Ad Widget

வடக்கு ரயில் சேவைகள் வழமைக்கு

ரயில் ஒன்று தடம்புரண்டதால் பாதிக்கப்பட்ட வடக்கு ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

வடக்கு ரயில் பாதையின் அம்பத்பொல – கல்கமுவ வரையான பகுதியில் ரயிலொன்று நேற்று தடம்புரண்டது.

இதனால் வட பகுதிக்கான இரவு நேர தபால் ரயில்கள் நான்கும் இரத்துச் செய்யப்பட்டன.

இதனையடுத்து நேற்று நள்ளிரவு 12.30 அளவில் தடம்புரண்ட ரயில் மீண்டும் சீர்செய்யப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts