- Wednesday
- July 23rd, 2025

உள்நாட்டு விசாரணையினை நிராகரிப்பதுடன், சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி போராட்டத்தினை முன்னெடுக்க ஈழத் தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு வழங்குமாறு வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவின் உதவி இராஜாங்க...

இலங்கையில் போர்க்கால குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கு நடக்கக்கூடிய உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சற்றும் நம்பிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் விசாரணை ஆணைக்குழுக்களில் ஆஜராகி வாதிட்டு வந்துள்ள மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேல் கூறுகின்றார்.கடந்த கால அனுபவங்களே இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் என்றும் பிபிசி தமிழோசையிடம் அவர் தெரிவித்தார். இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும்...

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசகர் மரிக்கோ யமமொடோ, வியாழக்கிழமை (27) யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டு, வலிகாமம் வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மீளக்குடியமர்ந்த மக்களின் தேவைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மீள்குடியமர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்ட அரச உதவிகள், முகாம்களில் எவ்வளவு காலம் இருந்தமை என்பது தொடர்பிலும்...

வடமாகாண கால்நடை அமைச்சின் 'தகர்' திட்டத்தின் மூலம் நல்லூரைச் சேர்ந்த 30 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நல்லின ஆடுகள் நேற்று வியாழக்கிழமை (27.08.2015) வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 'தகர்' என்பது ஆடுகளைக் குறிக்கும் பழந்தமிழ்ப் பெயர் ஆகும். இதனைப் பெயராகக் கொண்டு 'தகர் வளர் துயர் தகர்' என்ற தொனிப்பொருளில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்...

இலங்கையில் வாழும் தமிழ்மக்கள் கல்வியில் பின்னடைவு என்பது கவலைக்குரிய விடயமாகும். அதாவது போர் மற்றும் பிரதேசத்தின் பின்தங்கிய நிலை காரணமாகவும் கல்வியில் சற்று பின்தங்கி நிற்கின்றோம் என யாழ்.பல்கலையின் முன்னாள் வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார். யாழ்.பிரதேச செயலகத்தில் பாடசாலைக்கல்வியில் இடைவிலகிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...

வடமாகாணம் ஒரு காலத்தில் கல்வியில் சிறந்த விளங்கியது. ஆனால், இன்று அந்நிலை மாறியுள்ளது. இலங்கையில் வடக்கு மாகாணமே பாடசாலையிலிருந்து விலகியர்கள் அதிகளவானவர்கள் உள்ள மாகாணமாகவுள்ளது. அடுத்தாக கிழக்கு மாகாணம் உள்ளது என யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார். பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலை செல்ல ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்...

தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய தேர்த்திருவிழாவில் சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருட்டுப்போயுள்ளதாக ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட நிலையில் சுமார் இரண்டு பவுண் நிறையுடைய தங்கச்சங்கி ஒன்றும் மற்றும் ஏழரை பவுண் நிறையுடைய தாலிக்கொடி ஒன்றும் திருட்டுப்போயுள்ளதாக...

உள்ளக விசாரணை என்பது ஒரு சிலருக்கு தண்டனை கொடுப்பதுடன் முடிந்து விடும். தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வைக் கொண்டு வராது. ஆகவே இந்த விசாரணை சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற...

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா கூறினால், அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. நாங்கள் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போன்று சர்வதேச விசாரணையையே தொடர்ந்து கோருவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தை பகிருமாறு கோரவில்லை என்றும், அதிகாரத்தை ஒப்படைக்குமாறு தான் வலியுறுத்துவதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அவர் தனது நேர்காணலில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது- அதிகாரப் பகிர்வின் போது வழங்கிய அதிகாரத்தை மீண்டும்...

யாழ் மாவட்டத்தில் வறுமையால் பாடசாலையை விட்டு இடைவிலகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மற்றும் இடைவிலகிய மாணவர்கள் தமது கல்வியை இடைவிடாது தொடரும் வகையில் யாழ்ப்பாண வணிகர் கழகத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. யாழ்.பிரதேச செயலகத்தில் வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.ஜெயசேகரம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் முன்மொழிந்துள்ள உள்ளகப் பொறிமுறைக்கு ஆதரவு வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளமை குறித்து தமிழ் சிவில் சமூக அமையம் அதிர்ப்தி வெளியிட்டுள்ளது. எனினும் அமெரிக்காவின் இந்த தீர்மானம் தமக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என அமையத்தின் பேச்சாளர் ஆர் கே...

அண்மையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்திய சர்வதேச தர அங்கீகாரம் மிக்க கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதில் அதிக காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் விண்ணப்பதாரிகள் அல்லாத ஏனையோருக்கு திணைக்களத்தின் உள்வளாகத்திற்குள் செல்ல அனுமதி வழங்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகபேச்சாளர் லக்ஷான் டி சொய்ஸா தெரிவித்துள்ளார் இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை கைளிப்பதற்காக விரைவில் கொழும்பு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நாவின் 30வது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில், அதற்கு முன்னர் அதனை இலங்கை ஜனாதிபதியிடம் கைளிப்பதற்காக அவர் வருகை...

ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று மதியம் 12.30 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். வலிகாமம் வடக்கில் அண்மையில் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட வீமன்காமம், வறுத்தலை விளான் ஆகிய பகுதிகளுக்கு ஜரோப்பிய குழு விஜயம் மேற்கொண்டிருந்தது. இதேவேளை யாழ்.மாவட்டத்தில் மேற்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன்...

திருமணம் மற்றும் விசேட நிகழ்வுகள் நடைபெறும் மாதமாக ஓகஸ்ட் மாதம் இருப்பதால் யாழ்ப்பாணத்தில் திருமண மண்டபங்களுக்கு பெரும் தட்டுப்பாடடு நிலவுகின்றது. வீடுகளில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகள் நடைபெறும் வழக்கம் மாறி, மண்டபங்களில் நடத்தும் கலாசாரம் யாழ்ப்பாணத்தில் தற்போது பரவலாக பரவி வருகின்றது. திருமண மண்டபங்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஆலயங்களிலும் திருமண மண்டபங்கள் அமைக்கப்படுகின்றன....

வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் வடமாகாண தமிழ் இலக்கியப் பெருவிழாவுக்கான ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் எமது கலை இலக்கியங்களில் சமகால நிலைமையினை மதிப்பிடுவதும் எதிர்காலத்துக்கான செயல்நெறியினை இனங்காண்பதையும் நோக்காகக்கொண்டு ஆய்வரங்கு இடம்பெறவுள்ளது. 'ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய பண்பாட்டுத் தளத்தில் உலகமயமாதல் உள்ளூர் மயமாதலும்' என்ற கருப்பொருளிலே ஆய்வுக்...

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் புதன்கிழமை (26) இரவு இடம்பெற்றதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். மல்லாகம், நாக்கியபுலத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ஜெயராசா (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புகையிரதம் வரும் வேளையில் ரயில் பாதையை கடக்க முற்பட்ட போது...

மனைவியை அடித்து போத்தலினால் கழுத்தில் குத்தி கொலை செய்த கணவருக்கு தூக்குத்தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யாழ். மேல் நீதிமன்றில் இன்று குறித்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னரே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு, சித்திரை மாதம் 23 ஆம்...

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, இலங்கைக்கு ஆதரவளிக்கப்போவதாகவும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு உள்ளகப் பொறிமுறையொன்றை வலியுறுத்தவுள்ளதாகவும் அமெரிக்கா நேற்று புதன்கிழமை (26) அறிவித்தது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக்...

All posts loaded
No more posts