Ad Widget

புறக்கோட்டையில் பயணப் பொதியில் தமிழ் பெண்ணின் சடலம் – அடையாளம் காண பொது மக்களிடம் உதவி கோரல்

கொழும்பு - புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் ஒரு தமிழ் பெண் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் குறித்த சடலம் பயணப் பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் அனுராதபுரம் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டது. எனினும் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை....

பெரும்பான்மை சமூகத்தின் தேவையை நிறைவேற்றும் அதிகாரம் எமது கைக்கு வரும் – சம்பந்தன்

எதிர்காலத்தில் பெரும்பான்மை சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அதிகாரம், எமது கைக்கு வருமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மூதூரில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதற்கான முதல் அடியை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென அவர் குறிப்பிட்டார்....
Ad Widget

பிள்ளைகளின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனியுங்கள் , பெற்றோர்களுக்கு பொலிஸாரின் ஆலோசனை

யாழ்.குடாநாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாராகிய நாம் என்றும் தயாராக இருக்கின்றோம் என யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.கே.வூட்லர் தெரிவித்தார். சிறுவர் துஸ்பிரயோகத்திலிருந்து பிள்ளைகளை பாதுகாப்பது தொடர்பில் விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இடம்பெற்றது. அதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர்...

ஓகஸ்ட் 2 வரை ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்

ரயில் திணைக்கள தொழிற்சங்க கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தம் காரணமா, நாடு பூராகவும் உள்ள ரயில் சேவைகள் ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி வரை ஸ்தம்பிதமடையும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில்வே திணைக்கள தொழிலாளர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வொன்றை பெற்றுத்தருமாறு கோரியே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கொடி விவகாரம்: யட்டிநுவர பி.சபை முன்னாள் தலைவர் கைது

கண்டி - யட்டிநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் துஷிதகுமார வலகெதர கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்கட்சி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் தேசிய கொடியை ஒத்த திரிபுபடுத்தப்பட்ட கொடி போடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் முன்னாள் பிரதேச சபைத் தலைவரை கைது செய்துள்ளனர்.

இ.போ.ச. – தனியார் பஸ் சேவையினர் பருத்தித்துறையில் மோதல்!

தொழில் போட்டி காரணமாக இ.போ.ச பஸ் சேவையினருக்கும் தனியார் பஸ் சேவையினருக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவம் நேற்று புதன்கிழமை 7 மணியளவில் யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை பஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை - முல்லைத்தீவு போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட இ.போ.ச. பஸ், தனியார் பஸ்ஸை முந்திச் சென்றதாலேயே இந்த மோதல்...

கூட்டமைப்புக்கு ஆதரவில்லை – தேர்தலில் பக்கச்சார்பற்ற நிலை – விக்கினேஸ்வரன்

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தான் நடுநிலைவகிக்கப்போவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இங்கிலாந்தில் உரையாற்றும்போது கூறியது போல், வள்ளுவன் வாக்கிற்கிணங்க, நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மனோபாவம், தூர நோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள். அத்துடன், தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின்...

பேரினவாத கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் – சிவாஜிலிங்கம்

சிங்கள பேரினவாத கட்சிகளுக்கோ அல்லது சுயேட்சைக் குழுக்களுக்கோ வாக்களிக்க வேண்டாம் என்றும் தமிழ் தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்குமாறும் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள்...

ஐ.நா ஆவணம் கசிவு – பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? சனல் 4 கேள்வி!

ஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது. நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்படும், இலங்கையின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போது, இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா விசாரணை குறித்து வரும் செப்ரெம்பரில்...

முருகன், சாந்தன், பேரறிவாளன் தண்டனை ரத்து சரியான தீர்ப்பே!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனை ரத்துச் செய்தும், அவர்களுக்கான தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தும், உச்சநீதிமன்ற தலைமை...

வடமாகாண கூட்டுறவு அமைச்சின் ஏற்பாட்டில் பனை அபிவிருத்தி ஆய்வரங்கு

வடமாகாண கூட்டுறவு அமைச்சின் ஏற்பாட்டில் பனை அபிவிருத்தி தொடர்பான ஆய்வரங்கு செவ்வாய்க்கிழமை (28.07.2015) யாழ் நகரில் உள்ள கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்றுள்ளது. வடமாகாண கூட்டுறவு அமைச்சு கடந்த 22 ஆம் திகதி தொடங்கி 28 ஆம் திகதி வரையான பனை அபிவிருத்தி வாரத்தில் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே,...

