கூட்டமைப்பு ”ஈபிஆர்எல்எப்” “புளொட்” அமைப்புக்களை புறக்கணித்தது! நிஸா பிஸ்வால் சந்திப்பில் உறுதியானது!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆயினும்...

த.தே.கூ காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும்! – சுரேஷ்

நடைபெற்று முடிந்த தேர்தல் மற்றும் தேசிய பட்டியல் தெரிவில் இலங்கை தமிழரசு கட்சி தன்னிச்சையாக செயற்படுமாயின் கூட்டாக இயங்கும் ஏனைய கட்சிகளுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை இல்லாமல் போய்விடுமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நீர்வேலி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...
Ad Widget

லைக்கா கிராம வீட்டுத்திட்டம் தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் – சம்பந்தன்

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் பூந்தோட்ட முகாம் மக்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வவுனியா வடக்கு சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் அமைக்கப்படும் லைக்கா கிராமத்தின் பணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். லைக்கா கிராம வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நிஷா பிஸ்வால் சந்திப்பு

இரண்டு நாள் உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று புதன்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்தித்தார். இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்....

யாழ்.நீதிமன்ற தாக்குதல் : நால்வருக்குப் பிணை – ஏனையோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதானவர்களில் மேலும் நால்வருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில் கைதான 28 சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த சந்தேக நபர்கள் 28 பேரும் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து நால்வருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது....

வடக்கில் பிரபாகரனுக்கு சிலை : விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் கனவு நன­வாகின்றது!!

வடக்கில் பிர­பா­க­ரனின் சிலை அமைக்­கப்­பட வேண்­டு­மென்ற விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் கனவு இன்று நன­வாகிக் கொண்­டி­ருக்­கின்­றது. வடக்­கி­லி­ருந்து இன்று சிங்­க­ள­வர்கள் வெளி­யேற்­றப்­ப­டு­கின்­றனர் எனத் தெரி­வித்த பிய­கம சுசில தேரர், தூங்கிக் கொண்­டி­ருக்கும் சிங்­கத்தை தட்­டி­யெ­ழுப்ப வேண்டாம் என நான் அர­சுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கிறேன் என்றும் தெரி­வித்தார். பிட்­ட­கொட்டே பாகொட வீதியில் தூய்­மை­யான ஹெல உறு­ம­யவின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில்...

காணாமல் போன மீனவரை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியை மறித்து ஆறாம் கட்டை எனும் இடத்தில் பொதுமக்கள் மற்றும் மீனவர் சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 26.08.2015 காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந்த வீதி மறியல் போராட்டமானது 11 மணிவரை இடம்பெற்றது. திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சல்லி கிராமத்தில் இருந்து கடற்தொழிலுக்காக கடந்த...

புதிய அமைச்சரவையில் 45 அமைச்சர்கள் – நாளை பதவியேற்பு நடக்குமா?

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை 45 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்கும் என்று, ஐதேகவின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தில், ஐதேகவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அமைச்சர் ஆசனங்களைப் பங்கீடு செய்வதில் குழப்பமான நிலை நீடித்து வருகிறது. இருதரப்பும் இன்னமும் இணக்கப்பாடு ஒன்றுக்கு வராத நிலையில், ஏற்கனவே அமைச்சரவை பதவியேற்பு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது....

கட்சியின் செயலாளருக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளேன் – அங்கஜன்

தனது இராஜினாமா கடிதத்தை ஐக்கிய மக்கள சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினராகவிருந்த அங்கஜன் இராமநாதன் தனது இராஜினாமாக் கடிதத்தை வடமாகாண சபைக்குச் சமர்ப்பிக்கவில்லையென அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் செவ்வாய்க்கிழமை (25) சபையில் தெரிவித்திருந்தார்....

5500 பட்டதாரிகளுக்கு அரச சேவையில் நியமனம்

அரச சேவையில் 5500 பட்டதாரிகளுக்கு புதிதாக நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச துறையில் தொழில்வாய்ப்பு கிடைக்காதவர்கள் முன்வைத்த மேன்முறையீட்டுக்கு அமைய, இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே, கடந்த காலத்தில் விண்ணப்பித்து வாய்ப்பு கிடைக்காதவர்கள் இம்முறை உள்ளடக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். இவர்களுக்கான நியமனக்...

வடமாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மாகாணசபை நடவடிக்கை எடுக்கும் : வடக்கு முதல்வர்

வடமாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வடமாகாண சபை உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற மாகாண சபையின் 33ஆவது அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் சி்.தவராசா எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பின்னர் மாகாண,...

இலங்கையில் உற்பத்தியாகும் கொக்கோ-கோலாவின் அனுமதிப் பத்திரம் இடைநிறுத்தம்!

