சத்திரசிகிச்சை உபகரணத்தினைக் கொள்வனவு செய்ய நன்கொடையாளர்கள் முன்வர வேண்டும்: யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்

தைரொட்சைட் (கண்டக்கழலை) நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கான உபகரணத்தினைக் கொள்வனவு செய்ய நன்கொடையாளர்கள் முன்வர வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் து.சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மையில்...

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கும்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்தே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வாக்களிக்கும் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இன்று காலை இடம்பெறவுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதென்ற முடிவை உத்தியோகபூர்வமாக எடுத்து ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளனர். தற்போதைய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைவரத்தை ஆராய்ந்துபார்க்கையில் தமிழ்த்...
Ad Widget

பொய்த்துப்போன அமைச்சரின் வாக்குறுதி!- மீண்டும் போராட்டத்தில் கல்விசாரா ஊழியர்கள்!!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு பல்கலைக்கழக தொழிற்சங்கக் குழு தீர்மானித்துள்ளனர். மேலதிக கொடுப்பனவிற்கான சுற்றுநிரூபம் வெளியிடுவது குறித்த உயர்க்கல்வி அமைச்சரின் வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி அமைச்சர் கபீர் ஹாசிமிற்கும், கல்விசாரா ஊழியர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது 35 வீத மாதாந்த மேலதிக கொடுப்பனவில் 10 வீதத்தை...

நம்பிக்கையில்லா பிரேரணை: மைத்திரி- சம்பந்தன் சந்திப்பு

எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சம்பந்தன், ”நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இன்றிரவு அல்லது...

முகத்தாடை சத்திரசிகிச்சை செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள்!!

முகத்தாடை சத்திரசிகிச்சை நிபுணத்துவக் குழாம் பல பாகங்களிலிருந்தும் யாழ்ப்பாணம் வருகை தந்து ஏப்ரல் மாத பிற்பகுதியில் மேலதிக சிகிச்சைகளை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது. மேற்படி சிகிச்சையில் கலந்து கொண்டு பயன்பெற விரும்புவோர் யாழ். போதனா வைத்தியசாலை முகத்தாடை வாய் சத்திரசிகிச்சைப் பிரிவில் (OMF Unit) கிழமை நாட்களில் நேரடியாகவும் மற்றும் 0779938324 எனும் தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு!!

பிரதமருக்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிதானந்த அளுத்கமகே, பாராளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமது ஆதரவினை வழங்க தீர்மானித்துள்ளது. ஆனால் தமிழ் கூட்டமைப்பு குறித்த விடயம் தொடர்பில் ஒருதலைப்பட்சமாகவெ செயற்பட்டு வருகின்றது...

ரிஷாட்டின் பொறுப்பில் வடக்கின் புனர்வாழ்வு!

வடக்கின் புனர்வாழ்வு மற்றும் வன்னி மாவட்ட அபிவிருத்தி ஆகிய பொறுப்புகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு வழங்கப்பட்டுள்ளன. புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து வெளியாகிய வர்த்தமானி அறிவித்தலிலேயே மேற்படி விடயம் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் வடக்கு மக்களின் குடியேற்றங்கள் மற்றும் வன்னி மாவட்ட அபிவிருத்தி ஆகிய பணிகளை...

யாழ். பல்கலைக் கழக ஊழியர்கள் கொடும்பாவி எரித்துப் போராட்டம்

யாழ். பல்கலைக் கழக ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் கொடும்பாவி எரித்துப் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்ற நிலையில், பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரிவினர் போராட்டத்துக்கு குழப்பம் விளைவித்தமையினால் கொடும்பாவி எரித்தனர். தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதவிடத்து பல்வேறு வடிவங்களில் தமது போராட்டத்தை...

யாழ். மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவு

யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவினை ஒட்டி யாழ். மருத்துவ பீடமும் வட. மாகாண சுகாதார அமைச்சும் இணைந்து நடாத்துகின்ற மருத்துவ கண்காட்சி எதிர்வரும் 4, 5, 6, 7ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை யாழ். மருத்துவபீடத்தில் இடம்பெறவுள்ளது. அடிப்படை விஞ்ஞானம், மருத்துவ துறையின் நவீன முன்னேற்றங்கள்,...

யாழில் ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் -நெள்ளுக்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தின் போது 55 வயதுடைய தயா என்ற முதியவரே உயிரிழந்துள்ளார். மேலும், மக்கள் பாவனை இல்லாத வீதியில் சென்ற அவர், ரயில் கடவையை கடக்க முற்பட்ட போதே உயிழிந்துள்ளார் என...

