Ad Widget

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்களுக்கு உண்மைகளை மறைத்து பொய்யாக செய்திகளை கூறிவருகின்றது

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்களுக்கு உண்மைகளை மறைத்து பொய்யாக செய்திகளை கூறிவருகின்றது உண்மையாகவே நாம் எதிர்பார்க்கக்கூடிய எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை என அமைச்சர் மனோகணேசன் பிரித்தானியாவில் தெரிவித்துள்ளார்.

நான் இவ்வாறு உண்மைகளை சொல்லுவது சம்பந்தன் சுமந்திரனுக்கு பிடிப்பதில்லை சந்திரனை தருகிறோம்,இந்திரனை பிடித்து தருகிறோம் என த.தே.கூட்டமைப்பு பம்மாத்து காட்டிவருகிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள மனோ கணேசன் உண்மையாக தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு கிடைக்கப்போகின்றது என்பது பற்றி தெளிவுபடுத்துவதில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

உண்மையாகவே கடந்த கால அரசாங்கங்களால் முன்மொழியப்பட்ட அனைத்து தீர்வுகளையும் விட குறைந்த தீர்வைப்பற்றியே இப்போது பேசப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

கடந்தகாலத்தில் சுமந்திரன் நீதிமன்றங்களில் வழக்காடிக்கொண்டிருந்தவேளை நானும் ரவிராஜ் உம் வீதிகளில் மக்களுக்காக போராடிக்கொண்டிருந்தோம். அத்தோடு தேர்தல் காலங்களில் வாரக்கணக்கில் வடகிழக்கில் தங்கிநின்று த.தே.கூட்டமைப்புக்காக பிரச்சாரங்களை நான் செய்துவந்தேன் ஆனால் கூட்டமைப்பு எனக்காக எதுவுமே அவ்வாறு செய்யவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

Related Posts