- Friday
- November 21st, 2025
18 வயது வந்த பின்னர் தன்னை திருமணம் செய்வதாக கூறி கடந்த 3 வருடங்களாக தன்னுடன் பழகி தன்னை ஏமாற்றிய இளைஞன் வேறொரு யுவதியை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக, பாதிக்கப்பட்ட யுவதி, திங்கட்கிழமை (12) இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். கீரிமலை சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த யுவதியும் சில்லாலை பகுதியைச் சேர்ந்த இளைஞனும்...
ஒரு வித காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மணிநேரத்தில் உயிரிழந்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சங்கானை பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம் தர்சினி (வயது 36) என்பவரே இவ்வாறு திங்கட்கிழமை (12) உயிரிழந்துள்ளார். 10 நாட்களுக்கு முன்னர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இவர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்....
தீர்வையற்ற முறையில் மோட்டார் சைக்கிளுக்காக விண்ணப்பித்த ஊடகவியலாளர்களை நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றுமாறு நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மேலாதிகச் செயலாளர் பீ.கே.எஸ்.ரவீந்திர கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கான கடிதம் உரியவர்களுக்கு நேற்று(12) தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நேர்முகப் பரீட்சை 19ஆம், 20 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. வடக்கு மாகாண இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமான மேற்படி போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம், கஜதீபன், சுகிர்தன், பரஞ்சோதி,...
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று (13) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. தம்மை விரைவில் விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் கைதிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கொழும்பு மெகஸின், அனுராதபுரம் உள்ளிட்ட பல சிறைச்சாலைகளிலும் கைதிகள் உணவை புறக்கணித்து உண்ணாவிரத்தில்...
தொழில் போட்டி காரணமாக இளம் குடும்பஸ்தர் மீது மூவர் கொண்ட குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் யாழ்.போதனா வைத்தியசாலையின் விபத்து அதி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தாவடி ஐந்து வேம்படி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அருந்தவச் செல்வன் அருண்றொஜீவ் (வயது-33) என்பவரே மேற்படி தாக்குதலில் படுகாயமடைந்து...
யாழ்.மறைமாவட்ட ஆயராக அருட்தந்தை ஜஸ்ரின் பி.ஞானப்பிரகாசம் பாப்பாண்டவரால் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் நியமனம் குறித்த அறிவிப்பு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்.ஆயர் இல்லத்தில் வைத்த ஆயர் மேதகு தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும். யாழ்.மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டுள்ள அருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, சென்.பற்றிக்ஸ் கல்லூரி ஆகியவற்றின் அதிபராகக் கடமையாற்றியதுடன்...
இந்திய மீனவர்கள், இலங்கை எல்லைக்குள் அத்துமீறாத வகையில், மீன் இருக்கும் கடற்பகுதியை செயற்கை கோள் மற்றும் தொழில்நுட்பங்களின் உதவியுடன் அடையாளப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்த விடயத்தை உடன் அமுல்படுத்துமாறு யாழ்.மாவட்ட மீனவர் சங்க சம்மேளனங்களின் சமாசத் தலைவர் எஸ்.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். 'மோடி அறிவித்த திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்துவதன் மூலம், எங்கள்...
கஸ்டப் பிரதேசத்தில் கடமையாற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 6 வருடங்களாக கடமையாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களுக்கான இடமாற்றத்தை வழங்குமாறு கோரி, வடமாகாண கல்வி அமைச்சின் முன்பாக திங்கட்கிழமை (12) போராட்டம் மேற்கொண்டனர். 2009ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் நியமனம் பெற்று கடமையாற்றிய இவர்கள், 5 வருடங்கள் என்ற கட்டாயக்...
கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்புகளில் கல்விக்கற்கும் மாணவிகளை பாடசாலைப் பணியாளர் ஒருவர், அலைபேசியில் மறைமுகமாக புகைப்படங்கள் எடுத்து வருவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்திக் குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரம் மற்றும் உயர்தரத்தில் கல்விக்கற்று...
