- Sunday
- February 22nd, 2026
கிளிநொச்சி நகரில் உள்ள கனகபுரம் விளையாட்டுக் கழகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மாபெரும் மென்பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டி இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. மேற்படி நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து...
இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தொழில்பயிற்சிநிலையங்களுக்கு பின்வரும் கற்கை நெறிகளை கற்பிக்கும் போதனாசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றது. சமையற்கலை, வெதுப்பாளர், அறை ஒழுங்குபடுத்துநர், மின்மோட்பர் மீள்முறுக்குநர்(வைண்டிங்), உணவுப் பரிசாரகர்,நீர்க்குழாய்பொருத்துநர் (பிளம்பிங்), தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர்,முன்பள்ளி ஆசிரியர் அழகுக்கலை வல்லுனர், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடை வடிவமைப்பாளர் அலுமினியம் பெருத்துநர். கல்வித்தகைமை-கபொத (சாதாரண...
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மீன்பிடிக்கும் தென்பகுதி மீனவர்களின் செயற்பாடுகளை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாக ஜே. வி. பி. கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில்...
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுடனும் இலங்கை அரசு பேச்சுகளை நடத்த வேண்டும் என்றும், இந்தியக் கடற்படையுடன் இணைந்து கூட்டு ரோந்து நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் ஆலோசனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் ஏற்படும்...
எம்மை விரைவில் மீள்குடியேற்றம் செய்யாவிடின். ஒரு கையில் எமது காணிக்கான உறுதியுடனும், மறுகையில் வெள்ளைக் கொடியையும் தாங்கி உயர்பாதுகாப்பு வலய வேலிகளைத் தாண்டிய எமது சொந்த நிலங்களுக்குச் சென்று குடியமருவோம் என வலிகாமம் வடக்கில் இருந்து நலன்புரி நிலையத்தில் வசிக்கும் முத்தையா சிவானந்தன் தெரிவித்தார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள்...
வடக்கில் ஒரு சிறு துண்டு நிலத்தையும் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கவில்லையெனவும், இராணுவம் நிலைகொண்டுள்ள காணிகள் அனைத்தும் அரசாங்கத்துக்கு சொந்தமான காணிகள் என இராணுவப் பேச்சாளர், தென்னிலங்கை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே ஜெனீவா சென்று பொய் கூறும் போது, அந்த இராணுவ ஊடக பேச்சாளர் பொய் கூறியது...
யாழ்ப்பாணத்தின் வான் பரப்பில், வெள்ளிக்கிழமை (09) பிற்பகல் 1.45 மணியளவில் கிபீர் விமானம் பறந்துள்ளது. யுத்த காலத்தில் அடிக்கடி கிபீர் விமானம் யாழ்ப்பாண வான் பரப்பில் பறந்திருந்து கடந்தக் காலங்களில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று பறந்துள்ளது.
வதிவிட சான்றிதழ் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றுக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விஷ்வமடு கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசங்களுக்கு பொறுப்பான கிராம சேவகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விஷ்வமடு பிரதேசத்தில் வசிக்ககூடிய நபர் ஒருவரின் உறவினருக்கு அந்த வீட்டில் குடியிருந்து வருவதாக வதிவிட சான்றிதழ் ஒன்றை...
கொழும்பு நகருக்குள் தடையின்றி கள்ளுக்கடைகளை ஆரம்பிப்பதற்கு கொழும்பு பிரதேச செயலாளர் வழங்கியுள்ள அனுமதியை ரத்துசெய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தர்ம ஷக்தி அமைப்பு இந்த மனுவை தாக்கல்செய்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் மாதம்பாகம அச்சாஜி தேரர் தெரிவித்தார். கொழும்பு நகரில் தற்போது 5 கள்ளுக்கடைகளை நடத்துவதற்கு மட்டுமே அனுமதி உள்ளது. தற்போது...
