Ad Widget

நடைபயணம் : சற்றுமுன்னர் செம்மணியினை வந்தடைந்து

சர்வதேச விசாரணை பொறிமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தும் நடை பயணம் கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சியில் பழைய மாவட்ட செயலகம் முன்பு ஏ9 வீதியில் ஆரம்பமாகியது தொடர்ந்து இன்று 4 ஆம் நாள் யாழ்பாணத்தினை வந்தடைந்துள்ளது.

சற்றுமுன்னர் செம்மணியினை வந்தடைந்து மக்கள் படுகொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் தொடர்கிறது.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் யாழ் பிரதான பேரூந்து நிலையத்தினை வந்தடைய உள்ளது அத்தருணம் அவர்களை வரவேற்க கூடுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழு இந்த போராட்டத்திற்கு தனது ஆதரவினை தெரிவித்திருக்கிறது

nadai-payanam-semmani-4thday- (1)

nadai-payanam-semmani-4thday- (2)

nadai-payanam-semmani-4thday- (3)

nadai-payanam-semmani-4thday- (4)

nadai-payanam-semmani-4thday- (5)

Related Posts