கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் இராணுவத் தேவைக்காக சுவீகரிப்பதற்கு, ஒன்றரை ஏக்கர் காணியை அளவிடும் பணி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையால் கைவிடப்பட்டுள்ளது.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கோப்பாய் மத்தி கிராம அலுவலர் பிரிவின் கீழ் கோப்பாயில் இருந்து கைதடி செல்லும் வீதியில் சுமார் ஒரு ஏக்கர் காணியில் இராணுவ முகாம் அமைந்துள்ளது. இது 28 பேருக்குச் சொந்தமான காணியாக உள்ளது.
இக்காணியில் ஒன்றரை ஏக்கர் பகுதியை அளவீடு செய்வதற்காக நில அளவை திணைக்களத்தினர் வருகை தந்தபோது காணி உரிமையாளர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான சுகிர்தன், கஜதீபன், பரம்சோதி ஆகியோர் ஒன்றிணைந்தமையால் நில அளவிடும் பணி கைவிடப்பட்டுள்ளது. எனினும் காணி அளப்பதற்கு 2 வாரத்தின் பின்னர் தாம் வரவுள்ளதாகவும் அவர்களி னால் தெரிவிக்கப்பட்டுள்ளது.