அமைச்சரவை பதவிப்பிரமாணம் இன்று இல்லை

ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து ஏற்படுத்தியுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை, இன்று செவ்வாய்க்கிழமை (25) பதவிப்பிரமாணம் செய்வதாக இருந்த போதிலும், தற்போது அது பிற்போடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நாளை மறுதினம் வியாழக்கிழமையும் அதற்கடுத்த நாளான வெள்ளிக்கிழமையுமே புதிய அமைச்சரவை, பதவிப்பிரமாணம் செய்யும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீதி விபத்துக்களால் ஏற்படும் அங்கவீனங்கள் அதிகரித்து வரும் அபாயம்

வீதி விபத்துக்களில் சிக்குண்டு அங்கவீனமாவர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி சி.யமுனாநந்தா தெரிவித்தார். கடந்த 1987 ஆம் ஆண்ட முதல்; 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ்;ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 6 ஆயிரத்து 524 பேருக்கு செயற்கைக் கால்களும், 267 செயற்கை கைகளும் பொருத்தப்பட்டுள்ளன. மிதிவெடியில் சிக்கி...
Ad Widget

காணியுடன் அதிக மக்கள் திருப்தியடைகிறார்கள் என நினைக்கிறேன் : ரணில்

இந்தியாவின் தி ஹிந்து ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இக்கருத்தினை  வெளிப்படுத்தியுள்ளார். மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென தமிழ் மக்கள் கோருகின்றனரே எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ரணில், 'காணியுடன் அதிக மக்கள் திருப்தியடைகிறார்கள் என நினைக்கிறேன். யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் தங்களது காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மக்களை மீளக் குடியேற்றுவதே வடக்கு கிழக்கிலுள்ள...

மூன்று மகன்களை இழந்து தவிக்கும் தாய்!

தொழிலுக்கு சென்ற இரண்டு மகன்களை காணவில்லை, மற்றைய மகனை தொழில் விட்டு வரும் போது சுட்டுக் கொன்றார்கள், நான் தற்போது மூன்று பிள்ளைகள் இன்றி வாழ்கின்றேன் என கண்ணீருடன் வாழைச்சேனை புதுக்குடியிருப்பை சேர்ந்த எஸ்.யோகமலர் என்னும் தாயார் தெரிவித்தார். காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாவது அமர்வின் மூன்றாவது நாள் விசாரணை...

இலங்கைக்காக குரல் கொடுக்கப் போவதாக டோனி பிளேயர் உறுதிமொழி

உலகில் இலங்கை தொடர்பில் காணப்படும் தவறான கருத்துக்களை களைய இலங்கை சார்பாக குரல் கொடுக்கப் போவதாக முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். இலங்கைக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள டோனி பிளேயர் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். கடந்த பாராளுமன்றத்...

தமிழருக்கான தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவிகளை ஏற்கமாட்டோம்! – சம்பந்தன்

புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் தேசிய அரசானது நிலையான அரசியல் தீர்வொன்றை வழங்க விரைவான செயற்பாடுகளில் இறங்குமென்று நாம் நம்புகின்றோம். ஜனாதிபதி அந்தக் கைங்கரியத்தில் பின்நிற்கமாட்டார் என்றும் நம்புகின்றோம். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்று கிடைக்கும்வரை அமைச்சுப் பதவிகளையோ, வேறு எந்தப் பதவிகளையோ பெறப்போவதில்லை என்பதில் நாம் உறுதியுடையவர்களாக இருக்கின்றோம்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

தேசியப் பட்டியல் விவகாரம் – கூட்டமைப்புக்குள் முரண்பாடா?

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான முடிவு என்பது கூட்டமைப்பின் முடிவல்ல என்றும், அது தன்னிச்சையாகவும் ஒருதலைப்பட்சமாகவும் தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பிபிசியிடம் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் தோல்வியடைந்ததையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் ஒரு...

வவுனியா பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடி நடவடிக்கை!!

வவுனியாவில் நேற்றயதினம் (24.8.22015) பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் வவுனியா ஹொரவப்பொத்தான 2ஆம் கட்டைப் பகுதியில் கடையில் குடிதண்ணீர் வடிகட்டி போத்தலில் அடைத்து யாழ்ப்பாணத்திற்கு விநியோகம் செய்யவிருந்த நிலையில் கன்ரர் வாகனத்துடன் தண்ணீர் போத்தல் சகிதம் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. பொது சுகாதார பரிசோதகர்கள்...

இரணைமடுக்குள அணைக்கட்டுப் புனரமைப்பு

கிளிநொச்சி இரணைமடுக்குள அணைக்கட்டுப் புனரமைப்புப் பணிகளை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று திங்கட்கிழமை (24.08.2015) சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு இரணைமடுக்குளத்தில் இருந்து நீரை எடுத்து வருவதற்கு இணங்கினால் மாத்திரமே இரணைமடுக்குள அணைக்கட்டுத் திருத்த வேலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்ற நிபந்தனை முன்னர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இரணைமடுக்குளத்திலிருந்து நீரை யாழ்ப்பாணத்துக்கு...

