- Sunday
- July 20th, 2025

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 40பேர், நேற்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவின் அடிப்படையிலேயே அம்மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 26 மீனவர்களும் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 14 மீனவர்கபளுமே இவ்வாறு...

கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில், உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த மார்ச் 13ஆம் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வளலாய் பகுதியின் கடற்கரையில் தேங்கியுள்ள கல் மற்றும் மணல் திட்டுக்களை அகற்றி, இறங்கு துறை (வான்) அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. யூ.எஸ்.எய்ட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் சேவாலங்கா தன்னார்வ தொண்டு நிறுவனம் இப்பணிகளை நடைமுறைப்படுத்தி வருவதாக திட்ட மேற்பார்வையாளர்...

முன்னாள் பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய ஐக்கிய தேசியக்கட்சியில் நேற்று திங்கட்கிழமை இணைந்துகொண்டுள்ளார். அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளரான சாஹல ரத்னாயக்கவை தான் ஆதரிக்க போவதாகவும் அறிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் (ஈபீடிபீ) இடையே என்ன வித்தியாசம் காணப்படுகிறது. நாங்கள் ஈபீடிபீயை நிராகரிக்க வேண்டுமானால், கூட்டமைப்பையும் தூக்கி எறியவேண்டும் எனத் தெரிவித்தார் தமிழ் தேசிய முன்னணியின் யாழ். மாவட்ட வேட்பாளரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன். யாழ். தென்மராட்சி - கோவிலாக்கண்டி பிரதேசத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்...

இம்முறை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் யாழ் மக்கள் எந்தவித அச்சுறுத்தலோ சந்தேகமோ இன்றி தமக்கு விருப்பமான பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் இவ்வாறு கூறியுள்ளார். 2008ம் ஆண்டு முதல் கடந்த ஜனவரி மாதம் வரையில், இடம்பெற்ற தேர்தல்களின்...

வெற்றிலை உண்டால் புற்றுநோய் ஏற்படுவது போல வெற்றிலையில் தொடர்ந்து இருக்க முடியாத வகையில் வெற்றிலையுள்ளதால் அதில் இருந்து விலகி தமிழ் மக்களின் நாதமாகிய வீணையில் போட்டியிடுகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் இரா.செல்வ வடிவேல் தெரிவித்தார். யாழ். நகரப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்....

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்ட ரக்பி வீர்ர் வசீம் தாஜுதீனின் புதைகுழி இன்று தோண்டப்பட்டு, அவரது சடலத்தின் எஞ்சிய பாகங்கள் மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன. வசீம் தாஜுதீன் விபத்தில் மரணமாகவில்லை என்றும் அது ஒரு கொலை என்றும், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், தாஜுதீனின் உடலைத் தோண்டியெடுத்து...

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறிய வடக்கைச்சேர்ந்த பெண்கள் மூவரை ஏமாற்றிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் சேனைகுடியிருப்பு பகுதியில் உள்ளி வீடொன்றில் தடுத்துவைத்து துன்புறுத்தியதாக கூறப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முகவர் மற்றும் பெண்கள் அறுவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகவரினால் தாக்குதலுக்கு உள்ளான பெண், தப்பியோடுவதற்கு முயற்சி செய்த போது ஏற்பட்ட...

நீர்வேலி பகுதியில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தை ஒழுங்கமைத்த நீர்வேலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். நீர்வேலி பகுதியை சேர்ந்த நிஷாங்கன்(வயது26) என்ற இளைஞர் நேற்றய தினம் நீர்வேலி பகுதியில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கான பிரச்சார கூட்டம் ஒன்றை ஒழுங்கமைத்திருந்த நிலையில் கூட்டம் நிறைவடைந்த பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது...

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தினூடாக யாழ் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு 23.35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளதென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் 1032 வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்முன்னெடுக்கப்படவுள்ளன.விவசாயம்,மீன்பிடி,கால்நடை, சந்தைப்படுத்தல் மற்றும் கைத்தொழில் ஆகிய பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு 75,000ரூபா பெறுமதியான...

