- Saturday
- May 9th, 2026
வடமராட்சியில் பிறந்து சில மணி நேரமேயான சிசுவை வீதியில் எறிந்த கொடூர சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வடமராட்சி துன்னாலை மத்தி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில், நேற்று (வெள்ளிக்கிழமை) உரப்பை ஒன்றை நாய் கடித்து குதறிக்கொண்டிருந்ததை அவதானித்த பாதசாரிகள், உடனடியாக நெல்லியடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லியடி பொலிஸார், குறித்த உரப்பையினை சோதனையிட்டபோது, அதனுள்...
தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மீட்பு என்ற செய்தியில் உண்மையில்லை என ஆலய ஆதீன கர்த்தா அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள் அறிக்கையில்... ஓம் சக்தி அருள் தரும் அன்னை ஶ்ரீ வடபத்திரகாளி அம்பாள் ஆலய புனருத்தாரண திருப்பணி வேலைகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனள இந்த வேளையில் இன்றைய தினம் சில செய்தி...
கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் நெருக்கமான உறவுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்புகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இவ்வாறானதொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள்...
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவால் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு சிறியரக பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன், கச்சாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த சிறியரக பயணிகளை ஏற்றும் பேருந்து ரயில் கடவையை கடக்க...
எரிபொருட்களின் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய இந்த விலையேற்றம் இடம்பெறுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில், 92 ஒக்றேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 95 ஒக்றேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுப்பர் டீசல்...
ஆபத்தான வெடிபொருள் குறித்து தகவல் வழங்கவில்லை எனக்கூறி கூலித் தொழிலாளி ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், வெற்றிலை கேணி பகுதியில் நீண்ட காலமாக ஆட்களற்று இருந்த வீடொன்றின் காணியினை ஒருவர் துப்பரவு செய்துள்ளார். இது குறித்து, இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற இராணுவத்தினர் வீட்டினை சோதனையிட்டனர். இதன்போது வீட்டினுள் சந்தேகத்திற்கு இடமான...
எதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்நேற்று (வெள்ளிக்கழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், “வரும் திங்கட்கிழமை சிறுவர்களுக்கான பாடசாலைகள் ஆரம்பமென அரசு அறிவித்துள்ளது. ஆனால் அன்று தாக்குதல்கள் நடக்கலாம் என்று புலனாய்வுத்துறை...
நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலை காரணமாக பாதிக்கப்பட்ட 2 வார கால கல்வி நடவடிக்கைகளுக்கு பதிலாக வேறு நாட்களில் பாடசாலை நடத்தப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இரண்டாம் தவணைக்கான கற்றல் மற்றும் பரீட்சை செயற்பாடுகள் வழமைப் போன்று சாதாரண முறையில் இடம்பெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சின்...
கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தாலின்போது 3 அசம்பாவிதங்கள் திருகோணமலையில் பதிவாகியுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அங்கொடையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து சர்தாபுர எனும் பகுதியிலும் மூதூர் பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஆண்டான் குளம் பகுதியிலும் இனந்தெரியாத நபர்களது கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளது. மேலும் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இனந்தெரியாத நபர்களால்...
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை குறித்து திங்கட்கிழமை சாதகமான பதில் கிடைக்கபெறும் என ஜானாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலார்கள் கூட்டாக தெரிவித்ததாக மாணவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை குறித்து மாணவ பிரதிநிதிகள் ஜானதிபதியை சந்திப்பதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்புக்கு வந்திருந்தனர். எனினும் ஜனாதிபதியை...
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சோதனை நடவடிக்கைகளுக்காகப் பாதுகாப்பு படையினர் கொழும்பில் உள்ள வீடொன்றுக்கு சென்றிருந்தவேளை அந்தச் சம்பவம் இடம்பெற்றது. அவ்வேளை கதவை திறந்தவர் பாத்திமா இப்ராஹிம். தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான இலாம் இப்ராஹிமின் மனைவி- கர்ப்பிணி. பொலிஸாரைப் பார்த்ததும் அவர் வீட்டிற்குள் ஓடிவெடிகுண்டை வெடிக்க செய்தார்.அவருடன் சேர்ந்த அவரது மூன்று மகன்களும் கொல்லப்பட்டனர்....
ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்காத யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டது ஏன் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சபை அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “பயங்கரவாத மற்றும் அவசரகால சட்டத்தின்...
யாழ்ப்பாணம் தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மற்றும் வயர் சுற்று என்பன மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் பொது இவை மீட்கப்பட்டுள்ளன 9 மில்லி மகசின் ஒன்று, 5 தோட்டக்கள் மற்றும் வயர் சுற்று ஒன்று என்பனவே தாவடி பத்திரகாளி கோவில் வளாகத்தில் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்....
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு தாக்குதல் நடத்தப்போவதாக எதிர்க் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு முன்னெச்சரிக்கை விடுத்ததாக வெளிவந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செய்தியினால் தனது சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகவும் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று...
பாகிஸ்தான் அகதிகளை வடக்கில் குடியேற்றுவதானது இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் அவர்களை பாதுகாப்பாக குடியேற்றுவதே பொருத்தமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே சிவாஜிலிங்கம் இதனைக் கூறினார். அத்துடன்...
யாழ். பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் கோப்பாய் பொலிஸார் நேற்று (வியாழக்கிழமை) வாக்குமூலம் பெற்றனர். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்த வாக்குமூலம் பொலிஸாரால் பதியப்பட்டது. மருத்துவ பீட வளாகத்தில் அமைந்துள்ள சிற்றுண்டிச் சாலையில் கடந்த 3ஆம் திகதி நடத்தப்பட்ட தேடுதலில் தியாகி திலீபனின் ஒளிப்படம் ஒன்று இராணுவத்தினரால் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து...
சோதனை நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியிடுவதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ளுமாறு அரசாங்க தகவல் திணைக்களம் கோரிக்கை விடுத்தது. அரசாங்க தகவல் திணைக்களதில் இன்று பத்திரிகையாசிரியர்களுக்கும் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர்க்குமிடையில் விசேட கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு அறிவுறுத்தப்பட்டது. அரசாங்க தகலவ் திணைக்கள பணிப்பாளர் நாலக்க கலுவெவ பாதுகாப்பு பிரிவினர் தற்போது தேசிய பாதுகாப்பினை...
உயிா்த்த ஞாயிறு தினத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கொலைவெறி தாக்குதலில் சுமாா் 200 குழந்தைகள் தமது குடும்ப உறுப்பினா்களை இழந்துள்ளனா். என செஞ்சிலுவை சங்கம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலினால், 200 சிறுவர்கள் தங்களின் குடும்பத்தினரை இழந்துள்ளனர். மேலும் சிலர், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் பொருளாதார...
வவுனியா கடைவீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வர்த்தக நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. எனினும் தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்களின் முயற்சியினால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்து இடம்பெற்ற...
யாழ்ப்பாணம், மன்னார் உள்பட 10 மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை வெப்பநிலை கடுமையாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களின் வெப்பிநிலை 33 தொடக்கம் 36 செல்சியஸாகப் பதிவாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதிகூடுதலாக திருகோணமலை மாவட்டத்தில் 36 செல்சியஸ், மட்டக்களப்பில் 35 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். யாழ்ப்பாணம் 33 செல்லியஸ்சும்...
Loading posts...
All posts loaded
No more posts
