Ad Widget

“அழிவை நோக்கி செல்லும் ஆரிய குளத்தை பாதுகாப்போம்”

“அழிவை நோக்கி செல்லும் ஆரிய குளத்தை பாதுகாப்போம்” எனும் தொனிப் பொருளில் ஆரிய குளத்தை புனரமைக்கும் செயற்றிட்டம் நேற்றய தினம் வடமாகாண ஆளுநர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த செயற்றிட்டம் ஆரிய குளத்திலிருந்து காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலர் என்.வேதநாயகன், வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா, யாழ் மாநகரசபை ஆணையாளர் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வினை தொடர்ந்து யாழ். மத்திய பேருந்து நிலையம், மற்றும் நீதிமன்ற சுற்றாடல் மற்றும் நகர பகுதிகளிலும் சுத்தீகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Posts