Ad Widget

யாழில் ஐஸ்கிறீம் கடைக்குள் திடீரென நுளைந்த பிரதமர் ரணில் !!

யாழ்ப்பாணத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னறிவித்தல் ஏதுமின்றி திடீர் திடீர் என பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டதோடு மக்களைக் காணும்போது அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

அதேபோல நேற்று இரவு திடீரென நல்லூர்ப் பகுதியிலுள்ள றீயோ ஐஸ்கிறீம் கடைக்கு சென்ற அவர் அங்கு ஐஸ்கிறீம் அருந்தியதேடு அங்கு ஐஸ்கிறீம் அருந்த வந்திருந்த மக்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

யாழில்.அபிவிருத்தி நிலைமைகளை நேரில் ஆராய்வதற்காக யாழுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் திடீர் திடீர் என திட்டமிடப்படாத இடங்களுக்குச் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழமையாக பிரதமர் ரணில் யாழ் விஜயத்தின்போது அவர் பின்னேயே செல்லும் குழுவினர் எவரையும் காண முடிந்திருக்கவில்லை.

இதேவேளை இன்று திங்கட்கிழமை பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ள பிரமதர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சியில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் கலந்துகொள்ளவுள்ளார்.

Related Posts