நல்லூரானின் அதிசயம் !! திருட்டுப்போன ஓட்டோ திரும்ப வந்தது!!

நல்லூர்க் கந்தன் ஆலய உற்சவத்திற்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வருகை தந்து ஆலயப் பின் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவரின் முச்சக்கரவண்டி திருட்டுப் போயிருந்தது. இது தொடர்பில் முச்சக்கர வண்டி உரிமையாளர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் குறித்த முச்சக்கர வண்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (24.8.2015) அதே இடத்தில் கொண்டு...

யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் செய்ய சர்வதேச சமூகத்திற்கு எந்தவொரு உரிமையும் இல்லை – ரணில்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்ய சர்வதேச சமூகத்திற்கு எந்தவொரு உரிமையும் இல்லை என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சமூகம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளமை நாட்டின் நீதிதுறையின் மீது நம்பிக்கை குறைவடைந்தமையினாலேயே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் தி ஹிந்து ஊடகத்திற்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர்...

வடமாகாண சபைக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் தெரிவு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலையடுத்து வடமாகாண சபைக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி வடக்கு மாகாண சபை உறுப்பினர்களாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தர்மலிங்கம் சித்தார்த்தன், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர். சிவமோகன் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் ஆகியோர்...

மூன்று அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் மங்கள சமரவீர வௌிவிவகார அமைச்சராகவும் நீதி அமைச்சராக விஜயதாஸ ராஜபக்ஷவும் டி.எம்.சுவாமிநாதன் மீள்குடியேற்ற அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழ் அரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் விவரம்

இரண்டு தேசியப்பட்டியல் உறுப்பினர்களை தனதாக்கிக்கொண்ட அகில இலங்கை தமிழ் அரசுக் கட்சி அந்த இரண்டு உறுப்பினர்களின் பெயர்களையும் அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் கே. துரைரட்ணசிங்கம் (திருகோணமலை), சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா( வன்னி) ஆகிய இருவருமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாம் எமது கொள்கையில் உறுதியாக நின்று மக்களது வாழ்வாதரத்தை கட்டிஎழுப்ப உழைப்போம்- கஜேந்திரகுமார்

நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவக்கும் மக்கள் சந்திப்பு வட்டுக்கோட்டைத் தொகுதியில் குக்கிராமம் ஒன்றில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் அவர்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான...

அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்களது விடுதலைக்காக நாம் தொடர்ந்து குரல்கொடுப்போம்-கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்ட கட்சியின் ஒரு தொகுதி செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (22) வடமராட்சியில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேற்படி சந்திப்பில் கட்சியின் முக்கியஸ்த்தர்களான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்...

ஒரே மகனை கருணா குழுவினரே பிடித்துச் சென்றனர்! – ஆணைக்குழு முன் தாய் கண்ணீர்

மேசன் வேலைக்குச் சென்ற எனது மகன் இன்றுவரை வீடு திரும்பிவரவில்லை என தாயார் ஒருவர் கண்ணீர் சிந்தியவாறு ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார். வடிவேல் சிவகுமார் என்ற 27 வயதான எனது மகன், கடந்த 2007.11.09 அன்று எமது வீட்டிலிருந்து காத்தான்குடிக்கு மேசன் வேலைக்காகச் சென்றார். அவர் இன்றுவரை வீடு வந்து சேரவில்லை.அவர் வேலைக்குச் சென்ற இடத்திலும்,...

ஆலயத்தில் நிதிமோசடி

நீர்வேலி, வாய்காற்றரவை பிள்ளையார் ஆலய பூசகர்களினால் பாரியளவு நிதி மோசடி இடம்பெறுவது தொடர்பாக கோப்பாய் பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப்பழமை வாய்ந்த ஆலயமான வாய்காற்றரவை பிள்ளையார் கோயில் பொதுமக்களுக்கு உரிய ஆலயமாக காணப்படினும் இங்கு பூசை செய்யும் பூசகர்கள் மூவர் தமது பெயர்களுக்கு வெளிப்படுத்தல் உறுதி மூலம் முகாமைத்துவ...

மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத விதத்திலேயே நாம் ஆட்சி செய்கிறோம்! – சம்பூரில் ஜனாதிபதி

எமது புதிய அரசாங்கம் இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் இருக்கும் விதத்திலேயே ஆட்சி செய்கிறது எனத் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நேற்று சம்பூரில் மக்களின் காணிகளை கையளிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றிருந்தார். இதன்போது அவர் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தனது உரையில் யுத்தம் சத்தியத்தை இல்லாமல்...

வடமராட்சி மீனவரின் வலையில் சிக்கிய சடலம்!

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் மீனவர்களின் வலையில் சடலம் ஒன்று சிக்கியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கற்கோவளம் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் வலையில் இந்தச் சடலம் அகப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சடலத்தை அடையாளம் காண்பதற்காக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Loading posts...

All posts loaded

No more posts