யாழில் இருந்து மன்னாருக்கு 6 ரூபாய் 50 சதம்?

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கு செல்வதற்கு 6 ரூபாய் 50 சதம் பயண சீட்டை கொடுத்தமை, பயணிகளுக்கு பயண சீட்டை வழங்காமை, கணக்கிற்கு அதிகமாகவும், குறைவாகவும் பயண சீட்டு பணங்களை வைத்திருந்தமை முதலான குற்றச்சாட்டுக்களின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனர்களுக்கு கடுமையான எச்சரிக்கையுடன் மீள பணியில் அமர்த்த யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குறித்த...

நாவற்குழி இளைஞர்கள் வழக்கு: ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்யும் கோரிக்கை நிராகரிப்பு

யாழ். நாவற்குழியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் குறித்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்யும் கோரிக்கையை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நிராகரித்துள்ளார். குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை குறித்த முறைப்பாட்டில்...

வடமராட்சியில் மகள் வெட்டிக்கொலை!! தாய் படுகாயம்!!!

வடமராட்சி கிழக்கு, அம்பன் – குடத்தனையில் வீடொன்றுக்குள்ளிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது தாயார் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது. “அந்த வீட்டில் தாயும் மகளுமே வசித்து வந்தனர். கொள்ளைக் கும்பல் ஒன்றே இந்தக் கொடூரச் செயலைச் செய்திருக்கும் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். நல்லதம்பி தேவகி...

புலிகளின் முக்கிய தளபதிகள் உயிரிழக்க ஸ்ரீதரனே காரணம்!!

“தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள்” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் எம்.ரெமிடியஸ் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

கூட்டமைப்பு குற்றச்சாட்டுகளிலிருந்து எம்மை விடுவித்துள்ளது : ஈ.பி.டி.பி

“ஈ.பி.டி.பி கட்சி ஒட்டுக்குழு என்றும், தமிழ் உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள் என்றும் எம்மீது பொய் குற்றச்சாட்டுக்களை கூறி வீண்பழி சுமத்தி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க எங்களின் ஆதரவை பெற்றுள்ள நிலையில் அப் பொய் குற்றச்சாட்டுக்களில் இருந்து எங்களை விடுவித்துள்ளது” என ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களான மு.ரெமிடியஸ், வி.குபேந்திரன்...

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு கடன் வழங்கும் போது பேரம் பேசப்படுகின்றதா?

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு கடன் வழங்கும் போது பேரம் பேசப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றிற்கு பதிலளித்த போதே, மத்திய வங்கியின்...

இளைஞர்களுக்கிடையில் மோதல்: நால்வர் படுகாயம்!

பாசையூர் அந்தோனியார் கோவில் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த சம்பவத்தையடுத்து அங்கு பொலிஸார் மற்றும் விசேட படையினர் வரவழைக்கப்பட்ட நிலையில் நிலைமை சுமூகமடைந்துள்ளது பாசையூர் இளைஞர்களுக்கும் ஈச்சமோட்டை இளைஞர்களுக்கும் இடையில் இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ். போதனா...

பாடசாலை மாணவன் மீது கத்திக்குத்து!

புளியம்பொக்கனை ஆலய வளாகத்தில் பாடசாலை மாணவன் மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்வசத்திற்கு வருகை தந்திருந்த கிளிநொச்சி பிரபல பாடசாலை ஒன்றின் மாணவனே கடந்த வெள்ளிக்கிழமை கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளார். எனினும் மாணவன் மீது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸாருக்கு...

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எப். நிபந்தனை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சில கோரிக்கைகளை முன்வைத்து கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கோரிக்கைகளுக்கு கிடைக்கப்பெறும் பதில்களை பொறுத்தே நம்பிக்கையில்லா பிரேணையை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படுமென சுரேஸ்...

வடக்கின் பாரம்பரிய உணவகம் திறந்து வைப்பு!

வடக்கின் பாரம்பரிய உணவகமான “அம்மாச்சி” உணவகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் கீரிமலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதனை நல்லிணக்க செயலணியின் தலைவி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திறந்து வைத்தார். வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் வட. மாகாணத்தில் சகல பகுதிகளிலும் “அம்மாச்சி” உணவகம் திறக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தை அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகமே நேற்றையதினம்...
Loading posts...

All posts loaded

No more posts