Ad Widget

திருநெல்வேலியில் நேற்றிரவு இபோச பஸ்மீது கல்வீச்சு!

யாழ்ப்பாணத்திற்கும் அம்பாறைக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது நேற்றிரவு இனம்தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் மேற்கொண்டனர்.

பலாலி வீதியில் திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் நேற்றிரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களே பேருந்து மீது கல்வீசி தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தாக்குதலுக்கு இலக்கான பேருந்தின் சாரதி தெரிவித்தார்.

அம்பாறையில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த குறித்த பேருந்து யாழ். நகர் பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு தரிப்பிடத்திற்காக பலாலி வீதியின் ஊடாக கோண்டாவில் டிப்போக்கு பேருந்து சென்று கொண்டிருந்த வேலையிலையே பேருந்து மீது கல்வீச்சு இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related Posts