- Monday
- July 21st, 2025

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தினில் தெரிவித்தது போன்று சுயநிர்ணயத்துடன் கூடிய சமஸ்டி தீர்வினை நோக்கி பயணிக்குமானால் அதற்கு ஆதரவளிக்கவும் அவ்விடயத்தினில் கொள்கை ரீதியில் உடன்பட்டால் இணைந்து செயற்படவும் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. தேர்தலில் செயற்பட்ட தமது ஆதரவாளர்கள் மற்றும் வாக்களித்த மக்களிற்கான நன்றி தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்று இன்று யாழ்.ஊடக...

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்துவிட்ட மகிந்த ராஜபக்சவை போர்க்குற்றத்துக்காக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு இதுவே சரியான தருணம் என்று ஆஸ்திரேலியா எம்.பி. லீ ரியன்னோன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிட்டார். எப்படியும் பிரதராகிவிடுவோம்.. தம் மீதான போர்க்குற்றவிசாரணையில் இருந்து தப்பித்துவிடுவோம் என்று அவர் கனவு கண்டார். ஆனால் மகிந்த...

தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்ட இந்த கட்சியில் அவரது வழிகாட்டலிலும் விடுதலைப் புலிகளின் காலத்தின் நீட்சியாக என்னுடைய பயணத்தை எனது மக்களின் உரிமைக் காகவும் தன்னாட்சிக்காகவும் பாடுபட்டு தொடர்ந்தும் செயற்படுவேன் என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள சிவஞானம் சிறீதரன்...

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் சார் பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் க.அருந்தவபாலனின் விருப்பு வாக்கில் மோசடி நடந்துள்ளதாக தென்மராட்சி மக்கள் சமூகம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் முறையீடு செய்துள்ளது. நேற்று இரவு 8.30 மணியளவில் தென்மராட்சி மக்கள் சமூகப் பிரதிநிதிகள் சுமார் முப் பத்தைந்து பேர் மாவை சேனாதிராஜாவைச் சந்தித்து...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 14இல் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கம் 91 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழர்களின் பிரச்சினைகளை சிங்கள மக்களும் உணரவேண்டும் என்ற அடிப்படையில் தான் குருநாகலில் களமிறங்குவதாக சிவாஜிலிங்கம் களமிறங்கினார். விடுதலைப் புலிகளின் தலைவரின் உறவினர் ஒருவர் குருநாகலில் தனக்கு எதிராக களமிறங்கியுள்ளதாகக் கூறி...

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நிறைவடையும் வரையிலும் தேர்தலில் தொடர்பில் பல்வேறான சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம்பெற்றன. அவற்றில் சில... ரணிலுக்கு ஆகக்கூடிய விருப்பு வாக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க, நடந்து முடிந்த தேர்தலில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். அவர், 500,566 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று 19 ஆம்திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன், ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு கந்தன் ஆலய வெளிவீதியைச் சுற்றி விளம்பரப் பலகைகள், அரசியல் பதாகைகள் என்பன காட்சிப்படுத்தத் தடை விதிக்கப்பட்டு சிவனையும் சக்தியையும் குறிக்கும் சிவப்பு வெள்ளை நிறத்துணிகள் கட்டப்பட்டுள்ளன. இம்முறை ஆலய சூழலில் நடைபாதை வியாபாரங்கள் முற்றாக...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை நடைபெற்றுமுடிந்த பொதுத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறினார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பு திருகோணமலையிலுள்ள...

இலங்கைத் தேர்தல் வரலாற்றில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அவருக்கு 5 இலட்சத்து 56 ஆயிரத்து 600 வாக்குகள் கிடைத்துள்ளன. இதேவேளை அதிக விருப்பு வாக்குகளைப் பெறவேண்டும் என்ற நோக்கில் அதிக வாக்காளர்கள் கொண்ட மாவட்டங்களில் ஒன்றான குருநாகலில்...

அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காமல் தேசிய அவை அமைக்கப்பட்டால், அந்த அவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடமையாற்றுமென இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். யாழ். மத்திய கல்லூரியில் விருப்பு வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்த பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

கடந்த ஜனவரி மாதம் 08 திகதியின் புரட்சியை தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்வதோடு நல்லாட்சி மற்றும் கொள்கைகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இந்நாட்டின் பெரும்பான்மை மக்களின் அனுமதி கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். விசேட அறிக்கையில்...

யாழ்.தேர்தல் மாவட்டத்தின் வாக்கெண்ணும் பணிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யப்போகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரம் வெளியாகியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 5 உறுப்பினர்கள் 1. சி.சிறீதரன் 2. மாவை.சேனாதிராசா 3. த. சித்தார்த்தன் 4. எம்.ஏ. சுமந்திரன் 5. ஈ.சரவணபவான் 5வது இடம் நீண்ட இழுபறியின் பின் சரவணபவானுக்கு வழங்கப்பட்டது...

பருத்திதுறையிலிருந்து நெல்லியடியூடாக யாழ்ப்பாணம் போகும் AB20 பிரதான வீதியில், இமயானனுக்கு அருகில், வல்லைவெளியை அணுகும் முடக்கில், மிகமிக அண்மையில், விடுதியுடன் கூடிய மதுபானசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கு அண்மைக்காலத்தில் பல மோட்டார் விபத்துக்களையும் உயிர் பலிகளையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சுழலில் மதுபானக்கடை திறந்த வைத்திருப்பது மனித உயிர்களுக்கு விடுக்கப்பட்ட சவால். போரபத்தை விலைக்கு...

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை மிகவும் எளிமையான நிகழ்வு ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் 15ம் நாடாளுமன்றின் பிரதமராக பதவிப்...

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதுவித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளாத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை கேலி செய்யும், அக்கட்சியின் சின்னமான சைக்கிளை மரமொன்றில் தூக்கிலிட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிக போட்டியுள்ள கட்சியாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, எவ்வித ஆசனங்களையும்...

15ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் தோல்வியடைந்துள்ளதை ஏற்றுக் கொள்வதாக, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக, ஏ.எஃப்.பி செய்திச் சேவை தெரிவிக்கின்றது. இந்தத் தேர்தலில் ஐ.ம.சு.கூ அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது என்பதனாலேயே அவர் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. "பிரதமராக வருவது என்ற என்னுடைய...

இலங்கையின் வரலாற்றில் நீதியான மற்றும் அமைதியான தேர்தல் ஒன்று இம்முறை நடைபெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 1947ம் ஆண்டில் இருந்து இதுவரை இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் இன்று (நேற்று) இடம்பெற்ற தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற தேர்தல் மற்றும் அதற்கு முன்னர் இடம்பெற்ற தேர்தல்களை இன்றைய...

தேர்தல் வாக்களிப்பின் போது தனது வாக்குச் சீட்டை, சட்டவிரோதமான முறையில் புகைப்படம் எடுத்த நபர் ஒருவரைக் இன்று காலை (17) கைதுசெய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ லுனவில பௌத்த கனிஷ்ட வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் வைத்து, லுனுவில பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவரையே கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர்...

8ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்று வருவதுடன் முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இன்று இரவு 6.30 மணியளவில் வெளியிடுவதற்கு முயற்சி செய்வதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 4.00 மணியுடன் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் மாலை 4.30 மணியளவில் தபால் வாக்குகளை எண்ணும் பணிகள்...

தமிழர்களது தேசிய அரசியலைப்பொறுத்தமட்டில் இத்தேர்தல் ஒரு திருப்புமுனை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.இன்று(17)யாழ்ப்பாணத்திலுள்ள வக்களிப்பு நிலையத்தில் தமது வாக்கை செலுத்திவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் எமது நிலைப்பாட்டை நாம் வேட்புமனு தாக்கல் செய்த நாள் முதல் எமது...

All posts loaded
No more posts