Ad Widget

அர­சி­யல் தீர்வு வரும் வரா­ம­லும் போக­லாம்- சம்பந்தன்

தீர்வு வரும் வரா­மல் போக­லாம். நாங்­கள் நிதா­ன­மா­கச் செயற்­பட வேண்­டும். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க இரு­வ­ரும் தமது கட்சி உறுப்­பி­னர்­களை ஒழுங்­காக முறை­யாக வழி­ந­டத்த வேண்­டும். இனி­மேல்­தான் முக்­கிய தரு­ணங்­கள் இருக்­கின்­றன.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

தமிழ்ப் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மைப் பலம், பொது வாக்­கெ­டுப்­பில் வெற்றி பெறக்­கூ­டிய சூழல் இருக்­கு­மா­யின் நாம் அந்­தச் சந்­தர்­பத்தை விட முடி­யாது. நிதா­ன­மாக பக்­கு­வ­மாக விட­யங்­க­ளைக் கையாள வேண்­டும். வாயைப் பொத்­திக் கொண்டு விட­யங்­களை நகர்த்த வேண்­டும்.

அர­ச­மைப்­புத் தொடர்­பில் மகிந்­த­வு­டன் பேசி­னேன். தமிழ் மக்­க­ளின் தீர்­வுக்கு பல்­வேறு உறு­தி­களை இந்­தி­யா­வுக்கு நீங்­கள் (மகிந்த) வழங்­கி­னீர்­கள் என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டி­னேன். அத­னைச் செய்­ய­வில்லை என்­ப­தை­யும் கூறி­னேன்.
தமிழ் மக்­க­ளின் உரி­மை­க­ளைப் பெற்­றுக் கொடுக்க வேண்­டிய பெரும் பொறுப்பு இந்­தி­யா­வுக்கு இருக்­கின்­றது. இந்­தியா எங்­க­ளைக் கைவிட முடி­யாது. கைவி­ட­வும் மாட்­டாது.

13ஆவது திருத்­தச் சட்­டத்­தில் எமக்கு உடன்­பாடு இல்­லை­யா­யி­னும், அதை முற்­றாக நிரா­க­ரிக் முடி­யாது. அது எமக்­கான இறு­தித் தீர்­வும் அல்ல. புதிய அர­ச­மைப்­பில் ஒற்­றை­யாட்­சி­யைக் கைவி­டு­வ­தற்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி இணங்­கி­யுள்­ளது. 13ஆவது திருத்­தத்­தி­லி­ருந்து எவ்­வ­ளவோ தூரம் நாம் முன்­னேறி வந்­துள்­ளோம். புதிய அர­ச­மைப்­பில் நூறு வீதம் திருப்தி இல்­லை­யா­யி­னும், அதில் எவ்­வ­ளவோ முன்­னேற்­ற­மான விட­யங்­கள் உள்­ளன. தற்­போது நாடா­ளு­மன்­றத்­துக்கு வரு­வது இடைக்­கால அறிக்­கை­தான்.

கூட்­டாட்சி என்று நாம் சொற்­க­ளில் தொங்­கிக் கொண்­டி­ருக்­கக் கூடாது. உல­கில் பல நாடு­க­ளில் எந்­தப் பெய­ரும் இல்­லா­மல் அதி­கா­ரங்­கள் பகி­ரப்­பட்­டி­ருக்­கின்­றன. நாம் கிடைத்­துள்ள சந்­தர்­பத்தை தவ­ற­வி­டக் கூடாது என்­றார்.

Related Posts