- Sunday
- February 22nd, 2026
வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 100 தொண்டர் ஆசிரியர் வடமாகாண சபையின் முன்பாக வியாழக்கிழமை (08) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பல...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அரசு வழங்கிய வாக்குறுதிக்கமைய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவில்லை என்று நாடாளுமன்றில் அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நாவில் அரசு எழுத்துமூலம் வழங்கிய வாக்குறுதிகளை செயல்வடிவாக்கி உண்மையாக மனப்பூர்வமாக நிறைவேற்றவேண்டும் என்றும், இந்தச் செயற்பாடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக அமையைவேண்டும் என்றும்...
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் தொடர்பான விடயத்தை சட்டரீதியாக மட்டுமே பாராது, நடைமுறைக்கு சாத்தியமான ரீதியிலும் கவனத்திலெடுத்து அவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. ஜோசப் பரராஜசிங்கத்தை கொலைசெய்த கொலையாளி உள்ளடங்கலாக இலங்கையில் பாரதூரமான குற்றங்களைப் புரிந்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்று...
யாழ். மாவட்டத்தில் இந்திய வர்த்தகத்தினை மேம்படுத்துவதற்கான விஷேட மாநாடு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், இந்தியாவைச் சேர்ந்த இளம் வர்த்தகர்கள் 44 பேர் கலந்துகொண்டிருந்தனர். ´யாழில் வியாபாரத்தினை மேம்படுத்தல்´ எனும் தொனிப்பொருளில், இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், இலங்கைக்கான...
பேஸ்புக்கில் ஒரு படத்தையோ அல்லது கருத்தையோ பதிந்துவிட்டு, அதை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள் என்று அடுத்தவர்களின் அங்கிகாரத்திற்காக ஏங்குவது பலருக்கு ஒரு மனநோயாக மாறிவிட்ட நிலையில், லைக் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன் அறிமுகப்படுத்தப்படுவது பற்றி பரிசிலித்து வருவதாக கடந்த மாதம் மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது பேஸ்புக்கில் டிஸ்லைக்...
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து கலப்பு நீதிமன்றம் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என மீண்டும் நினைவூட்டுவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். தேசிய நீதிமன்ற அமைப்பில் இணைக்கப்பட்ட தேசியப் பொறிமுறை மூலமே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று கொழும்பில்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு பகுதியில் வைத்து இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். 2005ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதி மட்டக்களப்பிலுள்ள தேவாலயம் ஒன்றில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம்...
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் நடைபெற்ற வன்முறைகள் மற்றும் அழிவு யுத்தத்தின் காரணமாக உயிரிழந்த உறவுகளை நினைவு கூற ஒரு பொது தினம் அவசியம். அதேபோல் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து மரியாதை செய்வதற்குப் பொதுவான நினைவுத் தூபி ஒன்றும் வடமாகாணத்தின் ஓமந்தைப்பகுதியில் பொருத்தமான இடத்தில் நிறுவவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்...
மல்லாகம் புகையிரத நிலையத்தில் அடிப்படை வசதிகள் எவையும் செய்யப்படாமையால் புகையிரதப் பாயணிகள் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகி வருகின்றார்கள். தற்போது யாழ்ப்பாணத்தில் மழை காலம் ஆரம்பித்துள்ளது இந்த நிலையில் புகையிரத நிலையத்தில் பயணிகள் தரித்து நிற்பதற்குக் கூட புகையிரத மேடையில் கூரைகள் எவையும் அமைக்கப்படாமையால் பயணிகள் மழை பெய்யும் வேளையில் பலத்த சிரமத்துக்கு உள்ளாகின்றார்கள். புகையிரத நிலைய...
கோண்டாவில் டிப்போவில் நிறுத்துவதற்காக இரவு கொண்டு செல்லப்பட்ட பஸ் வண்டியின் மீது இனந் தெரியாதவர்கள் மேற்கொண்ட கல்வீச்சு தாக்குதலில் ஒரு பஸ் வண்டியின் கண்ணாடிகள் உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு 9 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் பயணிகளை இறக்கிவிட்டு கோண்டாவில் சாலையில் நிறுத்துவதற்காக வந்த வேளையில் டிப்போவுக்கு அண்மையாக...
சேகுவாராவின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை ஒரு தொகுதி நூல்கள் யாழ் பொது நூலகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் சோசலிச இளைஞர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நூல்களை யாழ். பொதுநூலக பிரதான...
நிரந்தர நியமனம் கோரி வடமாகாண சபை முன்பு தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று காலை 09.00 மணி முதல், வன்னியின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மடு, வவுனியா வடக்கு மற்றும் துணுக்காய் ஆகிய ஐந்து கல்வி வலயங்களைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பல வருடங்களாக நியமனம் கிடைக்கும் என...
ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டமைக்கு இணங்க மரண தண்டனை நிறைவேற்றல் தீர்மானத்தை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். விரைவில் நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றம் அமுலுக்கு வரப்போகிறது என்ற தகவல்கள் வெளியான நிலையிலேயே இந்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையின்பேரில்...
பாராளுமன்றத்தின் அமர்வுகள் இன்று(08)வியாழக்கிழமை முதல் தேசிய ரூபவாஹினியூடாக நேரடி ஒளிபரப்புச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1.00 மணிமுதல் இரவு 7.30 மணிவரையான செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையான அமர்வுகளின்போது முதல் இரண்டு மணிநேரத்துக்கே இவ்வாறு நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகார தெரிவுக்குழு கூட்டத்திலேயே மேற்படி...
ஜனாதிபதி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் புனரமைப்பு பணிகள் மற்றும் உத்தியோகபூர்வ வாகனம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் குறித்து ஜனாதிபதி செயலாளர் பி.பீ அபேகோன் அறிக்கை மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தல புனரமைப்பு மற்றும் வேறு செயற்பாடுகளுக்காக 180 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க அண்மையில் நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்தை அடுத்து இந்த தகவல்...
வருடந்தோறும் நடைப்பெற்று வருகின்ற முரளி கிண்ணம் கிரிகெட் சுற்றுப் போட்டி 2015 நேற்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. நேற்று காலை ஒன்பது மணிக்கு இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் குமார் சங்ககார விசேட அதிதியாக கலந்துகொண்டு முதலாவது போட்டியை ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம் போன்ற இடங்களில்...
முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப் பதில் உள்ள பல தடைகளையும் தாண்டி வெகுவிரைவில் மக்களின் பிரச்சினை களை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்ப டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் கீழ் உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் யாழிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு...
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச சமூகத்தின் ஊடாக விடுதலைப் புலிகள் சரணடைய எத்தனித்தனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எனினும், சரணடைதல் தொடர்பில் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித நேரடி இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் சரணடைந்த போது,...
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் யாழ்பபாணத்தில் தொடர்ந்தும் முகாம்களில் வாழ்ந்து வருவதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள 32 முகாம்களில் 1318 குடும்பங்களைச் சேர்ந்த 4737 பேர் முகாம்களில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத்...
கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரில் எண்ணெய் மற்றும் கிரீஸ் கலக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது. நுகர்வோர் அதிகாரசபையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கொழும்பு நகரின் சில கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 37 குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை மேலும் அறிவித்துள்ளது. அவ்வாறு கைப்பற்றப்பட்ட குடிநீரில் எண்ணெய் மற்றும் கிரீஸ்...
Loading posts...
All posts loaded
No more posts
