Ad Widget

மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து வீடியோ எடுத்த தந்தைக்கு விளக்கமறியல்

தனது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து அதனை கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்து வைத்திருந்த நபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிபதி ரி.கருணாகரன் நேற்று வியாழக்கிழமை உத்தரவு இட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது ,

திருட்டு குற்றம் ஒன்று தொடர்பில் சுன்னாகம் பொலிசாரினால் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் இருந்து சான்று பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

அவ்வேளை மனைவியின் கை தொலைபேசியும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட நிலையில் அதனை பொலிசார் பரிசோதனை செய்த வேளை அதில் இருந்த வீடியோ காட்சி ஒன்றில் சிறுமி ஒருவரை கணவன் பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் காட்சி இருந்துள்ளது.

அதனை அடுத்து அந்த சிறுமி தொடர்பில் பொலிசார் விசாரணை செய்த வேளை குறித்த சிறுமி அவர்களது பிள்ளை என தெரியவந்துள்ளது. அதனை அடுத்து சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்து வீடியோ எடுத்து வைத்திருந்தமையை பிறிதொரு வழக்காக மல்லாகம் நீதிமன்றில் பொலிசார் தாக்கல் செய்து கணவனை மன்றில் முற்படுத்தினார்கள்.

அது தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட நீதிபதி சந்தேக நபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.

Related Posts