‘தமிழ் பேசும் மக்களின் இருப்பை உறுதிப்படுத்த வாக்களிப்போம்’ – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

இலங்கைத் தீவுக்குள் அச்சுறுத்தல் அற்ற வாழ்க்கையை ஒவ்வொரு சிறுபான்மையினமும் அனுபவிக்கின்றதா என்பதனை நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தல்தான் உலகிற்கு உணர்த்தப் போகின்றதாக என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. (more…)

வடக்கு தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த தெற்கின் எதிர்ப்புக்கு கூட்டமைப்பு பூரண விளக்கம் (முழு வடிவம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தெற்கில் பலதரப்பட்ட கருத்துக்கள், குற்றச்சாட்டுக்கள், ஆதரவுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. (more…)
Ad Widget

வடக்கு தேர்தலை நிறுத்தும்படி விண்ணப்பம்?

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தலை நிறுத்தும்படி கேட்டு விசேட விண்ணப்பமொன்று நேற்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)

சிறுபான்மை, பெரும்பான்மை என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் ஒரே இனமாக திகழ வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நோக்கம் – டளஸ் அழகப்பெரும

நடைபெறவுள்ள தேர்தலில் வன்முறை மூலம் வெற்றி அடைய வேண்டிய தேவை எமக்கில்லை. தேர்தலில் நியாயமான முறையில் கிடைக்கும் வெற்றிக்கே மதிப்பு இருக்கின்றது என இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். (more…)

நெனசல அறிவகம் திறப்பு

யாழ். அச்சுவேலியில் புதிதாக அமைக்கப்பட்ட நெசனல அறிவகம் இன்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தொடர்பாடல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவினால் இந்த கிளை திறந்துவைக்கப்பட்டது. (more…)

தபால் மூல வாக்காளர்களுக்கு 18ம் திகதியும் சந்தர்ப்பம்

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க தவறியோருக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. (more…)

கூட்டமைப்பின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது: ஈபிடிபி

வடமராட்சி கிழக்கில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் புகுந்து குழப்பம் விளைவித்ததாக அக்கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது' என்று ஈழமக்கள் ஜனநாயக் கட்சி தெரிவித்துள்ளது. (more…)

தேர்தல் பிரசாரங்கள் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு!

மூன்று மாகாண சபை தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் 18 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெறும் என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தேர்தல்கள் சட்டத்திட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தனார். (more…)

கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்திற்கு சென்ற பொதுமக்கள் மீது; இராணுவம் தடிகள் பொல்லுகளால் தாக்குதல்!

கொல்லங்கலட்டியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு சென்ற பொதுமக்களை இராணுவம் தடிகள், பொல்லுகளால் அடித்து விரட்டியுள்ளனர். (more…)

இன்னும் அதிக இராணுவத்தினர் வடக்கில் பணிபுரிய வேண்டும்; ஹத்துருசிங்க கருத்து

புனர்வாழ்வு பெற்றுக் கொள்ளாமல் மக்களோடு மக்களாக வாழும் 4 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர்ச்சிகரமான அரசியல் நடவடிக்கை மூலம் உசுப்பேற்றி வருகிறது. (more…)

சர்வதேச கண்காணிப்பாளர்கள் இன்று பணி தொடங்குவர்

வடக்கு, வடமேல் மாகாண மற்றும் மத்திய மாகாண சபைகளையொட்டி இலங்கை வந்திருக்கும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று முதல் வடக்கில் தமது தேர்தல் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. (more…)

சமஷ்டி பிரிவினையல்ல; விக்னேஸ்வரன்

சமஷ்டி என்பது பிரிவினையல்ல என்பதை சட்டம் படித்த ஜனாதிபதிக்கு தெரிந்திருக்க வேண்டுமென்று முன்னாள் நீதியரசரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

ஏற்கமுடியாத தீர்வினை திணிக்க அனுமதியோம்; சம்பந்தன்

தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்தவொரு அரசியல் தீர்வையும் இலங்கை அரசு எம் மீது திணிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் இவ்வாறு திட்டவட்டமாகத் தெரி வித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். (more…)

TNA முக்கியஸ்தர் சிலர் அரசுடன் இணைவு!

அடுத்த புதுவருடத்துக்கு யாழ்தேவியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மீண்டும் உங்களைச் சந்திப்பேனென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ் நகரில் நேற்று மாலை தெரிவித்தார். (more…)

அடுத்த வருடம் காங்கேசன்துறை வரையில் யாழ்.தேவி ரயில் சேவையை கொண்டு வருவோம் – யாழில் ஜனாதிபதி

“நான் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்திற்கு யாழ்.தேவியில் தான் வருவேன்” இலங்கை ஜனநாயக சோசலிசகுடியரசின் அதிமேன்மைதங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

சுன்னாகம் மின்மாற்று செயற்திட்டத்தை ஜனாதிபதி தொடக்கி வைத்தார்.

கிளிநொச்சி - சுன்னாகம் மின்மாற்று செயற்திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். (more…)

விடுதலைப் புலியின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது: விக்னேஸ்வரனுக்கு நாம் தமிழர் கட்சி பதில்

இலங்கையில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி நடக்கவிருக்கும் வடமாகாணசபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் சி வி விக்னேஸ்வரன் தி ஹிந்து பத்திரிக்கைக்கு பேட்டியளித்திருந்தார். (more…)

யாழில் முதலாவது சமிக்ஞை விளக்கு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியையும் ஆஸ்பத்திரி வீதியினையும் இணைக்கும் முத்திரைச் சந்திப் பகுதியிலே இந்த முதலாவது வீதிச்சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. (more…)

தமிழ்க் கூட்டமைப்பினரின் அலுவலகம் மீது தாக்குதல், ஆவரங்காலில் வியாழன் இரவு சம்பவம்

ஆவரங்காலில் செயற்பட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு விசமிகளால் சேதமாக்கப்பட்டதுடன் அரச தரப்பு வேட்பாளர்களின் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

தனிநாட்டுக் கோரிக்கை, மாகாணசபையை இல்லாதொழிக்கும்: விதாரண

தனிநாட்டினை பெறுவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் முயற்சிகளின் மூலம், வடமாகாண சபை தேர்தலை ஒத்தி வைப்பது மட்டுமல்ல, மாகாண சபைகளை இல்லாது ஒழிப்பதற்காக நடவடிக்கைகளும் இருக்கின்றன' என்று சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts