வாக்காளர் அட்டைகளை தபால் நிலையங்களில் இன்றும் பெறலாம்

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தேர்தல் தினமான இன்று (17) ஆம் திகதியும் தத்தம் தபால் நிலையங்களுக்கு சென்று தம்முடைய வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாமென தபால் மா அதிபர் டீ. எல். பீ. ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள சகல தபால் நிலையங்களும் வாக்காளர் அட்டைகளை வாக்காளர்கள் பெற்றுக் கொள்ளவதற்காக நேற்று (16) ஞாயிற்றுக்கிழமையும் மாலை...

மூன்று நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாளை மற்றும் நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படல் வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இன்று தேர்தல் தினத்தன்று அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Ad Widget

வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த பொருட்கள் மீட்பு

யாழில் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட இருந்த வீட்டு சமையல் உபகரண பொருட்கள் ஒரு தொகுதி மீட்கப்பட்டுள்ளன என தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டி, கும்பிளாவளை பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாக உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை (16) மீட்கப்பட்டுள்ளன. குறித்த பொருட்கள் பெரியளவிலான 24 பெட்டிகளில் அடைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க என பதுக்கி...

அனைவரும் வாக்களியுங்கள்

வாக்களிப்பது மக்களின் உரிமை மற்றும் அவர்களுடைய பொறுப்பாகும். வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்காமல் வாக்களிப்பு நிலையத்துக்கு அச்சமின்றி சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சகல வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். போதை மற்றும் வன்முறைகள் இன்றி செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சட்டங்களை உருவாக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்கின்ற இந்த தேர்தலில் சட்டத்தை மீறுகின்ற சம்பவங்கள் இடம்பெறுமாயின், சட்டத்தை...

திருநெல்வேலியில் நேற்றிரவு இபோச பஸ்மீது கல்வீச்சு!

யாழ்ப்பாணத்திற்கும் அம்பாறைக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது நேற்றிரவு இனம்தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் மேற்கொண்டனர். பலாலி வீதியில் திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் நேற்றிரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களே பேருந்து மீது கல்வீசி தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தாக்குதலுக்கு இலக்கான...

நாடாளுமன்றத் தேர்தல் – காலையில் தொடங்கியது வாக்களிப்பு!

பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன. வாக்காளர்கள் இன்று மாலை 04.00 மணி வரை தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொருட்டு வாக்களிக்க முடியும். உரிய நேரத்தில் சரியான ஆவணங்களுடன் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தருமாறு, தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இம்முறை தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 50 இலட்சத்து 44,490...

யாழில் சோகம் – வீட்டில் மகன் இறந்து கிடந்ததை 3 நாட்களாக அறியாத பெற்றோர்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். யாழ். திருநெல்வேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் (வயது 32) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் மின்சார வேலை செய்துகொண்டிருந்துள்ளார். அந்த வேலையின் போது மின்சாரம் தாக்கி...

யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சி அலுவலகம் முன்பாக பெற்றோல் குண்டு வீச்சு!

யாழ்.மார்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் அலுவலகம் மீது நேற்றிரவு 11.20 மணிக்கு இனந்தெரியாதோரால் பெற்றொல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முகவர்களுக்கான செயற்பாடுகளை கட்சி தொண்டர்கள் மேற்கொண்டு இருந்த போதே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. வேட்பாளரும், சட்டத்தரணியுமான ஸ்ரீகாந்தாவின் அலுவலகம் மீதும் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலினால் எவருக்கும் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்பது...

தேர்தலின் இறுதிக்கட்ட நேரத்திலும் வன்முறைக்கு இடமளிக்க முடியாது: நீதிபதி இளஞ்செழியன்

இறுதிக்கட்ட நேரத்திலும், தேர்தல் வன்முறைகளுக்கு இடமே கொடுக்காத வகையில் பாரதூரமான குற்றச்சாட்டுக்களுக்கு பிணை வழங்க முடியாது என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார். 87 கிலோ கஞ்சா உடைமையில் வைத்திருந்தபோது கைது செய்யப்பட்ட ஒருவருக்கான பிணை கோரி விண்ணப்பிக்கப்பட்ட பிணை மனு வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் இவ்வாறுதெரிவித்துள்ளார். தேர்தல் வன்முறைகளற்ற அல்லது தேர்தல் வன்முறைகள் குறைந்த மாவட்டங்களாக...

யாழில் விபத்து: இருவர் பலி, மூவர் படுகாயம்

மீசாலை – புத்தூர் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 03.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது....

