Ad Widget

சிறுவர் துஸ்பிரயோக வழிப்புணர்வு செயற்பாட்டிற்கு யாழ் வைத்திய சாலை நிர்வாகம் தடை!

யாழ்.போதனா வைத்திய சாலையில் சிறுவர் துஷ்பிரயோகம் சம்மந்தமாக விழிப்புணர்வு செயற்பாட்டிற்கு வைத்தியசாலை நிர்வாகம் தடைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.மாவட்ட பெண்கள் சமாசத்தினால் சிறுவர் தினத்தினை முன்னிட்டு சிறுவர் துஷ்பிரயோகம் சம்மந்தமாக விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்தது.

நேற்றய தினம் ஊடகங்களில் இதுவரை காலமும் வந்த சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான செய்திகளை சேகரித்து அதனை உருவ பொம்மை ஒன்றில் ஒட்டி யாழ்.போதனா வைத்திய சாலையில் வாசலில் காட்சிப்படுத்தப்பட்டது.

அதில் இராணுவம் மற்றும் கடற்டையினர் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமை தொடர்பான செய்திகள் காணப்பட்டன. இதற்கு வைத்தியசாலை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது.

அதாவது இராணுவம் மற்றும் கடற்டையினர் தொடர்பான செய்தியினால் அரசியல் பிரச்சினைகள் ஏற்படும் எனவே அதனை உடனடியாக அகற்றுமாறு வைத்திய நிர்வாகம் அறிவித்ததாகவும் இதனால் குறித்த உருவம் பொம்மையில் இருந்த செய்திகள் அகற்றப்பட்டதாகவும் தெரியவருகிறது.

Related Posts