யாழில் ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் -நெள்ளுக்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தின் போது 55 வயதுடைய தயா என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.

மேலும், மக்கள் பாவனை இல்லாத வீதியில் சென்ற அவர், ரயில் கடவையை கடக்க முற்பட்ட போதே உயிழிந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts