Ad Widget

நாடாளுமன்றத் தேர்தல் – காலையில் தொடங்கியது வாக்களிப்பு!

பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன. வாக்காளர்கள் இன்று மாலை 04.00 மணி வரை தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொருட்டு வாக்களிக்க முடியும்.

உரிய நேரத்தில் சரியான ஆவணங்களுடன் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தருமாறு, தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்முறை தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 50 இலட்சத்து 44,490 பேர் தகுதி பெற்றுள்ளனர். மேலும் நாடுபூராகவும் 12,312 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அத்துடன் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் 1600 நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன. 191 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக முன்னெடுக்கப்படும் இம்முறை தேர்தலில், 6151 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களில் 556 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts