Ad Widget

குருநகரில் ஆணின் சடலம்! – கொலையா என விசாரணை

குருநகர் சனசமூக நிலையத்திற்கு முன்னால் ஆணின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது. குருநகர் பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை கமல் (வயது 35) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று முன்தினம் இரவு அங்கு நடைபெற்ற இசைநிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பாத நிலையில், நேற்று அதிகாலை அயலவர்களால் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

எனினும் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென யாழ் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நடத்துமாறு, யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

சடலத்தை நேற்று காலை சட்டவைத்திய அதிகாரியுடன் சென்று பார்வையிட்ட நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்ததோடு, உயிரிழந்தவரின் மனைவியிடம் வாக்குமூலமும் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து, நீதவானின் உத்தரவிற்கமைய சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Related Posts