மாரி புகைப்பிடித்தலை ஊக்குவிக்கும் : தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

நடிகர் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகவுள்ள மாரி திரைப்படத்தை தடை செய்யக் கோரி நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவிற்கு முன்னால் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுர சந்தியில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டனர். மாரி திரைப்படம் புகைப்பிடித்தலை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாக தெரிவித்தே நேற்றய தினம் குறித்த ஆர்ப்பாட்டம்...

புகையிரத நிலைய சொத்துக்களை சேதப்படுத்தியவருக்கு விளக்கமறியல்

நாவற்குழி தச்சந்தோப்பு புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அறை, மலசலகூட அறைக்கதவு ஆகியவற்றை உடைத்த 28 வயதுடைய சந்தேக நபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதிநந்த சேகரம், வியாழக்கிழமை (16) உத்தரவிட்டார். நாவற்குழி தச்சந்தோப்பு புகையிரத நிலையத்துக்கு கடந்த செவ்வாய்கிழமை (14), மதுபோதையில் வந்த குறித்த நபர்...
Ad Widget

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக பணியாற்றி வந்த 35 சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த 35 சுகாதார தொண்டர்கள் 2014 ஆம் ஆண்டு 06ஆம் மாதம் ஒப்பந்த கால அடிப்படையில் தெல்லிப்பழை ஆதார...

அடுத்த ஆண்டு தமிழருக்கு தீர்வு நிச்சயம்! – சம்பந்தன்

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித் தருவார்களேயானால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளைக் காரியாலயத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்....

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தாதியர் விடுதி : அமைச்சரவை அங்கீகாரம்

யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மூன்று மாடி கட்டடத்தை தாதியர் விடுதியாக பயன்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1750 உறுப்பினர்களைக் கொண்ட பணியாளர் தொகுதியைக் யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவ சேவையை வழங்கி வருகின்றது. இவர்களுள் 407 பேர்...

தேர்தல் வன்முறைகளை முகப்புத்தகம் மூலம் முறையிடலாம்!

நாடளுமன்றத் தேர்தலில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு உடனடியாக அறிவிக்கும் விதத்தில் 'ஆணையாளருக்கு கூறுங்கள்' எனும் பெயரில் முகப்புத்தகக் கணக்கு (Facebook Account) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முகப்புத்தகத்தின் மூலம் செய்திகள் வேகமாகப் பரவுகின்றமையும், அதன் தாக்கம் அதிகரித்து இருப்பதனாலுமே 'ஆணையாளருக்குக் கூறுங்கள்' என்ற முகப்புத்தகப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் வன்முறைகளை இலகுவாகவும் விரைவாகவும்...

யாழில் போதையற்ற தேசம் விழிப்புணர்வு நிகழ்வுகள்

ஜனாதிபதியின் போதையற்ற தேசம் என்ற சிந்தனைக்கமைய வடக்கில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் புனர்வாழ்வு அமைச்சானாது விசேட செயற்திட்டம் ஒன்றை பாடசாலை மாணவர்களிடத்தில் ஆரம்பித்துள்ளது. இதன் முதற்கட்டம் யாழ் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதனடிப்படையில் யாழ் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு விசேட போதைப்பொருள் விழிப்புனர்வு நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது. வடமாகாண புனர்வாழ்வு இணைப்பு காரியாலயத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற...

இலங்கை மனித உரிமை நிலைமை குறித்து பிரித்தானியா கவலை

இலங்கையில் 2015ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சில கவலைக்குரிய விடயங்கள் தொடர்வதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “கடந்த ஜனவரி மாதம் பதவிக்கு வந்த, மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கம், மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்த கரிசனைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான சாதகமான சில...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்ற புதிய அரசாங்கம் இதுவரையில் தமிழ் மக்களுக்கு எந்த பயனையும் தரவில்லை – கஜேந்திரகுமார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்ற புதிய அரசாங்கம் இதுவரையில் தமிழ் மக்களுக்கு எந்த பயனையும் தரவில்லை. மாறாக தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு துரத்தப்பட்ட மகிந்தவை மீண்டும் ஆட்சி பீடத்தில் ஏற்றவே முனைகின்றது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த இக்கட்டான நிலை தொடர்பில் தமிழ் மக்கள் சிந்தித்து...

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் இலக்கங்கள் வெளியாகின

தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்  யாழ்ப்பாண மாட்ட வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் வெளியாகிஉள்ளன. வாக்காளர்கள் சைக்கிள் சின்னத்தின் முன்னாலும் பின்னர் விரு்ம்பிய 2 வேட்பாளர்கள் முன்னாலும் வாக்களிக்க முடியும் (1) விரிவுரையாளர் அமிர்தலிங்கம் இராசகுமாரன் (யாழ் பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் சங்க தலைவர்) (2) சி.ஆனந்தி  (ஓய்வுபெற்ற அதிபர்- இராமநாதன்...

அரசியல் சாக்கடையாயின் அதனை சுத்தப்படுத்தும் தொழிலாளியாக விரும்புகின்றேன் – த.வி.கூட்டணி தர்சன்!

