயிரம் ரூபாவாக இருந்த மாதாந்த கொடுப்பனவுத் தொகையை 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேருக்கு...

பாடசாலை பிள்ளைகளின் உடல் பருமனைக் குறைக்க விசேட திட்டம்

பாடசாலை பிள்ளைகளின் உடல் பருமனைக் குறைப்பதற்கு விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் இது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெறும் மரணங்களில் 59 வீதமான மரணங்கள் தெற்றா நோய்களினால் ஏற்படுகின்றது எனவும் மாரடைப்பு, உயர் குருதியழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களினால் அதிகளவில் மக்கள் உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதியளவு உடற்பயிற்சி மேற்கொள்ளாமையே...

இலங்கையில் சுனாமி அனர்த்தம் எதுவும் கிடையாது : வளி மண்டலவியல் திணைக்களம்

இலங்கையில் சுனாமி அல்லது சூறாவளி அனர்த்தம் எதுவும் கிடையாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் கடல் நீர் தரைப் பிரதேசத்திற்குள் பிரவேசித்த காரணத்தினால் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக சில தரப்பினர் பிரச்சாரம் செய்திருந்தனர். எனினும் இவ்வாறான எந்தவொரு ஆபத்து நிலைமைகளும்...

அமைச்சா்களுக்கு அபகீர்த்தி தொடர்வதை அனுமதிக்க முடியாது: சீ.வீ.கே.சிவஞானம்

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடங்களில் பலவாறாக சித்தரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையில் இவ்வாறான நிலைமை தொடர்ந்தும் நீடிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, இன்று (புதன்கிழமை) முதலமைச்சரால் அவையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அவைத்தலைவர்...

வட மாகாண அமைச்சர்கள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைக்குழு அறிக்கையை இன்றைய தினம் சபையில் சமர்ப்பித்து முதலமைச்சர் ஆற்றிய உரை

கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்கட்சித் தலைவர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே! பலவிதமான குற்றச்சாட்டுக்கள் எமது அமைச்சர்களுக்கு எதிராகக் கிடைத்ததன் விளைவாக நாம் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தோம். அதில் இருவர் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஒருவர் இளைப்பாறிய இலங்கை நிர்வாக சேவையின் ஒரு சிரேஷ்ட அதிகாரியாவார். விதிமுறைக் குறிப்புக்கள் கொடுக்கப்பட்டு...

காங்கேசன்துறை சீமெந்து உற்பத்திசாலை மேசாடி தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதியிடம் விசாரணை

காங்கேசன்துறை சீமெந்து உற்பத்திசாலை இயந்திர சாதனங்கள் பழைய இரும்பாக விற்கப்பட்டமை குறித்து முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. பாரிய நிதிமோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணைகளுக்காக இன்றைய தினம் ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலயாகுமாறு தயா ரட்நாயக்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள்...

தேவை ஏற்பட்டால் கட்டார் வாழ் இலங்கையர்கள் மீள அழைக்கப்படுவர்

தேவை ஏற்பட்டால் கட்டார் வாழ் இலங்கையர்கள் மீள அழைக்கப்படுவர் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். கட்டார் வாழ் இலங்கையர்களுக்கு எவ்வித இடையூறுகளும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் தேவை ஏற்பட்டால் கட்டார் வாழ் இலங்கையர்கள் மீள அழைத்துக் கொள்ளப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்டாரின் தற்போதைய நிலைமை நாட்டின்...

முதலமைச்சர் விக்னேஷ்வரனை கைது செய்ய வலியுறுத்தல்!

இனவாதம் பேசுபவர்களை கைது செய்வதாயின் முதலில் விக்னேஷ்வரன் மற்றும் சிவாஜிங்கம் ஆகியோரையே கைது செய்யுங்கள் என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். பௌத்தர்களுக்கு நல்லிணக்கத்தை கற்றுதர வேண்டியதில்லை. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமே நல்லிணக்கம் என்ன என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின்...

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு: இரா.சம்பந்தன்

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை நிறைவேற்றும் கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும்...

நள்ளிரவு முதல் சீனிக்கான வரி உயர்வு!

இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு 10 ரூபா வரி அறவீடு செய்யப்பட உள்ளதாக நாடாளுமன்றில் கூடிய வாழ்க்கைச் செலவு குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....

ஈழ ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன்காந்தி விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கான அழைப்பு

தமிழக அரசினால் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன்காந்தி அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கான அழைப்பு கடந்த 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசாங்கம் இனவழிப்பு யுத்தம் ஒன்றின் மூலம் படுகொலையை அரங்கேற்றிய பின்னர் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் தமிழகத்தையும், வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களையும்...

கட்டார் வாழ் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு

கட்டாரிலிருந்து இலங்கைக்குச் செல்பவர்கள், கட்டார் நாட்டின் உள்ளேயே, தங்களது பணத்தினை டொலராக மாற்றிக் கொள்ளுமாறு, கட்டாரில் உள்ள இலங்கைக்கான தூதுவர் ஏ.எஸ்.பி. லியனகே ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போழுது சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இலங்கையர்கள் கட்டார் நாட்டில் உள்ளதாகவும், இப்போதைக்கு நாட்டின் நிலைமை மிகவும் அமைதியாகக் காணப்படுவதாகவும், விமான சேவைகளில் மாத்திரமே பிரச்சினைகள் இருப்பதாகவும்...

காங்கேசந்துறையிலிருந்து தெய்வேந்திர முனை நோக்கிய மனிதாபிமான ரயில் பயணம்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிக மோசமாக பாதிக்கபட்ட மாத்தறை பிட்டபத்தர டட்லி சேனாநாயக்க மகா வித்தியாலயத்தினை சுத்தப்படுத்தி பாடசாலை சமூகத்திற்கு மீள கையளிக்கவும் அம்மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் தேவையான அத்தியாவசிப் பொருட்கள் மற்றும் மருத்துவ, உளவள ஆலோசனைகளை வழங்குவதற்கும், இரத்தினபுரி களுத்துறை காலி மாத்தறை மாவட்ட மக்களுக்கு வழங்க முடிந்தளவு உதவிகளை வழங்குவதற்குமாக இந்த...
Loading posts...

All posts loaded

No more posts