Ad Widget

வட.மாகாண ஆளுநரால் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!

யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் பாடசாலைகளுக்கு மரக்கன்றுகளை வட.மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே நேற்று (வியாழக்கிழமை) வழங்கி வைத்தார்.

எதிர்வரும் ஜீன் மாதம் 5ம் திகதி தேசிய மரம் நடுகை மாதத்தினை முன்னிட்டு தினத்தை முன்னிட்டு சுமார் 4 ஆயிரம் மரக்கன்றுகளை யாழ். மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாட்டுவதற்கான ஏற்பாடுகளை ஆளுநர் றெஜினோல்ட் குரே மேற்கொண்டு வருகின்றார்.

அந்தவகையில், பாடசாலைகளுக்கான மரங்களை அந்தந்த பாடசாலைகளுக்கு நேரடியாகச் சென்று மாணவர்களிடம் ஆளுநர் கையளித்தார்.

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி, யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரி, வண்ணை நாவலர் மகாவித்தியாலயம், கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயம், யாழ். கொட்டடி நமசிவாய வித்தியாலயம், சுண்டுக்குளி மகளிர் கல்லூரி, சென்ஜோன்ஸ் கல்லூரி, சென் பற்றிக் கல்லூரி, கனகரத்தினம் மகாவித்தியாலயம், பெரியபுலம் மகாவித்தியாலயம், நல்லூர் சென். பெனடிக் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ் இந்து மகளிர் கல்லூரி, இந்து ஆரம்ப பாடசாலை, சண்முகானந்தா கல்லூரி உள்ளிட்ட 16 பாடசாலைகளுக்கு குறித்த மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

பலா, மா, மகோகனி, நெல்லி, முந்திரி, உள்ளிட்ட பயன்தரு மரங்கள் எதிர்வரும் 5ம் திகதி நாட்டிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts