Ad Widget

ராமநாதன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்!

ramanathanவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜன் தந்தையான ராமநாதன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர் சாவக்கச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஓகஸ்ட் 30 ஆம் திகதி ஆஜர்படுத்திய போது 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சாவக்கச்சேரி நீதவான் லெனின் குமார் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே யாழ்.மேல் நீதிமன்றத்தினால் அவருக்கு இன்று செவ்வாய்க்கிழமை பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த பிணை மனு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது ஐந்து இலட்சம் ரூபா ரொக்க பிணையிலும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

Related Posts