வட.மாகாண ஆளுநரால் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!

யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் பாடசாலைகளுக்கு மரக்கன்றுகளை வட.மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே நேற்று (வியாழக்கிழமை) வழங்கி வைத்தார். எதிர்வரும் ஜீன் மாதம் 5ம் திகதி தேசிய மரம் நடுகை மாதத்தினை முன்னிட்டு தினத்தை முன்னிட்டு சுமார் 4 ஆயிரம் மரக்கன்றுகளை யாழ். மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாட்டுவதற்கான ஏற்பாடுகளை ஆளுநர் றெஜினோல்ட்...

நினைவேந்தல் நிகழ்வில் மாலை மரியாதையை எதிர்பார்க்க கூடாது: முதலமைச்சர்

நினைவேந்தல் நிகழ்வு என்பது மரண சடங்குக்கு செல்வது போன்றது. இங்கு மாலை மரியாதை அளித்து மேள தாளத்துடன் அழைத்து செல்வார்களென எதிர்ப்பார்க்க கூடாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபையின் 123 ஆவது அமர்வு நேற்று கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது. இதன் போது எதிர்க்கட்சி...
Ad Widget

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தல்

தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலுமின்றி, மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதை தடுக்கும் வகையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. கடந்த தசாப்த காலங்களில் இச்சட்டத்தினூடாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இப்பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை)...

5 ஆயிரம் பட்டதாரிகளுக்கே ஜூலையில் நியமனம்!

20 ஆயிரம் பட்டதாரிகளை இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. “45 வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக் கொள்வதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளுங்கள்!! தாக்குதல் நடத்துவது கோழைத்தனம்! – சிவாஜிலிங்கம்

பத்திரிகையாளர்களின் எழுத்துக்களில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால், கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டும். அதனை விடுத்து கோழைத்தனமாக தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கதென வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தமிழ் ஊடகவியலாளர்கள்...

வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

வவுனியாவில், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சருக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பல அமைப்புக்கள் நேற்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்றினை மேற்கொண்டனர். வவுனியா விவசாயப் பிரதிப்பணிப்பாளராக கடமையாற்றிய யோகேஸ்வரன் என்பவர் பதவியேற்று இரண்டரை வருடங்களுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டமையைக் கண்டித்தும், வவுனியாவில் பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மூங்கில் செய்கையால் நிலத்தடி நீர்...

திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன் பதவியேற்பு!

திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் நேற்று (புதன்கிழமை) தமது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்போது திருகோணமலை நீதிமன்ற பிரதம நிதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா மற்றும் பதிவாளர்கள், சட்டத்தரணிகள், ஊழியர்கள் அவரை வரவேற்றனர். தனது கடமையைப் பொறுப்பேற்ற நீதிபதி, நீதிமன்றக் கட்டமைப்பு தொடர்பிலும், நீதிமன்றம் மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியமை தொடர்பிலும் சில மணிநேரங்கள்...

சட்டத்தரணிகள் வாள்வெட்டுக் குழுக்களின் சார்பில் ஆஜராவதை நிறுத்த வேண்டும் – தவராசா

வாள்வெட்டுக் குழுக்களின் அடாவடித்தனங்களைக் கட்டுப்படுத்த சட்டத்தரணிகள் வாள்வெட்டுக் குழுக்களின் சார்பில் ஆஜராவதை நிறுத்த வேண்டுமென வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகத் துறைக்கெதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

ஊடகவியலாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து யாழ். நகரில் ஆர்ப்பாட்டம்!!

காலைக்கதிர் பத்திரிக்கையின் பிரதேச செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணம் நகரில் இன்றைய தினம் புதன் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.ஊடகவியலாளர்களால் இன்றைய தினம் காலை 10 மணியளவில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுப்பட்டது . நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி...

விரைவில் பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக மாற்றம்!! -யாழில் பிரதமர்

விரைவாக பலாலி விமான நிலையத்தினை பிராந்திய விமான நிலையமாக்குவதற்கான நடவடிக்கைக்கள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.மாட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்களுக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு வந்திருந்தார். இந்நிலையில், பல்வேறு நிகழ்வுகளிலும் பிரதமர் கலந்து கொண்டிருந்தார். இதேவேளை பிரதேச அபிவிருத்தி தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த பிரதமர் வடக்கின் முக்கிய...

பிரபாகரன் தலையில் கோடாலியால் வெட்டியது போல் முதல்வர் தலையிலும் வெட்ட வேண்டுமாம்!!

