Ad Widget

பிரதேச சபைகளின் நிதி செலவு செய்யப்படவில்லை

CVK-Sivaganamயாழ்.மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பெரும்பகுதி செலவு செய்யப்படாத நிலையில் காணப்படுவதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் உடுவில் பிரதேச சபையில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இத்தகைய நிலைமை பிரதேச சபைகளில் காணப்படக்கூடாது. கிடைத்த நிதியை நல்ல முறையில் உரியவாறு செலவுசெய்ய வேண்டும்.

இதன்படி, வலி.மேற்கு (சங்கானை) பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 43 மில்லியன் ரூபா நிதி இன்னமும் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது.

இதேபோன்று வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 79 மில்லியன் ரூபா நிதி செலவு செய்யப்படாமல் இருக்கின்றது.

கோப்பாய் பிரதேச சபை தொங்கு நிலையில் காணப்படுகின்றமையிலேயே இவ்வளவு நிதி பயன்படுத்தப்படாமல் இருக்கின்றது.

இத்தகைய நிலைமையே ஏனைய பிரதேச சபைகளிலும் காணப்படுகின்றன. இதனால் தவிசாளர், உறுப்பினர்கள் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும்’ என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

Related Posts