- Saturday
- January 17th, 2026
இரத்தினபுரியில், பொலிஸ் சார்ஜன் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான பெண், தன் மீதான தாக்குதலுக்கு எதிராக 50 கோடி ரூபாய் அபராதம் கேட்டு இன்று வியாழக்கிழமை (02), உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். (more…)
தமிழக முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளமையால் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தனது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது போயுள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். (more…)
வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன் சகிதம் மன்னாரில் மக்கள் குறை கேட்கும் சந்திப்பு ஒன்றை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (30.09.2014) மேற்கொண்டுள்ளார். (more…)
சர்வதேச முதியோர் தினத்தையொட்டி அனைத்துலக மட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் முதியோரைப் பராமரிப்பது தொடர்பில் தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை சிறப்பான இடத்தில் இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கின்றது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 96 நாடுகளில் இலங்கை 43 ஆவது இடத்தில் உள்ளது. (more…)
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தைப் புதுப்பிப்பதற்காக அரசாங்கம் 8 கோடி 68 லட்சத்து 80 ஆயிரத்து 36 ரூபாவை ஒதுக்கியுள்ளது. (more…)
"மஹிந்த அரசின் அறிவிப்புக்கமைய தேசியத் தேர்தலொன்று நடத்தப்பட்டால், இந்த அரசை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஒரே அணியில் களமிறங்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளது." (more…)
முதியவர்கள் நன்மைகளை அனுபவிக்கும் பொருட்டு வட மாகாணம் தழுவிய ரீதியில் முதியோர் கழகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றின் மூலம் முதியவர்கள் பெரும் நன்மைகளை அடைய முடியும் - இவ்வாறு தெரிவித்திருக்கிறார் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி. (more…)
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் 10 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் அமைக்கப்படவுள்ள பெண்களுக்கான பாதுகாப்பு நிலையததுக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை (01) அச்சுவேலியில் இடம்பெற்றது. (more…)
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அது குறித்து நாங்கள் விமர்சிக்க மாட்டோம் என்று இலங்கை அமைச்சர் கெஹலியா ராம்புக்வெல்லா தெரிவித்துள்ளார். (more…)
காரைநகர் பேருந்து நிலையத்தில் தனியார் ஒருவரால் பொருத்தப்பட்டிருந்த 6 சி.சி.ரி கமராக்களை புதன்கிழமை (01) அகற்றியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)
பிரச்சினைகள், கோரிக்கைகளுக்கு ஒரே இரவில் தீர்வுகளை காணமுடியாது. ஆனாலும் தீர்வு காண முடியுமென்ற நம்பிக்கை இருக்கிறது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)
இரணைமடு குளத்தில் மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டதாகவும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளியான செய்திகளில் எதுவித உண்மைகளும் இல்லை என இராணுவ பேச்சாளரும் (more…)
வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் இன்னும் 80 சதுர கிலோமீற்றர் அளவிலான பகுதிகளில் கண்ணிவெடிகள் உள்ளன என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். (more…)
யாழ்.போதனா வைத்திய சாலையில் சிறுவர் துஷ்பிரயோகம் சம்மந்தமாக விழிப்புணர்வு செயற்பாட்டிற்கு வைத்தியசாலை நிர்வாகம் தடைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
அக்டோபர் 5ஆம் திகதி கொண்டாடப்படவிருந்த புனித ஹஜ்ஜுப்பெருநாளுக்காக வழங்கப்படும் அரசாங்க விடுமுறை தினத்தை அக்.6ஆம் திகதிக்கு வழங்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. (more…)
நவாலி பகுதியில் வீட்டிலிருந்த மூதாட்டியை தாக்கிவிட்டு அவரிடமிருந்து 5 பவுண் நகை மற்றும் 14 ஆயிரம் ரூபாய் பணம் என்பன செவ்வாய்க்கிழமை(30) இரவு திருடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார், புதன்கிழமை (01) தெரிவித்தனர். (more…)
இலங்கை அரசுடன் தாங்கள் பேச்சு நடத்துவதானால் இந்தியா விசேட பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்திருக்கிறார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். (more…)
மீன்பிடி அமைச்சின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மீன்சந்தை ஒன்று மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் இன்று முற்பகல் 10.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)
ஜனாதிபதி தான்தோன்றிதனமாக எல்லா இடங்களிலும் உள்ள காணிகளை எடுத்து மக்களுக்கு கொடுக்கமுடியும் என்றால் எமது காணிகளை தெற்கில் இருக்கும் ஒருவருக்கு வழங்கினாலும் நாங்கள் எதுவுமே கேட்க முடியாத நிலை ஏற்படும். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
