- Monday
- June 23rd, 2025

ஓகஸ்ட் 17ம் திகதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு ஜூலை 6ம் திகதி தொடக்கம் 15ம் திகதிவரை கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலின் பின்னரான புதிய பாராளுமன்றம் செப்டெம்பர் 1ம் திகதி கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்நாட்டுப் போரினாலும் இன வன்முறைகளினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை துரிதமாக வழங்க தற்போதைய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இழப்பீடு வழங்கப்படாத நிலையில் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சின் நிர்வாகத்திலுள்ள புனர்வாழ்வு அதிகாரசபையில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் ஆண்டுக்கணக்கில் தேங்கிக் கிடப்பதாக கூறப்படுகின்றது. புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சு எடுத்துள்ள புதிய தீர்மானத்தின்படி அந்தக் கோப்புகளை மீளாய்வு...

முல்லைத்தீவு விநாயகபுரத்தில் 22.7 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் நேற்று வியாழக்கிழமை (25.06.2015) திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் திறந்து வைத்து, அதனை இத்திட்டத்தின் பயனாளிகளான விநாயகபுரம் விவசாயிகளிடம் கையளித்துள்ளார். போரினால் இடம்பெயர்ந்த விநாயகபுரம் மக்கள் மீளக்குடியேறியதன் பின்னர் நீர்ப்பாசன வசதிகள்...

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் மூன்று நாள் பயணமாக நேற்று இலங்கை வந்தடைந்தார். மின்வலு எரிசக்தி அமைச்சரின் அழைப்பின் பேரில் இலங்கை வந்த அவரை அமைச்சர் சம்பிக்க ரணவக்க விமான நிலையத்தில் வரவேற்றார். இந்த பயணத்தின்போது இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரையும்...

கோப்பாய் கொலை வழக்கில் பிணையில் சென்ற முதலாவது எதிரியும் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினாராம்!
கோப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை வழக்கொன்றில் பிரதான எதிரியாகக் குற்றம் சுமத்தப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர், அண்மையில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் மீதான தாக்குதலில் எதிரியாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதையடுத்து, அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை ரத்துச் செய்வதற்கு மேல் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு கோப்பாய் பிரதேசத்தில் இரத்தினம்...

முல்லைத்தீவு விசுவமடு ஏ-35 வீதியில் வெள்ளிக்கிழமை (26) காலை துவிச்சக்கரவண்டியில் சென்ற வயோதிபரை இராணுவ ஜீப் வாகனம் மோதியதில் படுகாயமடைந்த முதியவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவு விசுவமடுவைச் சேர்ந்த செல்லையா பரராஜசேகரம் (வயது 70) என்பவரே படுகாயமடைந்தார். புதுக்குடியிருப்பிலிருந்து விசுவமடு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம் 12ஆம் கட்டையை...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சபாநாயகரின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இருவருக்கும் இடையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்திப்பு இடம்பெற்றதாக வெளியான செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இணையவழிக் குற்றங்களில் ஈடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். சமூக, கலாசார சீரழிவுகளை ஏற்படுத்தும் இணையத்தளங்களைக் கட்டுப்படுத்துவதுடன், சமூக, கலாசார சீரழிவுகளுக்கு இடம் கொடுக்கும் நெற்கபே தடை செய்யப்பட்டு உடனடியாக இழுத்து மூடப்பட வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். சைபர் குற்றச் சட்டம் உடனடியாக யாழில் அமுல் படுத்தப்பட்டு,...

இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு யாழ். போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னாரைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார். இதேவேளை, இந்நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 9 சிறுவர்கள், 6 கர்ப்பிணிகள் உட்பட 20 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா தெரிவித்தார். மேலும்...

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (U.N.D.P) industrial Service Bureau (ISB) உடன் இணைந்து யாழ் மாவட்ட இளையோருக்கான முயற்சியாண்மை நிகழ்ச்சித்திட்டம் ஒன்று நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. இளையோர் எதிர்கொள்ளும் வேலைவாய்ப்பின்மையை குறைக்கும் நோக்கிலும் அவர்கள் சார்ந்த சுயதொழிலை ஆரம்பிக்க ஊக்குவிக்கும் நோக்கிலும் மேற்படி செயற்றிட்டம் நாடுமுழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனடிப்படையில் யாழ் மாவட்டத்திலுள்ள வேலனை, கரவெட்டி, பருத்தித்துறை,...

