அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழர்களை நான்காம் தர பிரஜைகளாக்கியுள்ளது: சுமந்திரன்

வலிந்து காணாமல் ஆக்கப்படுதலிலிருந்து மக்களை பாதுகாக்கும் சர்வதேச சமவாய திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளமையானது, இலங்கை தீவில் தமிழர்களை நான்காம் தர பிரஜைகளாக அரசாங்கம் காட்டியுள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் அதன் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ராணுவம் மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைப்பினரால் இத் திருத்தச் சட்டமூலத்திற்கு எழுந்த...

ஜகத் ஜயசூரிய போர்க்குற்றம் இழைத்ததாக ஆதாரம் இல்லை! : இலங்கை அரசாங்கம்

முன்னாள் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லையென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, ஜகத் ஜயசூரிய தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்கள் யாவும் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்றும்...
Ad Widget

பிரபாகரனுக்கு நந்திக்கடலில் ஒரு நினைவுத்தூபி!

பிரபாகரனுக்கு நந்திக்கடலில் ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் என்று ஞானசார தேரர் கூறியமை துட்டகைமுனு அன்று கையாண்ட விடயமாகும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று சவுக்கடி தமிழ் கிராமத்தில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 27ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை...

பிளவுபடாத ஐக்கிய இலங்கை என்ற உறுதியான கட்டமைப்புக்கு அமைய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் : சம்பந்தன்

பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத ஐக்கிய இலங்கை என்ற உறுதியான கட்டமைப்புக்கு அமைவாக, யாவரும் சுயமாக விரும்பி ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என எதிர்க கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்ட பின்னர் உரையாற்றிய போதே சம்பந்தன் இதனை...

சாதாரண தரத்தில் தேறாத மாணவர்களுக்காக புதிய இரு பாடத் திட்டங்கள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தேறாத மாணவர்கள், உயர்தரக் கல்வியை மேற்கொள்ளும் பொருட்டு புதிய இரண்டு பாடத்திட்டங்கள் அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 13 வருடங்களுக்கு தொடர்ச்சியான கல்வி என்ற வேலைத் திட்டத்தின் கீழ் இந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். இதன்படி,...

“இலங்கை ஒரு குற்றவாளி” : ஐ.நா.வில் ஆர்ப்பாட்டம்

யுத்தக் குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தை அந்நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காப்பற்ற முயல்வதாக தெரிவித்து, ஐ.நா. பொதுச்சபை கட்டத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒரு குற்றவாளி எனும் தொனிப்பொருளில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (புதன்கிழமை) இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெருமளவான புலம்பெயர் அமைப்புக்கள், இலங்கையில் இடம்பெற்ற...

இலங்கையில் தமிழர்களுக்கு ஆபத்து!

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்கள், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் ஆபத்தில் உள்ளனர் என பேராசிரியர் போல் நியுமன் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வில் நேற்று (புதன்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட பலர் புனர்வாழ்வுக்கு...

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!! நோயாளர்கள் சிகிச்சை பெறமுடியாத நிலை!!

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிமுதல் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம், நாளை காலை 8 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளது. தமது பிரச்சினைக்கு இதுவரை அரசாங்கம் எவ்வித தீர்வையும் பெற்றுக் கொடுக்கவில்லையென...

இலங்கையில் பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை: சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

இலங்கை அரசியலில் பெண்களுக்கான சந்தர்ப்பம் உரிய முறையில் வழங்கப்படுவதில்லையென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பங்களிப்பை செலுத்துபவர்கள்...

டொனால்ட் ட்ரம்பை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி!

நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்ளச் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை நேற்று (புதன்கிழமை) சந்தித்துள்ளார். இது குறித்து தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சில கருத்துக்களையும் ஜனாதிபதி பதிவேற்றியுள்ளார். நானும் எனது மனைவி ஜயந்தியும், அமெரிக்க ஜனாதிபதியையும் அவரது...

20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்!

மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 37 வாக்குகளும் அளிக்கப்பட்டதன் மூலம் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்ட மூலத்துக்கான வாக்கெடுப்பு நேற்று இரவு 6.30 மணிக்கு நடைபெற...