இலங்கையில் தயாரிக்கப்படும் கொக்கோ - கோலா (பெரரேஜஸ்) நிறுவனத்தின் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக ரத்து செய்யவுள்ளதாக மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி தெரிவித்தார். கொக்கோ - கோலா நிறுவனம் தனது உற்பத்திக்கான நீரை களனி கங்கையில் இருந்தே பெறுகின்றது. இந்நிலையில் களனி கங்கையில் எண்ணெய் கலந்திருப்பது அண்மைய...

தேசிய அரசில் ஈ.பி.டி.பியையும் சேருங்கள்! ஜனாதிபதியிடம் டக்ளஸ் கோரிக்கை!!

தேசிய அரசாங்கத்துடன் ஈ.பி.டி.பியையும் சேர்க்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே டக்ளஸ் தேவானந்தா இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். இதே கோரிக்கையை ரணில் விக்கிரமசிங்கவிடமும் அவர் விடுத்திருந்தார் எனத் தெரிய வருகின்றது. எனினும் ஜனாதிபதியை டக்ளஸ் சந்தித்தமையை மாத்திரம் ஜனாதிபதியின் ஊடகச்...

முல்லைத்தீவில் அரச போக்குவரத்து பஸ்ஸைக் கடத்திய இருவர் கைது!

முல்லைத்தீவு போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான கடத்தப்பட்ட அரச போக்குவரத்து பஸ் ஒன்று ´ஹோஹம்ப´ என்னும் இடத்தில் வைத்து மீட்க்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அரச போக்குவரத்து பஸ் ஒன்று ​நேற்று அதிகாலை, சேவையில் ஈடுபடும் நோக்கில் கொக்கிளாய் என்னும் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதனை இரு நபர்கள் நேற்றிரவு (செவ்வாய்கிழமை) 7.30 மணியளவில் கடத்திச் சென்றிருந்தனர்....

நிஸா பிஸ்வால் – ஜனாதிபதி சந்திப்பு

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேலும் கடந்த தேர்தலை நியாயமானதும் மற்றும் சுதந்திரமானதுமான முறையில் நடத்தியமை குறித்து நிஸா பிஸ்வால் தனது பாராட்டுக்களை...

வடக்கின் விவசாயத்தில்சிங்கள நியமனங்கள் மீளப்பெறாவிடில் போராடுவோம் – பொ.ஐங்கரநேசன்

வடக்கில் விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி உதவியாளர்களாக மிகப்பெரும் எண்ணிக்கையில் சிங்களவர்களை நியமித்திருப்பது சாதாரணமான ஒரு விடயமல்ல. தமிழ்மக்களின் விவசாயத்துக்கு,தமிழ்மக்களின் பண்பாட்டுக்கு, தமிழ் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்புக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்த நியமனங்களை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும். இல்லாவிடில், அதற்கெதிராக நாம் போராடுவோம் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையின் 33ஆவது...

சிவாஜியின் பிரேரணையை நிராகரித்தார் அவைத்தலைவர்

இலங்கை தீவில் உள்ள தமிழ்,சிங்கள மக்களின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கு சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் அழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் சபை அமர்வில் முன்மொழியப்பட்ட பிரேரணை அவைத் தலைவரினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 33ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண...

சம்பூர் மீள்குடியேற்றத்திற்கு அமெரிக்கா நிதி!

சம்பூர் மீள்குடியேற்றம் மற்றும் அம் மக்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒரு மில்லியன் டொலர்களை மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிஸா பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார். இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று காலை வௌிவிவாகர அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்தார். வௌிவிவகார அமைச்சில் நடைபெற்ற...

வடமாகாணசபை உறுப்பினரின் வினோத போராட்டம்

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட 200 இற்கு மேற்பட்ட தீர்மானங்களுக்கு என்ன நடந்த்து? குறித்த தீர்மானங்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எனக்கேட்டு மாகாண சபை உறுப்பினர் ஜீ்.ரி.லிங்கநாதன் விநோத போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். மாகாண சபையின் 33 வது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை...

செய்தி இணையத்தளங்கள் தொடர்பில் வடமாகாணசபை அவதானம்

தன்னிச்சையாக இயங்கும் இணையத்தள ஊடகங்கள் அவதூறான செய்திகளை வெளியிடுவதனால், அந்த ஊடகங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு முன்வைக்கப்பட்ட பிரேரணை ஒன்று வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபை கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை கூடியபோது, வடமாகாண சபையின் உறுப்பினர் ஐயதிலக வடமாகாணத்தில் உள்ள சில ஊடகங்கள் தன்னிசையாக, அவதூறான செய்திகளை வெளியிட்டு வருவதனால், அதனைத் தடுக்கும் வகையில்,...
Loading posts...

All posts loaded

No more posts