கிளிநொச்சி, உருத்திரபுரம் எள்ளுக்காடு பிரதேசத்தில் காணாமல் போன மூன்று வயது குழந்தை உதயகுமார் யர்சிகா பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில் அவரைத் தேடும் வேட்டை நேற்று தென்பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது. பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று காலை முதல் களுத்துறைப் பகுதியில் குழந்தையைத் தேடி பூரண தேடுதல் நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டதாகவும்,...

யாழ் மாவட்ட செயலகத்துடன் இணைந்து மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றுள்ள இளைஞர் யுவதிகளின் புள்ளிவபரங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றது. இதன் படி மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளையோர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி கரவெட்டியிலும், 29 ஆம் திகதி சண்டிலிப்பாயிலும், 30 ஆம் திகதி காரைநகர் மற்றும் சங்கானையிலும் ஜூலை மாதம் 03 ஆம்...

புலம்பெயர் தமிழர்கள் அனைவருமே புலிகளும் அல்லர். அவர்களில் முதலீட்டாளர்கள், கல்விமான்களும் இருக்கின்றனர். அவர்கள் எமது நாட்டில் முதலீடு செய்வதற்கு - தமது அறிவு, புலமை, நீதி ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்குத் தயாராக இருக்கின்றனர். வடக்கில் மட்டுமல்லாது முழு நாட்டிலும் முதலீடுகளை செய்து இந்நாட்டினை அபிவிருத்தி செய்ய அவர்கள் விரும்புகின்றனர். - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கையின் பிரகாரம் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கே.பிக்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது'' எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆகியன முடிவடைந்த...

மிருசுவிலில் 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற எண்மர் கொலைகளுடன் தொடர்புடைய இராணுவத்தினர் ஒருவருக்கு மரணதண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் அடிப்படையில் இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறை எங்ஙனம் சிறப்பாக இயங்குகின்றதென்பதற்கு இது சான்று பகர்கின்றதென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு இதேவிதத்தில்...

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக அதியுயர் பாதுகாப்புடன் கூடிய இரண்டு பென்ஸ் கார்கள் உட்பட 27 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன'' - என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் நேற்று அறிவித்தார். அத்துடன், 105 பொலிஸாரும், 104 முப்படையினரும் அவருக்கான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், தேர்தல் காலத்தில் மஹிந்தவுக்கு மேலும் பாதுகாப்பு வழங்குவதற்கு அரசு...

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியில் பல்வேறு கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 7பேர் கொண்ட கொள்ளைக்கார கும்பல் ஒன்று மானிப்பாய் பொலிஸார் கிளிநொச்சியில் வைத்து நேற்று வியாழக்கிழமை (25) கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் பணம், 4 மோட்டார் சைக்கிள்கள், ஐ போன், கமரா, வாள், ஐ பாட், கைச்சங்கிலி...

பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட ஆலயங்களில் இரவு வேளைகளில் இசைக் கச்சேரிகள் நடத்துவதற்கு பருத்தித்துறை மாவட்ட நீதவான் மா.கணேசராசா நேற்று வியாழக்கிழமை (25) உத்தரவிட்டார். ஆலயங்கள் அமைதியின் உறைவிடம் அங்கு அமைதியைக் குழப்பும் வகையில் கேளிக்கைகளுக்கு இடமளிக்கக்கூடாது. அத்துடன், இசைக்கச்சேரிகளின் போது கைகலப்புக்கள் ஏற்பட்டு குழப்பங்களும் இடம்பெறுகின்றன. இது ஆலயங்களுக்கு பொருத்தப்பாடில்லாத செயற்பாடு. இதனைக் கருத்திற்கொண்டு ஆலயங்களில்...

தமிழ் மக்களின் இருப்பை இல்லாமல் செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்றது போல தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் நடைபெறுகின்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....

காணமற்போனவர்கள் பற்றிய தகவல்களை கண்டறிய சர்வதேச விசாரணையே தேவை. காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. அதில் எமக்கு நம்பிக்கையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். யாழிலுள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு...

All posts loaded
No more posts