Ad Widget

வாக்காளர் அட்டைகளை தபால் நிலையங்களில் இன்றும் பெறலாம்

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தேர்தல் தினமான இன்று (17) ஆம் திகதியும் தத்தம் தபால் நிலையங்களுக்கு சென்று தம்முடைய வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாமென தபால் மா அதிபர் டீ. எல். பீ. ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள சகல தபால் நிலையங்களும் வாக்காளர் அட்டைகளை வாக்காளர்கள் பெற்றுக் கொள்ளவதற்காக நேற்று (16) ஞாயிற்றுக்கிழமையும் மாலை 04 மணிவரை திறந்து வைக்கப்பட்டது. வாக்காளர் அட்டை விநியோகத்தின் போது வீடுகளில் வசிப்பவர்கள் வீடுகளில் இல்லாத நேரம் அவற்றை விநியோக்க முடியவில்லை.

ஆயினும் 97 வீத வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டதாக அபேரத்ன தொடர்ந்து தெரிவித்தார். வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்காக விசேட நாட்களும் ஒதுக்கப்பட்டன. 8500 தபால்காரர்கள் வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்காக கடமையில் அமர்த்தப்பட்டதாகவும் அபேரத்ன மேலும் தெரிவித்தார்.

Related Posts