வவுனியா கடைவீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வர்த்தக நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. எனினும் தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்களின் முயற்சியினால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் தீ விபத்து இடம்பெற்ற வர்த்தக நிலையத்திலிருந்து ட்ரோன் கமரா ஒன்று பாதுகாப்பு தரப்பினரால் மீட்கபட்டிருந்ததுடன் குறித்த கமரா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மின் ஒழுக்கின் காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.