Ad Widget

எழுதுமட்டுவாழில் த.தே.கூ வேட்பாளர் வாகனம் மீது தாக்குதல்!

எழுதுமட்டுவாழ் மருதங்குளம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் tnaதேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவருடைய வாகனம் சற்று முன்னர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இன்றைய தினம் காலையில் இருந்து தென்மராட்சிப் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை சீருடையினர் பின்தொடர்ந்துள்ளதுடன் அச்சுறுத்தியும் வந்ததாகவும்.

எனினும் எழுதுமட்டுவாழ் பகுதியில் பிரச்சாரதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளை மருதங்குளம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் வைத்து சீருடையினர் ஆதரவாளர்களை மிரட்டியுள்ளனர் எனவும்.

சம்பவத்தையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் சஜந்தன் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு நின்ற இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்களை அங்கிருந்து செல்லுமாறும் கூறியிருந்தார்.

எனினும் தாம் வழமையான ரோந்து பணியில் ஈடுபடுவதாக கூறிவிட்டு சம்பவ இடத்திலேயே நின்றுள்ளனர். பின்னர் கொடிகாமம் பொலிஸாரிடம் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் அவ்விடத்திலேயே நின்ற இராணுவத்தினர் குறித்த வேட்பாளரின் வாகனத்தை தாக்கிவிட்டு அருகில் இருந்த இராணுவ முகாமுக்குள் தப்பிச் சென்றதாகவும்

தற்போது குறித்த பிரதேசத்தில் பதற்றம் நிலவுவதாகவும் அறியமுடிகின்றது.

Related Posts