Ad Widget

கோப்பாயில் இளைஞர் மீது வாள்வெட்டு!

வேலை முடிவடைந்து வீடு திரும்பும் வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் கும்பலின் வாள் வெட்டுக்கு இலக்காகிய இளைஞர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சேர்க்கப்பட்டுள்ளார்.

சுன்னாகம் ஜயனார் கோவிலடியைச் சேர்ந்த தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் சிவனேந்திரன் தர்மதாசன் (வயது 26) என்பவரே கையிலும் காலிலும் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் மிகவும் துணிச்சலான முறையில் கோப்பாய் சந்திக்கு அண்மையாக உரும்பிராய் வீதியில் வைத்து பொது மக்கள் பலரும் பார்த்திருக்கக் கூடியதாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.

இது சம்பந்தமாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

Related Posts