இலங்கை எல்லைக்குள் அத்துமீறி உட்பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 15 இந்திய மீனவர்கள் யாழ் பருத்தித்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா புதுக்கோட்டை மாவட்டம் நாகபட்டினம் பகுதியைச் சேர்ந்த இவர்கள் கடந்த 21 ஆம் திகதி இரவு யாழ் பருத்தித்துறைப் பகுதியை அண்மித்த கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை ரோந்துப்பணிகளில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நேற்று (22) யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.