வீடுகளில் துன்புறுதல், முறையற்ற குழந்தை பிரசவம், பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றால் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்படும் பெண்களிற்கு தேவையான அடிப்படை பொருட்களடங்கிய அவசர பொதிகளை வழங்க UNHCR நிறுவனம் முன்வந்துள்ளது. இதன் முதற்கட்டமாக ஒவ்வொரு பொதியும் ரூபா 2000 பெறுமதியான பொருட்களென 75 பொதிகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்களிடம் குறித்த நிறுவனத்தினால் அண்மையில்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நேற்றய தினம் யாழ்.மானிப்பாய் மற்றும் நெல்லியடி பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. முதலாம் கட்ட தேர்தல் பிரச்சார பணிகள் நிறைவடைந்த நிலையில் 2ம் கட்ட பிரச்சார பணிகள் நேற்றைய தினம் மாலை 5.30 மணிக்கு ஆரம்பமானது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டார். இந்த...

இன்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் மாலை 4.00 மணிக்கு தொடக்கி நடை பெற்றது. இதில் அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் பெருந்திரளானமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசாங்கத்தால் விரைவில் வழங்கப்படவிருக்கும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் நியமனங்களில் வடக்கில் 90 விழுக்காடு சிங்களவர்களே இடம்பெற்றிருப்பதாகவும், இதன்மூலம் தமிழ்மக்களுக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். இந்நியமனங்கள் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், வடக்கின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயம் மூன்று...

நெல்லியடியில் நேற்று மாலை இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இனந்தெரியாத- மர்ம நபர்கள் சிலரால் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களால் பரபரப்பு ஏற்பட்டது. வீசப்பட்ட துண்டுப் பிரசுரங்களில் தேசியத் தலைவரின் மண்ணில் தேசத்துரோகியா என்று தலைப்பிடப்பட்டு இரண்டு பக்கங்களிலும் பல்வேறு விடயங்கள் அச்சிடப்பட்டிருந்தன. வடமராட்சி வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம், யாழ்ப்பாணம் என்ற பெயரில்...

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் வர்ணப்பூச்சுக்களால் வீதிகள் மற்றும் வீட்டுச் சுவர்களில் கட்சிகளின் சின்னங்கள் மற்றும் வேட்பாளர்களுடைய விருப்பிலக்கங்களை பொறிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகன் எச்சரிக்கை விடுத்தார். யாழ். மாவட்டத்தில் தற்போது தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தேர்தல் சட்ட விதிமுறைகளை...

மற்றவர்களைப் போன்று நான் தமிழீழ விடுதலைப் புலிகளை வைத்து வாக்குப்பிச்சை வாங்கவில்லை. அதற்கான தேவையும் எனக்கில்லை. அன்று புலிகளின் தலைவர் பிரபாகரன் சொன்ன விடயங்கள் இன்று இல்லை என்பதை மட்டுமே கூறுகின்றேன் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (09) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனின் காணொளியில் சந்தேகம் இருப்பதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மக்களோடு மக்களாக செயற்படுவதில்லை, தமது குடும்பங்களை இந்தியாவில் வைத்துக்கொண்டு செயற்படுகின்றனர் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தார். இதுதொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகப்புத்தகத்தில் (பேஸ்புக்கில்) வெளியாகியூள்ளது. இதுதொடர்பில்...

உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்கப்படாமையால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் சடலம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட போது பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவுக்கமைய அமைதியான முறையில் ஊர்வலம் இடம்பெற்று இறுதிக் கிரியைகள் நடைபெற்றன. வவுனியா, பண்டாரிகுளம் விபுலானந்த கல்லூரியைச் சேர்ந்த குணசேகரம் திவ்வியா (வயது 19) என்ற மாணவி கணித...

குற்றச் செயல்களுக்காக நீதிமன்றத்தினால் தேடப்படும் நபர்கள், நீதித்துறை நீதிமன்ற பிடியாணையில் தேடப்படும் நபர்கள் தேர்தல் வன்முறையில் ஈடுபடக்கூடும். அதனை அனுமதிக்க முடியாது. அத்தகைய நபர்களை உடன் கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிபதி இளஞ்செழியன், இவ்வாறு தேடப்படுபவர்கள் அண்மையில் உள்ள நீதிமன்றங்களில் உடனடியாக சரணடைய வேண்டும் என கஞ்சா தண்டனைக் குறைப்பு வழக்கொன்றில் அளித்துள்ள...

All posts loaded
No more posts