அமைச்சர்கள் தெரிவில் கூட்டமைப்புக்குள் தொடர்ந்தும் இழுபறி!

வடமாகாணசபைக்கான அமைச்சர்கள் தெரிவில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் தொடர்ந்தும் இழுபறி நிலை நிலவுவதனால் அமைச்சர்கள் தெரிவிற்கான கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை மாலை 6 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (more…)

பொருண்மிய சவால்களை எதிர்கொள்ளுமா வடமாகாண சபை?- கொழும்பு பல்கலை. விரிவுரையாளர் விளக்கம்!

வடமாகாண சபை நிர்வாகமானது அரசியலுடன் பொருளாதாரத்தினையும் இணைத்து தமிழ் மக்களுக்கு ஒரு உடனடி நிவாரணத்தினை வழங்குவது சவாலான விடயம். (more…)
Ad Widget

ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு: ஜோசப் ஸ்ராலின்

யாழ்.கல்வி வலய ஆசிரியர்களை இடமாற்ற சபைக்குத் தெரியாமல் இடமாற்றம் செய்யப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

புலிகளின் தடயங்கள் இனியும் தேவையில்லை: ருவான் வணிகசூரிய

தமிழீழ விடுதலைப்புலிகளின் தடயங்களை இன்னும் வைத்துகொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அதனால் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த நிலக்கீழ் பதுங்கு குழி தகர்க்கப்பட்டது என்று இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். (more…)

விக்னேஸ்வரன் 7ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம்!

வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 7ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். (more…)

மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி தற்காலிகமாக பணி நீக்கம்?

மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி மல்கம் பேட்டை பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

இலங்கையில் அடுத்த வருடம் முதல் சர்வதேச தரத்திலான கடவுச்சீட்டுக்கள்

இலங்கை கடவுச்சீட்டை சர்வதேச தரத்திற்கு அமைவான புகைப்படத்துடன் அடுத்த வருடம் முதல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் டப்ளியூ.ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார். (more…)

கூட்டமைப்பில் முஸ்லிம்கள், இன ஒற்றுமைக்கான வழி; ரைம்ஸ் ஒவ் இந்தியா வரவேற்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேலதிக ஆசனம் ஒன்று மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை, இந்தியாவின் தி ரைம்ஸ் ஒவ் இந்தியா நாளிதழ் வரவேற்றுள்ளது. (more…)

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டினை முன்னிட்டு வாகன பவனி பருத்தித்துறையில் ஆரம்பமானது

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டினை முன்னிட்டு, இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சு என்பவற்றின் அனுசரனையுடன் எம்.ரி.வி. மற்றும் எம்.பி.சி வலையமைப்பு நிறுவனம் என்பன இணைந்து வாகன பவனி ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தது. (more…)

யாழில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

யாழ். மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது. (more…)

ஈ.பி.டி.பி.யில் இணைய தயாரில்லை

புதிய அரசியற்கட்சி ஒன்றை அரம்பிப்பது தொடர்பில் ஆலோசித்து வருகின்றேன் என்று தெரிவித்த யாழ். மாநகர சபை சுகாதாரக் குழுத்தலைவர் சுதர்சிங் விஜயகாந்,ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் இணைவதற்கு தான் தயாரில்லை என்றும் தெரிவித்துள்ளார். (more…)

120 குடும்பங்களுக்கு வீட்டுக் கடனுதவி

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ். மாவட்ட அலுவலகத்தினால் 120 குடும்பங்களுக்கு வீட்டுக் கடன் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கு அமைச்சர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

வடக்கு மாகாண சபைக்கான அமைச்சர்களை நியமிப்பதில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இடையே இழுபறி நிலை நீடித்து வருகிறது. (more…)

கூட்டமைப்பின் நேற்றைய கூட்டமும் முடிவின்றி முடிந்தது

வட மாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் நேற்று இரவு கொழும்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டத்தில் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. (more…)

தற்காலிக ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

தற்காலிக ஊழியர்களின் நிரந்தர நியமனம் முன்னுரிமை அடிப்படையில் பெற்றுத் தரப்படுமென உறுதியளித்ததையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. (more…)

ரோந்து சென்ற பொலிஸார் மீது தாக்குதல்!

ஆணைக்கோட்டை பகுதியில் ரோந்து சென்ற பொலிஸார் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். (more…)

முன்னாள் ஆணையாளர்கள் தவறிழைத்துள்ளனர்: யாழ்.மாநகர முதல்வர்

யாழ். மாநகர சபையின் தற்காலிக ஊழியர்களின் நிரந்தர நியமனத்தில் முன்னாள் மாநகர ஆணையாளர்கள் தவறிழைத்துள்ளதாக யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

விஜயகாந் கொள்ளைக்கார குழுத்தலைவர் – யாழ். முதல்வர்

தற்காலிக ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு தலைமை தாங்கி கொண்டிருக்கும் சுதர்சிங் விஜயகாந் கொள்ளைக்கார குழுத் தலைவர் என்பதுடன் அவர் தற்காலிக ஊழியர்களிடம் பண மோசடி செய்துள்ளார்' என யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார். (more…)

யாழில் ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல்!

தினக்குரல் பத்திரிகையின் யாழ். பிராந்திய பதிப்பின் செய்தியாளர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக யாழில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் முறையிடப்பட்டிருக்கின்றது. (more…)

முதல்வர் செய்த முதல் பணி

வடக்கு மாகாண முதலமைச்சராக நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்ட க.வி.விக்னேஸ்வரன் தனது முதல் பணியாக முதியோர் தினமான நேற்று சுழிபுரம் வழக்கம்பரை சிவபூமி முதியோர் இல்லத்துக்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடினார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts