- Sunday
- May 5th, 2024
அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பிலான படங்கள் இணையத்தளங்களில் வெளிவந்துள்ளது. இருப்பினும் எம்மால் இவை உறுதிப்படுத்த முடியவில்லை (more…)
நெடுந்தீவு பிரதேச சபை தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. (more…)
அழிக்கப்பட்ட எமது இளைஞர்களின் ஆத்மாக்கள் கூட அரசுக்குப் பீதியை ஏற்படுத்தும். இறந்தவர்கள் பேசமாட்டார்கள் என்பது முதுமொழி. இலங்கையில் இறந்தவர்கள் பேசிவிடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டு பீதியை ஏற்படுத்துகின்றன என முதலமைச் விக்கினேஸ்வரன் தெரிவித்தார் . (more…)
சாவகச்சேரி பிரதேச சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் சிறீஸ்கந்தராசா ஸ்ரீரஞ்சனின் மீசாலையிலுள்ள இல்லத்தின் மீது இன்று அதிகாலை 1.30 அளவில் ஆயுதந்தாங்கிய இனந்தெரியாத குழு ஒன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)
மாவீரர் வாரத்தில் மரங்களை நாட்டினால் அடுத்த மாவீரர் தினத்தில் உமது நினைவாக மரம் நாட்டவேண்டிவரும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு தொலைபேசி மூலம் அநாமதேய கொலை அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்ட போதும் நேற்று (26-11-2013) அவர் மன்னாரில் மரங்களை நாட்டினார். (more…)
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் ( வயது 47) அவரது வீட்டிலிருந்து சடலமாக நேற்றயதினம் மீட்கப்பட்டுள்ளார். (more…)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பெருமைப்படுத்தியும் அதீதமாக புகழ்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் நாடாளுமன்றில் ஓர் அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றினார். (more…)
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அமிர்தலிங்கம் இராசகுமாரனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். (more…)
கடத்தப்பட்டு காணாமற்போனதாக கூறப்படும் லலித் மற்றும் குகன் தொடர்பான வழக்கு விசாரணையினை எதிர்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதிக்கு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் ஒத்திவைத்தார். (more…)
காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் உள்ள ரயில் பெட்டிகளை பழைய இரும்பு விலைக்கு விற்க அரசாங்கம் தயாராகி வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். (more…)
நாட்டில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விமான நிலையங்கள் அமைப்பு, துறைமுகங்கள் விரிவாக்கம்,வீதி அபிவிருத்தி, சுற்றுலா விடுதிகள் அமைப்பு என எவையும் போரினால் சிதைக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். (more…)
கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் சு.வியாகேசுவின் வீடு இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டமை தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணங்கிச் செயற்படாமல் மாகாண சபை விடயங்களில் ஆளுநர் தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டு வருவதால் அவருக்கும் மாகாண சபைக்கும் இடையேயான முறுகல் நிலை நேற்று வெளிப்படையாக வெடித்தது. (more…)
இலங்கையின் நிலைமைகள் பற்றி பேசுவதற்காக பிரித்தானியாவிற்கு வருமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (more…)
ஜனாதிபதியின் பதாகைகளை கிழித்ததாக குற்றம் சாட்டப்பட்டு 4 இளைஞர்கள் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். (more…)
இன்று கரவெட்டி பிரதேச சபையில் நாட்டிற்காய் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூறும் முகமாக அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் பிரதேச சபை உறுப்பினர்கள் . (more…)
Loading posts...
All posts loaded
No more posts