வாரத்துக்கொரு கேள்வி – 28.05.2018 என்மேல் கரிசனையுடைய ஒருவர் பின்வரும் கேள்வியை அனுப்பியுள்ளார். கேள்வி – ஐயா! உங்களைப் பற்றி தெற்கில் மிகக் கேவலமாகக் கதைக்கப்படுகிறது. பிரபாகரன் தலையில் கோடாலியால் வெட்டியது போல் உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும் என்று கூறி உங்கள் வெட்டப்பட்ட தலையை வலைத்தளங்களில் படங்களாக அனுப்புகின்றார்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ...

இலங்கையில் உயிர்களை காவுகொள்ள காத்திருக்கும் புதிய வைரஸ்!

நாடு முழுவதும் பரவிவரும் இன்புளுவென்ஸா வைரஸ் நோய் தொற்றினால், இதுவரை அரச வைத்தியசாலைகளில் நான்கு சிறுவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முக்கியமாக தெற்கில் பரவும் குறித்த இன்புளுவென்ஸா நோய் தொடர்பில் மக்களுக்கு முறையான விளக்கமளித்து அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்நோய் ஏனைய பகுதிகளுக்கும் பரவி உயிர்ச்...

வடமராட்சியில் போராட்டம் நடத்தியவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!

புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளிலிருந்து யாழிற்கு வருகைதந்து வாடிகளை அமைத்து கடலட்டை பிடிப்பவர்களுக்கு எதிராக வடமராட்சி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த மீனவர்கள் முறையிட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) மருதங்கேணி பிதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச செயலாளருடனான சந்திப்பில் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை...

வடக்கின் முக்கிய அமைச்சருக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் அழைப்பு!

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.சர்வேஸ்வரனை விசாரணைக்கு வருமாறு, இலங்கை அரச பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகத்திற்கு சென்று குற்றத்தடுப்பு பிரிவின் உறுப்பினர்கள் இருவர் முகவரி மற்றும் யார் அனுப்பியவர்கள் என்ன விடயத்திற்கான விசாரணைகள் என குறிப்பிடாது விசாரணைக்கு வருமாறு சிறு துண்டில் எழுதிக்...

20,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

அரச சேவையில் 20,000 பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைகளில் தெரிவு செய்யப்பட்ட 20,000 பட்டதாரிகளே, எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி முதல் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன...

இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் வாகன உரிமையாளர்கள் சங்கம் பணிபுறக்கணிப்பு?

எரிபொருள் விலையை அதிகரித்தமையினால் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் வாகன உரிமையாளர்கள் சங்கம் பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். முன்வைக்கப்பட்ட மூன்று வேண்டுகோள்களுக்கும், இதுவரையில் உரிய முறையில் பதில் கிடைக்காமையின் காரணமாகவே பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக எரிபொருள் விநியோக தனியார் பவுசர் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார் இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை...

யாழ். பல்கலை சமூகம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

தமிழகம் தூத்துக்குடியில் ஸ்ரைலெட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களை துப்பாக்கிச் சூடு நடத்திய தமிழகப் பொலிஸாரின் வெறிச் செயலைக் கண்டித்தும் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேருக்கு நீதிவேண்டியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் இன்று (28) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழக முன்றலில் நண்பகல் 12 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழகம் தூத்துக்குடியில் ஸ்ரெலைட்...

யாழில் ஐஸ்கிறீம் கடைக்குள் திடீரென நுளைந்த பிரதமர் ரணில் !!

யாழ்ப்பாணத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னறிவித்தல் ஏதுமின்றி திடீர் திடீர் என பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டதோடு மக்களைக் காணும்போது அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். அதேபோல நேற்று இரவு திடீரென நல்லூர்ப் பகுதியிலுள்ள றீயோ ஐஸ்கிறீம் கடைக்கு சென்ற அவர் அங்கு ஐஸ்கிறீம் அருந்தியதேடு அங்கு ஐஸ்கிறீம் அருந்த வந்திருந்த...

வடக்கில் விஹாரைகள் அமைப்பதை விக்னேஸ்வரன் தடுக்க முடியாது: மைத்திரி

எந்த சமயமும் தீமையானவற்றை போதிப்பதில்லை. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வடக்கில் விஹாரைகளை அமைக்கக் கூடாதென தெரிவித்து வருவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார். சுகாதார மற்றும் பொருளாதார செயத்திட்டங்களை முன்னெடுக்கும் நிரோதா எனும் செயத்திட்டத்தின் அறிமுக நிகழ்வு ஹற்றன் இலங்கை திறந்த பல்கலைக்கழக கிளைக் கேட்போர்...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் விபத்து!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்று இந்தியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து இந்தியாவின் கொச்சின் நோக்கிப் புறப்பட்ட யூஎல் 167 என்ற விமானமே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் தரையிறங்கிய போது, கொச்சின் விமான தளத்தினை அண்டிய பகுதியில் நிலவிய காலநிலை காரணமாக விமானம் வழுக்கிச் சென்று அருகில் இருந்த மின்கம்பங்களில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts