- Sunday
- February 22nd, 2026
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமான கலந்துரையாடல் ஒன்று நேற்று புதன்கிழமை வட மாகாண போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது. வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனின் திட்டத்திற்கு அமைவாக, வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டத்தில் யாழ் மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர்...
இலங்கையில் ஐந்து தசாப்த காலமாக நீடிக்கும் இன, மொழிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய அரசியல் கட்சிகளுடன் ஏற்கனவே நாங்கள் பேச்சுக்களை ஆரம்பித்து விட்டோம். - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து தசாப்த காலமாக இலங்கையில் மொழி மற்றும் இனப்பிரச்சினை முக்கிய விவகாரங்களாக இருந்ததுடன் கடந்த...
வடமாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ளவர்களும் வடமாகாணத்திலுள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை பெற்றுக்ககொள்ள முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், கணினியின் உபயோகத்துடன் பிறப்பு,இறப்பு மற்றும் விவாக சான்றிதழினை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம்,மன்னார்,வவுனியா,கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய...
யாழ்.தேவி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதி வழியான 392 வது கிலோ மீற்றர் கட்டையை அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் குருநகர் பகுதியைச் சேர்ந்த தேவசகாயம் ஏனோக் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று காலை...
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும், விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறும் யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு. கே. ஜயலத் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்....
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வௌியாகியுள்ள நிலையில், இவற்றில் மீள் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் எதிர்வரும் 23ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் பாடசாலை அதிபர் ஊடாக குறித்த விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விபரங்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்...
யாழ்.மாவட்ட நலன்புரி நிலையங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றில் நிலையியற் கட்டளை 23/2 நேற்றைய தினம் எழுப்பிய வினா யாழ்.மாவட்டத்தில் 32 நலன்புரி நிலையங்களில் 1318 குடும்பங்களில் 4737 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றார்கள். இவர்களுடைய அடிப்படைத் தேவைகள் தொடர்பில் உரிய தரப்பினர் காலத்திற்குக்காலம் தேவையான நடவடிக்கைகளை போதியளவு எடுக்கவில்லையென்பதனை அறியத்தருவதுடன், யாழ்மாவட்டத்தில் யுத்தம்...
யாழ்ப்பாண மாவட்டம் 2015 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில், யாழ். சென் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவர் சோதிநாதன் வசீகரன் 192 புள்ளிகள் பெற்று யாழ். மாவட்ட ரீதியாக முதலிடத்தினை பெற்றுள்ளார். [caption id="attachment_51180" align="aligncenter" width="365"] சோதிநாதன் வசீகரன்[/caption] யாழ். சென் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவர்களான கனகராஜ் கவிலக்ஷன் 188...
நாடாளுமன்ற ஒத்திவைப்புப் பிரேரணையில் அதி உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்ட வாதப் பிரதிவாதங்களின்போது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றைய தினம் (06) ஆற்றிய உரை கௌரவ சபாநாயகர் அவர்களே…. இன்றைய நாளில் எமது எதிர்காலச் சந்ததியினரின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலம் தொடர்பாக...
வேலை முடிவடைந்து வீடு திரும்பும் வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் கும்பலின் வாள் வெட்டுக்கு இலக்காகிய இளைஞர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை படுகாயமடைந்தார். படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சேர்க்கப்பட்டுள்ளார். சுன்னாகம் ஜயனார் கோவிலடியைச் சேர்ந்த தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் சிவனேந்திரன் தர்மதாசன் (வயது 26) என்பவரே கையிலும் காலிலும்...
கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு கூட்டுறவுப் பாலியல் வல்லறுவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் எதிரிகளான 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு வன்னிப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோது, இராணுவத்தினரால், விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப்பாலியல்...
ரயில் ஒன்று தடம்புரண்டதால் பாதிக்கப்பட்ட வடக்கு ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. வடக்கு ரயில் பாதையின் அம்பத்பொல - கல்கமுவ வரையான பகுதியில் ரயிலொன்று நேற்று தடம்புரண்டது. இதனால் வட பகுதிக்கான இரவு நேர தபால் ரயில்கள் நான்கும் இரத்துச் செய்யப்பட்டன. இதனையடுத்து நேற்று நள்ளிரவு 12.30 அளவில் தடம்புரண்ட ரயில் மீண்டும் சீர்செய்யப்பட்டது, என்பது...
மாணவி வித்தியா, சிறுமி சேயா கொலையாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்கக்கோரி இலங்கை போக்குவரத்துசபையினரின் ‘யாழிலிருந்து கொழும்பு வரையான பாதயாத்திரை’ வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை நேற்று (06.10.2015) சென்றடைந்தது. பாதயாத்திரையில் கலந்துகொண்டவர்களை குளிர்பானம் வழங்கி வரவேற்ற வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது ஆதரவை தெரிவித்து கையெழுத்திட்டார். இக்கடினமான நீண்டதூர பாதயாத்திரையை முன்னெடுத்துவரும் இலங்கை போக்குவரத்துசபையை...
வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு நேரடியாக நிதியுதவி பெற்றுக் கொள்வதற்கான மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக சிங்கள நாளிதழான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தின் அதிகாரத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய பின்னர், மாகாணத்தின் அபிவிருத்திக்கு வெளிநாடுகளின் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பாக வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடம் முதலமைச்சர்...
யுத்த காலத்தில் வடக்கில் பெண்கள் பாதுகாப்பாக இருந்ததோடு நள்ளிரவிலும் கோவில் திருவிழாக்கள் முடிந்து வீடு திரும்பும் நிலை காணப்பட்டது. ஆனால் இன்று பெண்கள் வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கே அஞ்சுகின்றனர் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மரண தண்டனை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தில் உரையாற்றும்...
எனது வீட்டைப் பொறுத்தவரையில் அப்பாவோ கணவரோ சிகரட் புகைக்கும் பழக்கம் இல்லாதவர்கள். என்றபோதும் எனது நான்கரை வயதேயான குட்டி மகன் பல்குத்தும் குச்சியை அடிக்கடி எடுத்து விளையாடும் போது தனது வாயில் ஒரு பக்கத்தில் வைத்து கொள்வதை என்னால் அவதானிக்க முடிந்தது. அது ஆபத்தானது என்பதனால் அதனை கண்காணாத இடத்தில் ஒழித்து வைத்தேன். ஆனால் என்...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் 2,500 ரூபாய் புலமைப்பரிசில் 4,000 ரூபாயாக அதிகரிக்க பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாபொல புலமைப்பரிசில் தொகையை 2,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக அதிகரிக்கவுள்ளதால் அதனுடன் ஒப்பிட்டு இதனை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் 2016ஆம் ஆண்டுக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எந்திரவியல் தொழில்நுட்பவியலாளர் கற்கைநெறிகள் என்னும் வகைக்குள், படவரைவியலுக்கான தேசிய சான்றிதழ், குடிசார் எந்திரவியல், மின்னியல் மற்றும் இலத்திரனியல் எந்திரவியல், கனிய அளவையியல், பொறிமுறை எந்திரவியல் (ஓடோ மொபைல்) ஆகிய கற்கை நெறிகள் உள்ளன. வர்த்தகத்துறை கற்கை நெறிகள் என்னும் வகைக்குள் தேசிய கணக்கீட்டு...
நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளுக்கு கலாசாரத்துக்கு ஒத்துவராத ஆடைகளுடன் வந்த ஆண்கள் ஐவருக்கு, தலா 500 ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, திங்கட்கிழமை (05) தீர்ப்பளித்துள்ளார். நீதிமன்ற வழக்குக்கு வந்திருந்த நபர்களின் ஆடை தொடர்பில் வியாக்கியானம் தெரிவித்த நீதவான், குறித்த ஐவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு நீதிமன்ற பொலிஸாருக்கு...
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மருந்தகங்களில் பணியாற்றுவதற்கு மருந்தாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், மருந்தகங்களை கொண்டு நடத்துவதற்கு, மருந்தக உரிமையாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன. இலங்கையில் சுமார் 30 ஆயிரம் மருந்தகங்கள் இருக்கின்றபோதும், பதிவு செய்யப்பட்ட மருந்தாளர்கள் என சுமார் 7 ஆயிரம் பேர் மாத்திரமே காணப்படுகின்றனர். மருந்தாளர்கள் கற்கைநெறிகளை பூர்த்தி செய்பவர்கள் மருந்தகங்களில் பணியாற்றுவதற்கு முன்வருவதில்லை. மாறாக அரச...
Loading posts...
All posts loaded
No more posts
