Ad Widget

பாடசாலை மாணவன் மீது கத்திக்குத்து!

புளியம்பொக்கனை ஆலய வளாகத்தில் பாடசாலை மாணவன் மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்வசத்திற்கு வருகை தந்திருந்த கிளிநொச்சி பிரபல பாடசாலை ஒன்றின் மாணவனே கடந்த வெள்ளிக்கிழமை கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளார்.

எனினும் மாணவன் மீது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸாருக்கு அடையாளம் காட்டிய போதும் அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லையென மாணவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் தாம் கவலையடைந்துள்ளதாகவும், இச்செயற்பாடானது பொலிஸார் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கத்திக் குத்துக்கு இலக்கான மாணவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார்.

Related Posts