மின்சார சபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது!

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் கடந்த 8 நாட்களாக முன்னெடுத்து வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று ( புதன்கிழமை) இரவு நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை கூட்டுத் தொழிற்சங்க அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி, இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சகலரும் வழமை போன்று சேவைக்கு சமூகம் தருமாறு அவ்வமைப்பு...

சிறீலங்காவில் இடம்பெற்ற குற்றங்களை விசாரிக்க சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதி மன்றிற்குப் பரிந்துரை செய்ய வேண்டும் : ஐ.நாவில் கஜேந்திரகுமார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடரின் பொது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை. இந்த அறிக்கையானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து தயாரிக்கப்பட்டது. இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 ஒக்டோபர் 2015ல் நிறைவேற்றப்பட்டபோது, குறித்த தீர்மானத்திற்கும் ஐக்கிய...

வைத்தியர்கள் சங்கம் நாளை 8 மணி முதல் வேலைநிறுத்தத்தில்!

மாலபே SAITM தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக நாளை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் நடாத்தும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும் (GMOA) ஆதரவு வழங்கியுள்ளது. அதன்படி, நாளை காலை 08 மணி முதல் 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக GMOA அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அர­சி­யல் தீர்வு வரும் வரா­ம­லும் போக­லாம்- சம்பந்தன்

தீர்வு வரும் வரா­மல் போக­லாம். நாங்­கள் நிதா­ன­மா­கச் செயற்­பட வேண்­டும். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க இரு­வ­ரும் தமது கட்சி உறுப்­பி­னர்­களை ஒழுங்­காக முறை­யாக வழி­ந­டத்த வேண்­டும். இனி­மேல்­தான் முக்­கிய தரு­ணங்­கள் இருக்­கின்­றன. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். தமிழ்ப் பத்­தி­ரிகை...

யாழில் போதைப் பொருளுடன் 10ம் தரத்தில் கற்கும் மாணவர் கைது

மானிப்பாய் பகுதியில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் வசம் இருந்து போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கஞ்சா கலந்த மாவா எனப்படும் போதைப் பொருள் பக்கற்றுக்கள் நான்கு இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதோடு, குறித்த மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபரை யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில்...

பிட்டுக்குள் கஞ்சா!! கோழிக் குழம்பில் ஹெரோயின்!

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் சம்பவங்கள் அண்மைய காலமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கு போதைப்பொருளை எடுத்துச் சென்ற ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைதுசெய்த பொலிஸார், நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சந்தேகநபரிடம் 170 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக...

தமிழரசுக்கட்சி தனித்துப் போட்டியிடாது! -சம்பந்தன்

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றிரவு தமிழ் ஊடகவியலாளர்களை அழைத்து சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடினார். இக்கலந்துரையாடடின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில்...

உதயன் பத்திரிகை மீது வடக்கு விவசாய அமைச்சர் மானநஷ்ட வழக்கு!

டக்கு மாகாணத்தில் வெளிவரும் உதயன் நாளிதழ் நிறுவனத்திடம் 500 மில்லியன் (50கோடி) ரூபா கோரி வடமாகாண விவசாய அமைச்சர் சிவனேசன் மானநஷ்ட வழக்குத் தொடுத்துள்ளார். கடந்த காலத்தில் தற்போது விவசாய அமைச்சராக இருக்கும் சிவனேசனே தராகி சிவராம் படுகொலையைச் செய்தவர் என உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அத்துடன் விவசாய அமைச்சர் போதைவஸ்து கடத்தலுடனும் தொடர்புபட்டவர்...

எழிலன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை!- மேஜர் ஜெனரல் சானக குணவர்த்தன

எழிலன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லையென இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சானக குணவர்த்தன நேற்று(19) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், இராணுவத்தினரின் உத்தரவுக்கமைய, விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த சின்னத்துரை சசிதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்தார் என வடமாகாண மகளிர் விவகார அமைச்சராக இருக்கும் அனந்தி சசிதரன்...
Loading posts...

All posts loaded

No more posts