- Sunday
- June 8th, 2025

கிளிநொச்சி, வன்னேரிக்குளம் சோலை பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் வகையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. அந்த காட்டுப்பகுதிக்குச் சென்றவர்கள் சிலர் சடலத்தை கண்டு அக்கராயன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், பொதுமக்களால் சந்தேகத்தின் பெயரில் பிடிக்கப்பட்ட இருவரையும் கைதுசெய்தனர்....

சரித்திர ரீதியாக தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில், தமிழ் மக்களுக்குப் போதிய சுயாட்சி வேண்டும் என்ற உண்மையான கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கள மக்கள் மத்தியில் முன்வைப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில்...

மலேசியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மலேசிய விமான நிறுவனத்துக்கு சொந்தமான MH 179 என்ற விமானம் அவசரமாக தரையிறங்கியது மர்மமாகவே இருக்கின்றது என்று செய்தி வெளியாகியுள்ளன. விமானம் புறப்பட்டு சில மணி நேரங்களில் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு விமானம் திரும்பியுள்ளது. மலேசியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இந்த விமானம் மலாக்கா நீரிணைக்கு மேலாக இரண்டு மணிநேரம்...

மானிப்பாய் செல்லமுத்து மைதானத்தில் கடந்தமாதம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துக்கு திட்டம் தீட்டிக் கொடுத்தார் என்ற சந்தேகத்தில் தெல்லிப்பழை அளவெட்டி பகுதியை சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை வெள்ளிக்கிழமை (08) கைது செய்ததாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படிவாள் வெட்டுசம்பவத்துடன் தொடர்புடைய அறுவர் கடந்தமாதம் 27ஆம் திகதி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே கைதானவர்களிடம்...

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் ( எல்ரீரீஈ) இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான நாகமணி ஜெகதீஸ்வரன் (வயது 34) என்பவரை இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். 2003ஆம் ஆண்டு ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு அங்கத்தவர்களை மட்டக்களப்பு – ஆரையம்பதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கைக்குண்டுகளையும் வீசி ஆட்கொலை புரிந்தார், எட்டுப்பேரை காயப்படுத்தினார்...

பருத்தித்துறை 1ஆம் கட்டை பகுதியில் சனிக்கிழமை (09) நண்பகல் வடமாகாண சபைக்குச் சொந்தமான பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிந்த ஒருவர் பலியாகியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ், முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கனகசபாபதி அருளானந்தம் (வயது 61) என்பவரை மோதியுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர் திடீரென திருப்ப...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஏற்கனவே 3 தடவைகளுக்கு மேல் அவரைக் கொலைசெய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் அக்கட்சித் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்தார். இதேவேளை, பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தபோதிலும் எதிர்காலத்திலும் ஜனாதிபதியை கொல்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படலாம் என அச்சம் வெளியிட்டார். இது...

வலி.மேற்கு பிரதேசத்திலுள்ள பிரான்பற்று, காளிஅம்மன் ஆலய வருடாந்த வேள்வி இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதன்போது சுகாதார விதிமுறைகள், சட்டதிட்டங்களுக்கு அமைவாக சம்பந்தப்பட்டோர் முன்னிலையில் ஆலய வீதியில் இதற்கென அமைக்கப்பட்ட கொல்களத்தில் 113 ஆடுகள் பலியிடப்பட்டன. சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கடாக்களை வெட்டும் மூவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதேபோன்று வெட்டப்படும் கடாக்களும்...

பிரித்தானிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள டேவிட் கமெரோனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன், பிரித்தானியாவுடன நெருக்கமான உறவுகளை வைத்துகொண்டு ஒத்துழைப்புடன் முன்னோக்கி நகர்வதற்கு இலங்கை எதிர்பார்த்திருக்கின்றது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியேறுவதற்கு 993 குடும்பங்கள் பதிவு செய்துள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். மீள் குடியேறியுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றது. அந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...

வலிகாமம் வடக்கிலுள்ள பொதுமக்களின் எஞ்சிய காணிகள் விடுவிப்பது தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சு, மீள்குடியேற்றம் தொடர்பான குழுவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். மீள்குடியேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்டச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்றது....

"திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதி முதலீட்டு வலயத்துக்காக முன்னைய அரசால் சுவீகரிக்கப்பட்டது. தற்போதைய அரசு மக்களிடமே சம்பூரை மீளக் கையளித்தமையை நாம் வரவேற்கின்றோம். இது தமிழ் மக்களின் மண் மீட்புப் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "தாம் பரம்பரை...

யாழ்ப்பாணத்தில் கழிவு எண்ணெயால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான குடிதண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிதண்ணீரை விநியோகிப்பதற்காக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவையை கடந்த சில மாதங்களாக பிரதேச சபைகள் செலுத்தாமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் சுன்னாகம் மற்றும் இதனை பிரதேசங்களில் அண்டிய பகுதிகளின் கிணறுகளில் கழிவு எண்ணெய் சேர்ந்தது....

வடமாகாண தனியார் தூர பேருந்து சேவைகள் சங்கத்தினருக்கும் வட பிராந்திய போக்குவரத்து சபையினருக்கும் இடையில் ஏற்படுகின்ற நேர அட்டவணைப் பிரச்சனையை 60:40 என்ற ரீதியில் தீர்க்க 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனை தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துத்துறை அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் மற்றும் மாவட்ட அரச அதிபர்...

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல. கணேசன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்துடன் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது வடக்கு மாகாணத்தின் பொருளாதார கட்டுமானங்களை மேம்படுத்தல், போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் மற்றும் பொதுமக்களுக்கு வாழ்வாதார உதவிகளை மேம்படுத்தல் உள்ளிட விடயங்களுக்கு இந்திய அரசாங்கம் வடக்கு...

உலக சந்ததையில் மசகு எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டாலும் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வாழ்க்கை செலவு தொடர்பாக குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

யாழ். பருத்தித்துறைப் பகுதியில் சுமார் 19 கிலோ எடையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர். சுப்பர்மடம் கடற்கரைப் பகுதியில் பாரியளவு கஞ்சா கடத்தல் இடம்பெறவுள்ளதாக தமக்கு கிடைத்த தகவலை அடுத்து வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் உள்ளடங்கிய...

வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சால் வலசைப் பறவைகள் பற்றி மாணவர்களுக்கு அறிவூட்டும் விதமாக கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பில், சர்வதேச ரீதியாக ஆண்டுதோறும் மே மாதத்தின் இரண்டாவது வார இறுதி நாட்களில் உலக வலசைப் பறவைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி...

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊழல் மூலம் சம்பாதித்த 18 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருப்பதாக இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வியாழனன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதை கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் பெயரில் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பாக இலங்கை அரசு விசாரணையொன்றை...

புத்தூர் சுன்னாகம் வீதியில் வியாழக்கிழமை (07) இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி,டி.ஜீ.தனுஸ்க பிரசன்னா தெரிவித்தார். அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த தங்கராசா ஸ்ரீகுமார் (வயது 23), ஆவரங்கால் மேற்கை சேர்ந்த...

All posts loaded
No more posts