ஐ.நா பரிந்துரைகளுக்கமைய விசாரணை நடைபெறுகின்றதா என்பதை கண்காணிப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கண்காணிப்புக் குழுவொன்றை உருவாக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'போரினால்...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கொழும்பில் நாளை புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதேபோன்று, யாழ்ப்பாணத்திலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக அரசியல் கைதிகளின் உறவினர்களாலேயே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. பொதுமன்னிப்பு வழங்கி தம்மை உடனடியாக விடுதலை செய்ய...
மாவட்ட நீதிபதி அல்லது அரச அதிபர் தளத்தில் நின்று சட்டத்தைப் பயன்படுத்தி வன்செயலில் ஈடுபடும் கும்பலைக் கலைப்பதற்கு இடமளிக்க வேண்டாம் என ரௌடித்தனத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை வன்முறைகளில் அல்லது வன்செயல்களில் ஈடுபடுகின்ற குழுவினரை, சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பொலிஸார் அல்லது படையினரின் உதவிகொண்டு கலைப்பதற்கு சட்டத்தில் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.இத்தகைய அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு...
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு இலங்கை போக்குவரத்துச் சபையில் எவருக்கும் தொழில் வழங்க முடியாது என போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். காத்தான்குடியிலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போவுக்கு விஜயம் செய்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த...
மத்திய கொழும்பின் பார்பர் வீதி என்ற மகா வித்தியாலய வீதியின் 36ம் தோட்டத்தில் அமைந்துள்ள இந்து கோவிலின் தேர் திருவிழா இம் மாதம் 22 முதல் 31க்கு உட்பட்ட தினத்தில் நடைபெறும். தற்சமயம் நவராத்திரி உற்சவங்கள் ஆரம்பித்து உள்ளதால் இந்த திருவிழா தேர் பவனியுடன் இந்த மாதமான ஒக்டோபர் இறுதிக்குள் ஆகமமுறைப்படி சாஸ்திரிகள் தீர்மானத்து கொடுக்கும்...
வடக்கு, கிழக்கில் இருக்கின்ற அரசுக்கு முட்டுக்கொடுக்கும் சிறுசிறு தமிழ் கட்சிகளை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக சில கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்தேகம் உள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுத் துறையினரால் தடுத்து...
கீரிமலையில் அமைந்திருந்த சிறிய கடற்படை முகாம் இன்று பகல் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த வீடுகளும் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கீரிமலை கேணிக்கு அண்மையாக மூன்று வீடுகளில் கடற்படையினர் நிலைகொண்டு இருந்தார்கள். இதில் ஒரு வீடு ஏற்கனவே உரியரே்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் மிகுதியாகவுள்ள இரண்டு வீடுகளிலும் கடற்படையினர் தங்கி இருந்தார்கள். இன்று திங்கட்கிழமை குறிப்பிட்ட இடத்தில்...
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள தமிழ் கைதிகளின் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுகி, அவர்களுடைய பிரச்சினைக்குக் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தீர்வு காணப்படும் என்ற உத்தரவாதத்தை, வழங்கி அந்த உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம்...
அல்வாய் திக்கம் பகுதியில் வாளுடன் ஒருவரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர் அல்வாய் முத்துமாரியம்மன் கோயில் பகுதியினை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என பொலிஸார் கூறினர். அல்வாய் திடல் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டினை அடுத்து, ஒரு குழுவினர் வாளுடன் திக்கம் பகுதிக்கு வந்துள்ளனர். அப்பகுதியில்...
சங்கானைப் பகுதியில் மிக நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத கொல்களத்தை, ஞாயிற்றுக்கிழமை (11) காலை யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது அங்கு இறைச்சியாக்கப்பட்ட 400 கிலோகிராம் மாட்டு இறைச்சியை கைப்பற்றிய பொலிஸார், இச்சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஏழாலை, சுன்னாகம், மாசியப்பிட்டி மற்றும் மல்லாகம் பகுதிகளைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டதுடன்...
Loading posts...
All posts loaded
No more posts
