Ad Widget

பொய்த்துப்போன அமைச்சரின் வாக்குறுதி!- மீண்டும் போராட்டத்தில் கல்விசாரா ஊழியர்கள்!!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு பல்கலைக்கழக தொழிற்சங்கக் குழு தீர்மானித்துள்ளனர்.

மேலதிக கொடுப்பனவிற்கான சுற்றுநிரூபம் வெளியிடுவது குறித்த உயர்க்கல்வி அமைச்சரின் வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வி அமைச்சர் கபீர் ஹாசிமிற்கும், கல்விசாரா ஊழியர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது 35 வீத மாதாந்த மேலதிக கொடுப்பனவில் 10 வீதத்தை இம்மாத அல்லது அடுத்த மாத ஊதியத்துடன் வழங்க இணக்கம் தெரிவித்து, அதற்கான சுற்றுநிரூபத்தை நேற்று வெளியிடுவதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சர் உறுதியளித்தபடி நேற்று சுற்றுநிருபம் வெளியிடப்பட்டால் கடந்த 34 நாட்களாக முன்னெடுத்து வந்த போராட்டத்தை நேற்றுடன் நிறைவு செய்வதாக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அமைச்சரின் வாக்குறுதி பொய்த்துப்போன நிலையில் போராட்டத்தை தொடர கல்விசாரா ஊழியர்கள் தீர்மானித்துள்ளர்.

Related Posts