- Sunday
- August 30th, 2026
முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியிலுள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானப்படை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி ஒன்றும் அறியாத பச்சை பாலகர்களை கொன்று குவித்த கொடிய நாள் இன்றாகும். இக்கொடிய தினத்தின் 12ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போது,...
அச்சுவேலி வடக்குப் பகுதியில், தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தனியார் பேருந்து அச்சுவேலி – யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் பேருந்தின் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக் குழுவினர்,...
வட மாகாண அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே வலியுறுத்தியுள்ளார். அதன் ஊடாகவே தற்போது வட மாகாண அமைச்சர்கள் சபையில் நிலவுகின்ற சிக்கலான நிலைமைக்கு இலகுவாக தீர்வு காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவின் ஊடாக பா.டெனீஸ்வரனும் அமைச்சர் என்றே...
யாழ்ப்பாணத்தை அச்சுறுத்திவரும் குள்ள மனிதர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பில் உடடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர், கலாநிதி டேனியல் தியாகராஜா தெரிவித்தார். மேலும், இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். யாழில், தற்போது குள்ள மனிதர்கள் தொடர்பிலான அச்சம்...
யாழ், குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுகள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், சுன்னாகம், மானிப்பாய், கோப்பாய், ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட, திடீர் சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். “வடக்கில் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை தடுப்பதற்கு, பொலிஸாரும் இராணுவத்தினரும்...
தமது சொந்த நிலத்தினை மீட்பதற்கு இனிமேல் யாரையும் நம்பப்போவதில்லை என கேப்பாப்பிலவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். கேப்பாப்பிலவு மக்களின் நிலமீட்புப் போராட்டம் 533 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,”எமது போராட்டம் 500 ஆவது...
யாழ் பிரதேச செயலக எல்லைக்குள் நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களால் பெண்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக, மீண்டும் அரசாங்கத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடாத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) பிரதேச செயலக கேட்போர் கூட த்தில் இடம்பெற்ற போதே, அவர்...
புத்தளம் கடற்பரப்பில் ஒதுங்கியுள்ள இந்திய மருத்துவ கழிவுபொருட்கள் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை கூறியுள்ளது. புத்தளம் கரையோர பகுதிகளான கண்டத்தீவு, சின்னப்பாடு, பெரியபாடு மற்றும் பள்ளிவத்தபாடு ஆகிய பிரதேசங்கள் உள்ளிட்ட இன்னும் பல பிரதேசங்களில் அண்மைய நாட்களாக மருத்துவ கழிவுப்பொருட்கள் கரையொதுங்கி வருகின்றன. இவை தொடர்பாக மக்கள் சந்தேகம்...
முல்லைத்தீவு நாயாறு பகுதியில் உள்ளூர் மீனவர்களுக்குச் சொந்தமான 8 வாடிகள் உட்பட மீன்பிடி உபகரணங்கள் யாவும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பெருமளவு பொலிஸாரும் இராணுவமும் குவிக்கப்பட்டுள்ளதால் பிரதேசத்தில் பதற்றம் நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தென்னிலங்கை மீனவர்கள் சிலர் முல்லைத்தீவில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அங்குள்ள மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்....
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாநாகர சபை உறுப்பினர் ஒருவர் சபையின் ஐ.தே.கட்சியின் உறுப்பினரிடம் நம்பிக்கை அடிப்படையில் பின்திகதியிடப்பட்டு பெற்றுக் கொண்ட காசோலையை பயன்படுத்தி 2 லட்சம் ரூபாவினை கையாடல் செய்ய முற்பட்டதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த உறுப்பினர் பணத்தினை மீளச் செலுத்திய நிலையில் முறைப்பாடு மீளப் பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர...
அபிவிருத்தி உத்தியோகத்தர் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு அதிக புள்ளிகளை பெற்றும், தமக்கு நியமனம் வழங்கப்படவில்லையென வவுனியா இராசேந்திரங்குளம் மற்றும் மகறம்பைகுளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சத்தியமூர்த்தி யசிதரன் மற்றும் வேணி என்ற இரு பட்டதாரிகளும் தெரிவித்துள்ளனர். கடந்த 4ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு சகல பரீட்சைகளிலும்...
எம்மை அடக்கி ஆள வேண்டும் என எண்ணுகின்ற பெரும்பான்மைச் சமூகத்தினரும் மிக விரைவில் எம்முடன் சேர்ந்து போராட வேண்டிய தேவை ஏற்படும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பால் பதனிடும் தொழிற்சாலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்...
இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பதை எதிர்க்க வேண்டாம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் இறக்குவானையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,”வடக்கு கிழக்கிலுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், குறித்த மாகாணங்களுக்கு வெளியில் சென்று...
நெடுங்கேணி- ஒலுமடு வெடுக்குநாறி மலைக்கும் அங்குள்ள ஆதி ஐயனார் ஆலயத்திற்கும் செல்லக்கூடாதென தொல்லியல் திணைக்களம் வழங்கியிருந்த உத்தரவை குறித்த திணைக்களம் நிபந்தனைகளுடன் தளர்த்தியுள்ளது. இந்த அனுமதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், வெடுக்குநாறி மலைக்கும் ஆலயத்திற்கும் செல்வதற்கும் தாம் அனுமதிப்பதாகவும், ஆனால் ஆலய புனரமைப்பு நடவடிக்கைகள் செய்வதாயின் தமது அனுமதியைப் பெறவேண்டும் என குறித்த திணைக்கள...
ரயில் ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு இன்று (திங்கட்கிழமை) முடிவுக்கு வந்துள்ளதாக ரயில் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதனால் இன்று முதல் அனைத்து ரயில் சேவைகளும் வழமைப்போன்று இயங்குமெனவும் அத்தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தொழிற்சங்கத்துக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ரயில் இயந்திர ஓட்டுநர்கள்...
இலங்கை தனியார் பேருந்து ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது. இப்பணிப்புறக்கணிப்பினை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. போக்குவரத்து அபராத தொகையை அதிகரித்தல் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. குறித்த பணிப்புறக்கணிப்பினை கடந்த...
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதிகளில் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுவது பொய் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சருக்கும், வட மாகாண பொலிஸ் அதிகாரிகளுக்குமான கலந்துரையாடல் யாழ். கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிகாரி...
முச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லை 35–70க்கும் இடைப்பட்டதாக காணப்பட வேண்டுமென போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சட்டம் 2081/44 ஆம் இலக்க விசேட வர்த்தமானி ஊடாக விலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுகொண்ட ஒருவர் குறைந்தபட்சம் இரண்டு வருடம் ஓட்டும் அனுபவத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சாரதிகளுக்கான தகைமைகளை முழுமைப்படுத்தியவர்கள், வைத்திய பரிசோதனை அறிக்கை மற்றும்...
யாழில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொதுமக்களும் தங்களின் ஆதரவினை முழுமையாக வழங்க வேண்டுமென வட.மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்ணான்டோ பொதுமக்களிடம் இன்று (சனிக்கிழமை) கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த செயற்பாட்டுக்கு மக்களும் தங்களது முழு பங்களிப்பினை வழங்குவார்களாயின் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய உதவியாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....
முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று (10) மாலை அவர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். இதன்போது ஒரு இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது....
Loading posts...
All posts loaded
No more posts
