சம்பூரில் இடம்பெயர்ந்த 234 குடும்பங்களுக்கு காணி உறுதி

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த 234 குடும்பங்களுக்கு காணி உறுதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றுமுன்தினம் (22) கையளிக்கப்பட்டன. இறுதி யுத்தத்தின் பின்னர் கடந்த அரசினால் விசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக முதலீட்டுச்சபைக்கு கையளிக்கப்பட்ட 818 ஏக்கர் காணியை புதிய அரசு மீண்டும் அரசுடையாக்கி மீண்டும் ஆரம்ப உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டது. அந்த காணிகளுக்கான காணி உறுதிகளே ஜனாதிபதியினால்...

கூட்டமைப்பு தேசியப்பட்டியல் இடங்களை பிரிச்சு வழங்க முடிவு! சுரேசுக்கு இல்லை?

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் தெரிவுக்காக இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒன்று திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களுக்கு முதல் இரண்டரை வருடம் என்றும் பின்னர் சாவகச்சேரி க.அருந்தவபாலனுக்கு இரண்டரை வருடம் எனவும் , மற்றையது திருகோணமலை திரு. க. துரைரெட்ணசிங்கம் அவர்களுக்கு என்றும் கூட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து வெளிவந்த இரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன ....
Ad Widget

கூட்டமைப்பு தேசியப்பட்டியல் உறுப்பினர்களில் ஒன்று முடிவாகியது மற்றது விவாதத்தில்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களை தீர்மானிக்கும் உயர்மட்ட கலந்துரையாடல் தற்பொழுது திருகோணமலையில் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரையான கலந்துரையாடல்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவில் போட்டியிட்டு தோல்வியடைந்த பெண் வேட்பாளரான சாந்தி சிறிஸ்கந்தராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மற்றவரை தேர்வு செய்யும் கலந்துரையாடல் தொடர்ந்து நடந்து வருகிறது. அதுபெரும்பாலும் கிழக்கு மாகாணத்திற்கே வழங்கப்படும் என எதிர்பார்க்கபப்டுகின்றது .

யாழில் இரு சடலங்கள் மீட்பு!

யாழ்.நகர் மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளிலிருந்து இரு சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி கேணியடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து எரிந்த நிலையில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தனித்து வசித்து வரும் இவருக்கு இன்று சனிக்கிழமை காலை உணவு கொடுப்பதற்காக அவரது மருமகன் அங்கு சென்ற போது வீட்டில் எரிந்த நிலையில் மூதாட்டியின்...

நல்லூர் ஆலயத்திற்கு செல்வோருக்கு பொலிஸாரின் அறிவுரை

நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் போது வீட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி விட்டு செல்லுமாறு யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.வூட்லர் தெரிவித்துள்ளார். தற்போது நல்லூர் திருவிழாக் காலம் ஆரம்பித்து உள்ளமையால் இந்துக்கள் அனைவரும் கோயில்களுக்கு சென்று வருவது வழமை. இரவு,பகல் மற்றும் அதிகாலை என பல நேரங்களில் கோவில் களுக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும் போது வீட்டில்...

தேசியப் பட்டியல் குறித்து முறுகல் நிலை : ஆதரவாளர்களால் சம்பந்தன் வீடு முற்றுகை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டினை கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் தொடர்பில் தொடர்ச்சியாக இழுபறி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய பட்டியல் தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தற்போது இரா.சம்பந்தனின் வீட்டினை வடக்கு மற்றும் கிழக்கினைச் சேர்ந்த கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது, தேசிய பட்டியல்...

இந்திய றோலர்களைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை வேண்டும்

இலங்கை கடற்பரப்புக்குள் குறிப்பாக வடபகுதி கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய றோலர் படகுகளைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கையை இலங்கை மத்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்கள் கொடுக்க வேண்டும் என இலங்கை கடலுணவுகள் ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்தது. அந்தச் சங்கத்தின் கடலுணவு ஆய்வாளர் ஸ்ரீவ்...

புலமைப்பரிசில் பரீட்சைக்கு இடையூறுகள் ஏற்படின் அறிவிக்கவும்

நாளையதினம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் காலை 9.30 மணிக்கு முன்னரே பரீட்சை நிலையத்துக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இம்முறை 2,907 பரீட்சை நிலையங்கiளில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் 3,400,930 மாணவர்கள் பரீட்சைக்கு எழுதவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நடைபெறும் போது ஏதாவது இடையூறுகள் ஏற்படுமாயின்...

காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 6 வயதுச் சிறுவன் திடீர் மரணம்!

காய்ச்சலால் பீடிக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட சிறுவன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென மரணமானான். சம்பவம் பற்றித் தெரியவருவதாவது - கடந்த 18ஆம் திகதி காய்ச்சல் காரணமாக இந்தச் சிறுவன் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தான். காய்ச்சல் மாறாத நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் காய்ச்சல்...

மக்கள் ஆணையை மைத்திரி, ரணில் நிறைவேற்றவேண்டும்! தேவையான ஒத்துழைப்பை கூட்டமைப்பு வழங்கும்!!