வாக்களிப்பை சீர்குலைக்க முயன்றால் துப்பாக்கிச் சூடு! – பொலிசாருக்கு அதிகாரம்

அமைதியான- நீதியான தேர்தலை சீர்குலைக்க முயற்சிக்கும் நபர்களை துப்பாக்கியால் சுடும் அளவிற்கு, பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அமைதியாக தேர்தல் நடத்தப்படுவதனை தடுக்க முயற்சிக்கும் எந்தவொருவரையும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எவ்விதமான அச்சமும் சந்தேகமும் இன்றி தைரியமாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கத் தேவையான...

தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்க அதிகாலையிலேயே வாக்களியுங்கள்

நாளை நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற தேர்­தலில் அனைத்து வாக்­கா­ளர்­களும் கட்­டா­ய­மாக தமது வாக்­கு­ரி­மையை பயன்­ப­டுத்த வேண்­டு­மென வலி­யு­றுத்தும் 'கபே' அமைப்பு தேவை­யற்ற அசம்­பா­வி­தங்­களைத் தவிர்த்துக் கொள்­வ­தற்கு அதி­கா­லை­யி­லேயே வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்குச் சென்று வாக்­க­ளிக்­கு­மாறு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. வாக்­கா­ளர்கள் தாம் விரும்பும் கட்­சிக்கு வாக்­க­ளிக்கும் அதே­வேளை அக்­கட்­சியின் ஊடாகப் போட்­டி­யிடும் ஊழ­லற்ற சிறந்த வேட்­பா­ளர்­க­ளுக்கு தமது விருப்பு வாக்­கு­களை...

பாரளுமன்ற தேர்தல் தொடர்பிலான யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை

குறுந்தகவல் மற்றும் இணையத்தளம் ஊடான தேர்தல் பரப்புரைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு பேஸ்புக் மற்றும் மின்னஞ்சல் ஊடாக தேர்தல் பரப்புரைகளைத் தவிர்க்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். தேர்தலுக்கான பிரதான பரப்புரைகள் நிறைவடைந்துள்ள போதிலும், இணையத்தளம் ஊடான பரப்புரைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கையடக்கத் தொலைபேசியூடாக குறுந்தகவல் மூலம் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்...

ஐ.தே.க ஆட்சியமைக்க த.தே.கூ ஆதரவு வழங்கும் – சம்பந்தன்

ஐக்கிய தேசிய கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்று ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது இல்லத்தில் நேற்று பல்வேறு அமைப்புகளின் பிரதிநிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத்...

எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் அறுவர் இந்தியாவில் கைது

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் அறுவர், இந்தியாவின் மத்திய கல்கத்தா நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (14) விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்ட அறுவரும் இலங்கைத் தமிழர்கள் எனவும் இவர்கள் நான்கு நாட்களுக்கு முன்னரே சென்னையிலிருந்து கல்கத்தா நகருக்கு வந்துள்ளனர் எனவும் இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள...

வாக்காளர்களை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்காக, வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்காளிக்கச் செல்லும் வாக்காளர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா என்பது குறித்து அதிகாரிகள் உறுதியாகவும் அவதானமாகவும் இருத்தல் அவசியம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று தெரிவித்துள்ளது. நாடாளாவிய ரீதியில் கடந்த ஒரு மாதகாலமாக பல்வேறு தேர்தல் வன்முறைகளும் முறைக்கேடான தேர்தல் பிரசாரங்களும் இடம்பெற்றுள்ளதாக, உள்ளூர் கண்காணிப்பு குழுக்களின்...

அநுர, சுசில் இருவரின் கட்சி உறுப்புரிமை பறிப்பு!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரின் கட்சி உறுப்புரிமை தடை செய்யப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழில் இந்தியாவின் 69 ஆவது சுதந்திரதின கொண்டாட்டம்

இந்தியாவின் 69 ஆவது சுதந்திரதின நிகழ்வு யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரக இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஜந்தாவது தடவையாக கொண்டாடப்படும் இந்த நிகழ்வில் இந்திய தேசிய கோடியை இந்திய துணை தூதுவர் நட்ராஜ் ஏற்றிவைத்தார். இந்த நிகழ்வில் இலங்கை வாழ் இந்திய பிரஜைகள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக இணை மருத்துவ பீட மாணவி மரணத்தில் சந்தேகம்! – மீள்விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

யாழ் பல்கலைக்கழக இணை மருத்துவ பீட மாணவி லோறன்ஸ் அனா எப்சிபா கடந்த மாதம் தீக்காயங்களுக்குள்ளாகி மரணமடைந்ததற்கு மருத்துவ பீட விரிவுரையாளர் ஞானகணேஸ் றஜித் (ஜெனா) என்பவர் மீது மாணவியின் பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்களால் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று முதல் தடவையாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது மாணவியின்...
Loading posts...

All posts loaded

No more posts