உலகில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படும் சூழல் தொடர்பான சிபிஜே- என்ற ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் இம்முறை அறிக்கையில் இலங்கை 6-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இலங்கை 4-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு முதலிடத்தில் சோமாலியாவும் இரண்டாவது இடத்தில் இராக்கும் உள்ளன. சிரியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கொல்லப்பட்ட...
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் என்றொரு பழமொழி உண்டு. இந்த பழமொழி சமூக வலைத்தளங்கள் விஷயத்தில் தற்போது உண்மையாகியிருக்கிறது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை திடீரென்று பலர் ஒரு ஆணும் பெண்ணும் நிர்வாண நிலையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தமது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ளத் துவங்கினார்கள். அந்த காட்சி உத்தரப்பிரதேசத்தில் இருக்கும்...
வடமாகாண விவசாய அமைச்சின் குறித்து ஒதுக்கப்பட்ட நன்கொடை நிதியில் இருந்து 3.3 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய உள்ளீடுகளை மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வழங்கி வைத்துள்ளார். இப்பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை (09.10.2015) உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட...
விஸ்வமடுவில் இராணுவத்தினரின் பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்றுள்ள பெண்கள் அமைப்பு ஒன்று, மன்னாரில் 2001ம் ஆண்டு இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு தொடர்பான வழக்கு இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கை மையமாகக் கொண்டு இயங்கும் 8 பெண்கள் அமைப்புக்களின் கூட்டமைப்பான “வான்” இது தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாட்டை செய்துள்ளது....
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றி அவரது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தால் லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபி,ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசேன் ஆகிய தலைவர்களுக்கு ஏற்பட்டிருந்த நிலையே இன்று அவருக்கும் ஏற்பட்டிருக்கும் என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...
சுன்னாகம் பொலிஸார் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு மேற்க் கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது பலவேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் 14 பேர் கைது செய்யப்பட்டனர். சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸ்மந்த தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் ஏழாலை பகுதியில் மது போதையில் பொது மக்களுக்கு இடையூறாக நடந்து கொண்ட நான்கு பேரையும்...
மதுபோதையில் பொது மக்களுக்கு இடையூறான வகையில் சந்தியில் நின்று சண்டை பிடித்துக்கொண்டு நின்ற இளைஞர்கள் இருவருக்கு மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொடுத்த தர்ம அடியில் இளைஞர்கள் ஓடித்தப்பினர். ஏழாலை வடக்கு, சிவகுரு கடையடியில் நேற்று இரவு சுமார் இருபது வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் மது போதையில் கெட்ட வார்த்தை பிரயோகங்களை பேசி...
வடக்கு மாகாண பொதுச் சேவையின் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் வகுப்பு III தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 30.10.2015 ஆகும் இது தொடர்பான அறிவித்தலை பார்வையிடுவதற்கு இங்கு அழுத்தவும்
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவு திகதி 06.11.2015 ஆகும் இது தொடர்பான அறிவித்தலை பார்வையிடுவதற்கு இங்கு அழுத்தவும்
யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடை பவனி இன்று நடைபெற்றது. கல்லூரியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதன் ஒரு கட்டமாக நடை பவனி இடம்பெற்றது. குறித்த நடை பவனியினை இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் நடராஜா ஆரம்பித்து வைத்தார். யாழ். மத்தியக் கல்லூரி வளாகத்திலிருந்து...
மத்திய வங்கி உத்தியோகத்தர்கள் இடமாற்றம் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சர்ச்சை நிலை எழுந்திருந்த போது காமத்தரகர்கள் சபைக்குள் இருப்பதாக இரு தரப்பிலிருந்தும் பரஸ்பரம் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது மேற்படி விவகாரம் தொடர்பில் சர்ச்சை எழுந்தது. 200க்கு மேற்பட்ட மத்திய வங்கி உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் இது பழிவாங்கல் நடவடிக்கையாகவே இடம்பெற்றிருப்பதாகவும்...
Loading posts...
All posts loaded
No more posts