"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும், அவர்கள் தலைமையில் உருவாகும் தேசிய அரசும் நாட்டின் நல்லாட்சிக்காக மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றவேண்டும். அத்துடன், நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தாமதமின்றி உடன் தீர்வைக் காணவேண்டும். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிபூரண ஆதரவை - ஒத்துழைப்பை வழங்கும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

பனம் பொருள் உற்பத்தியாளர்களுக்கான இலகு கடன் திட்டம்!

பனம் பொருள் உற்பத்தியில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபா வரையிலான இலகு கடன் வசதியும் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான வசதியையும் வழங்குவதற்கு பனை அபிவிருத்திச் சபை முன்வந்துள்ளது. பனம் பொருட்களை மூலப் பொருட்களாகக் கொண்டு பாவனைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் முயற்சியை அபிவிருத்தி செய்யும்...

அதிக நேர வேலை – மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து!

மனிதரொருவர் அதிகமான நேரம் வேலை பார்ப்பதற்கும் அவருக்கு மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக புதிய ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளது. ஐரோப்பா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஆகிய நாடுகளில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் வேலை நேர மற்றும் உடல் நலத் தரவுகளை ஆராயும் போது வாரத்திற்கு 55 மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை...

எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தன்?

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சியும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சியும்  இணைந்து இணக்கப்பாட்டு அரசு ஒன்றினை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது . அதன்போது அமைச்சரவை இருபுறமும் பகிரப்பட வாய்ப்புள்ளது.எதிர்க்கட்சிக்குரிய அந்தஸ்தினை 3வது பெரிய கட்சியான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பெற்றுக்கொள்ள...

தேசியப்பட்டியலி்ல் அங்கஜன் பாராளுமன்ற உறுப்பினராகின்றார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில்  வடமாகாணசபையின் உறுப்பினரும் இந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரான அங்கஜன் இராமநாதன் பாராளுமன்ற உறுப்பினராகின்றார். சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித் விஜிதமுனி சொய்சா, எஸ்.பி. திஸாநாயக்க, மகிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, திலங்க...

விபத்துக்களை ஏற்படுத்தும் மின்கம்பங்களை அகற்றுமாறு கோரிக்கை

ஆவரங்கால் சந்தியில் இருந்து அச்சுவேலி வைத்தியசாலை வரை, வீதியின் இருமருங்கிலும் நடப்பட்டிருந்த பழைய மின்கம்பங்களை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் ஆரம்பகாலத்தில் நடப்பட்ட மின்கம்பங்களில் இருந்து மின்சாரம் வழங்கப்படுவது துண்டிக்கப்பட்டு வீதிகளின் அருகில் உள்ள காணிகள் ஊடாக அப்பகுதிகளில் புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், அங்கு ஏற்கெனவே இருந்த பழைய மின்கம்பங்கள்...

நல்லூர் உற்சவம்: 300 கடைகள் அமைக்க அனுமதி

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழாவின் போது ஆலயச் சூழலைச் சுற்றிலும் சுமார் 300 கடைகள் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கவுள்ளதாக யாழ். மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகி 25 தினங்களுக்கு நடைபெறவுள்ளது. மஹோற்சவ காலத்தில் ஆலய வளாகத்தில் கடைகள் அமைப்பதற்கான...

மர்மப் பொருள் வெடித்ததில் இருவர் படுகாயம்

சரசாலை பகுதியில் இன்று (21) காலை மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேயிடத்தைச் சேர்ந்த சடையன் வர்ணன் (வயது 27), வர்ணன் பேபிராணி (வயது 25) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர். இதில் மனைவி முகத்தில்...

யாழ் பிரபல பாடசாலை மாணவன் கஞ்சாவுடன் கைது!

6.396 மில்லிகிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள பிரபலமான பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் பாடசாலை மாணவனை அரச சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன, வியாழக்கிழமை (20) உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சிவில் உடையில் சென்ற பொலிஸார்...

தொடர்ந்து அரசியலில் நீடிப்போம் – ஜனநாயகப் போராளிகள் கடசி

தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும்கூட, தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக ஜனநாயகப் போராளிகள் கடசியின் இணைப்பாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் கூறியுள்ளார். ராணுவப் புலனாய்வாளர்கள் தங்களை ஏவியிருப்பதாகக் கூறி கூட்டமைப்பு தங்களைப் புறக்கணித்தது என்கிறார் வித்யாதரன். அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிந்தபோது, ராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சியளிக்கப்பட்டதன் பின்னர், சமூகத்தில் இணைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின்...

தேசிய அரசாங்க ஒப்பந்தம் கைச்சாத்து – இலங்கைக்குள் வேறு தேசத்தை உருவாக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை ரணிலின் சூளுரை

சமரச தேசிய அரசாங்கமாக புதிய பாராளுமன்றில் ஒன்றிணைந்து செயற்படவென ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் , அதே நிகழ்வில் ஐதேக பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் பொதுச் செயலாளர்...
Loading posts...

All posts loaded

No more posts