இன்று கொழும்புமாவட்டத்தில் ஆனந்த சங்கரியின் தலைமையில்  போட்டியிடும் வேட்பாளர்களின் ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.அதில் கருத்து தெரிவித்த தமிழர் விடுதலை கூட்டணியின் கொழும்பு மாவட்ட  வேட்பாளர் நாகேந்திரன் டர்ஷன் மேற்கண்டவாறு கருத்து  தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் உள்ள மூவின மக்களையும் ஒருங்கிணைத்து யாதி பேதங்களையும் கடந்த கால கசப்பான அனுபவங்களையும் மறந்து தமிழர் விடுதலைக்கூட்டணி ஜனநாயக கட்சியோடு...

தேர்தல் கருத்துக்கணிப்பில் சைக்கிள் அணி முன்னணியில்! மக்கள் மாற்றத்திற்கு தயார்!

நடைபெற உள்ள இலங்கை பாராளுமன்றத்தேர்தல் தொடர்பில் தமிழ்மக்களின் முன் முக்கிய போட்டித்தெரிவுகளாக வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இருக்கின்றன. வழமைபோல இணையத்தளங்கள் தேர்தல் கருத்துக்கணிப்புக்களை மேற்கொண்டவண்ணம் உள்ளன. இன்று ஒவ்வொருவரும் எதோ ஒரு வகையில் இணையத்துடன் இணைந்துள்ள நிலையில் சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களின் கருத்துக்கள்  வாக்காளர்களிள் எண்ணங்களை பிரதிபலிப்பவையாக...

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் உத்தியோக பூர்வமாக வெளியீடு

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அந்தவகையில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கும் அவர்களுக்கான இலக்கங்கள் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான இலக்கங்களும் வருமாறு, அருந்தவபாலன் கந்தையா- 01 , ஆனந்தராஜ் நடராஜா-02, ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணம்-03, ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன்-04, ஈஸ்வரபாதம் சரவணபவன்-05,...

பண்ணாகம் கொலை வழக்கு: குற்றம் நிரூபிக்கப்படாததால் சந்தேகநபர் விடுதலை!

பண்ணாகம் அழகரட்ணம் சிவராஜா கொலை வழக்கில் கண்கண்ட சாட்சியமோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியமோ முன்வைக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தினால் எதிரியாகக் குற்றம் சாட்டப்பட்டவரை, நீதிபதி இளஞ்செழியன் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை நிறைவு பெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடிவில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம்...

புலம்பெயர்ந்த, உயிரிழந்த வாக்காளர் விவரம் திரட்டல்

வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள, உயிரிழந்துள்ள வாக்காளர்களின் விவரங்கள் கிராம சேவையாளர் ஊடாக தேர்தல்கள் திணைக்களத்தினால் திரட்டப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தகவல்கள் திரட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்தத் தேர்தலின்போது 2014 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலே பயன்படுத்தப்படவுள்ளது....

வடமாகாண மாற்றுதிறனாளிகளுக்கு விசேட அடையாள அட்டை

வடமாகாணத்தில் வதியும் மாற்றுத்திறனாளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் அவர்களின் தரவுகள் கணினி மயப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர்களின் மருத்துவ விபரங்கள் அடங்கிய விசேட அடையாள அட்டைகளை வழங்கவுள்ளதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் அவ்வமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'வடமாகாணத்தில் விசேட தேவைக்குட்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, நடந்து முடிந்த யுத்தத்தினால்...

தெல்லிப்பளை ஓ.ஐ.சி பணியிலிருந்து இடைநிறுத்தம்

தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.என்.எஸ்.கஸ்தூரியாரச்சி, பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவரை பணியிலிருந்து இடைநிறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் பணிப்புரைக்கு அமைய புதன்கிழமை (15) நடைமுறைக்கு வரும் வகையில்...

வேட்பாளர்கள் வாக்கு கேட்க வீட்டுக்கு வந்தால் வீடியோ செய்து அனுப்புங்கள்!

சட்டவிரோத தேர்தல் செயற்பாடுகளை வீடியோ செய்து மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு செய்யும் புதிய முறையொன்றை பொலிஸ் திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது. வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தல், வாக்கு பெறுவதற்காக அன்பளிப்புகள் வழங்குதல், ஊர்வலம் நடத்துதல் அடங்கலான சட்டவிரோத தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ செய்து அறிவிக்குமாறு பொதுமக்களை கோருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர...

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பிரச்சாரக்கூட்டம் திருகோணமலையில் ஆரம்பம்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பிரச்சாரக்கூட்டம் தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் வருகின்ற 18.7.2015 வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது. முன்னதாக வேட்புமனுத்தாக்கலை அம்பாறையில் ஆரம்பித்து வன்னியில் முடித்தது. தற்போது பிரச்சாரக்கூட்டத்தினை தமிழர்களின் கோட்டை எனப்படும் கோணமலையில் ஆரம்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் திருகோணமலையில் முன்னணியின் தலைமைச்செயலகமும் ஆரம்பித்துவைக்கப்பட உள்ளது. மக்களை திரண்டுவந்து தமிழ்தேசிய அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான...

தேர்தல் பரப்புரைகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக மத பெரியார்களிடம் ஆசிர்வாதம் பெற்றது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் சைக்கிள் சின்னத்தில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலை யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையிடமும், நல்லை ஆதீன குருமகா சந்நிதானம் அவர்களிடமும், சமூக சேவையாளரும் இந்து மத பெரியாருமான ஆறுதிருமுருகன் அவர்களிடமும் ஆசீர்வாதத்தினை...
Loading posts...

All posts loaded

No more posts