Ad Widget

கைதடியில் விபத்து இளைஞர் பலி! மற்றொருவர் படுகாயம்!!

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதியதில் அதனை செலுத்தி வந்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

கைதடிச் சந்திக்கு அண்மையாக இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் கைதடியை சேர்ந்தவரான சிவலிங்கம் தீபன் (வயது 31) என்பவர் மரணமானார். ஜெகதீஸ்வரன் (வயது 31) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைளை நடத்தி வருகின்றனர்.

Related Posts