மக்களின் சுய நிர்ணய அங்கீகாரம் பெறுவதன் மூலம் மட்டுமே தியாகங்களிற்கு பெறுமதி கிடைக்கும் – செல்வராசா கஜேந்திரன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று ஜூனியன்குளம் அக்கராயனில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் யாழ் மாவட்டத்தில் இலக்கம் 10 இல் போட்டியிடும் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் நடை பெற்றது. இக் கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் கிளிநொச்சியை பிரதிநிதிப்படுதும் இலக்கம் 9 இல் பேட்டியிடும் முன்னை நாள் போராளியும்...

இறுதி யுத்தகாலத்தில் திட்டமிட்டே கூட்டமைப்பினர் இந்தியா சென்றனர்!-கிசோர்

இறுதி யுத்தம் நடைபெற்ற போது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் திட்டமிட்டே இந்தியா சென்றிருந்ததாகவும் அதனை தடுக்கும்படி புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, ஊடகவியலாளர் இறுதி யுத்தம் நடைபெற்ற போது கூட்டமைப்பின்...

கோகிலவாணிக்கு சிவாஜிலிங்கம் ஆதரவு!ஓங்கி குரல் ஒலிக்க ஆதரிக்க கோரிக்கை!!

கட்சி எல்லைகளிற்கப்பால் பெண்போராளியென்ற வகையிலும் தனது இரண்டு சகோதரர்களையும் மாவீரர்களாக மண்ணிற்கு கொடுத்த சகோதரியென்ற வகையிலும் கோகிலவாணிக்கு தனது ஆதரவையும் வரவேற்பினையும் வடமாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். எவ்வாறு வடமாகாணசபை உறுப்பினரான அனந்தியால் ஜெனீவர் வரை சென்று உரையாற்ற முடிந்ததோ அதே போன்று கோகுலவாணியாலும் முடியுமெனவும் அவர் தெரிவித்தார். இணையத்தளமொன்றுக்கு வழங்கிய...

யாழ். மாவட்டச் செயலகத்தினால் செய்தி மடல் வெளியீடு!

யாழ்.மாவட்ட செயலகத்தினால் யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி விடயங்களை தாங்கிய செய்தி மடல் இன்று புதன்கிழமை நண்பகல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்ற நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் சம்பந்தமான தகவல்களை...

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தொடர்ந்தும் நெருக்கடி!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதவாளர்கள் தொடர்ந்தும் அரச புலனாய்வாளர்களது நெருக்குவாரங்களை எதிர்கொண்டுள்ளதாக கட்சியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஜரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் புகார் செய்துள்ளார். அவர்களது குழு சந்திப்புக்களினை அவதானிக்க வந்திருந்த பிரதிநிதிகளிடமே இக்குற்றச்சாட்டை கஜேந்திரன் முன்வைத்துள்ளார். இதனிடையே யாழ்.மாவட்டத்தில் தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உதவித்...

தோல்விகளை தோற்கடிக்க வேண்டும் என்றும் இளைஞர்களை கனவு காண சொல்லிவிட்டு கண் மூடி விட்டார் எங்கள் அப்துல் கலாம் -டர்ஷன்

தோல்விகளை தோற்கடிக்க வேண்டும் என்றும் இளைஞர்களை கனவு காண சொல்லிவிட்டு கண் மூடி விட்டார் எங்கள் அப்துல் கலாம் என தமிழர் விடுதலை கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் நாகேந்திரன் டர்ஷன் தெரிவித்துள்ளார். . அது மட்டுமல்ல நீங்கள் உங்கள் எதிர் காலத்தை மாற்ற முடியாது என்றும் ஆனால் பழக்க வழக்கங்களை மாற்ற முடியும் என்பதோடு...

வேட்பாளர் பட்டியலில் இல்லாதவர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியாது! தேர்தல் ஆணையாளர் அதிரடி

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதவர்களோ, தேசியப் பட்டியலில் பெயரிடப்படாதவர்களோ, நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படமாட்டார்கள் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேசியப் பட்டியலில் அந்தந்த கட்சிகளினால் பெயரிட்டு வெளியிடப்பட்டுள்ள உறுப்பினர்களைத் தவிர்ந்த வேறு எவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேசியப் பட்டியல் ஊடாக பதவி வகிக்க இம்முறை அனுமதிக்கப்படாது. தேர்தல் சட்டத்திற்கு அமைய இந்த விடயம்...

45 இலங்கை அகதிகள் நாடு திரும்பினர்

அகதிகளாக இந்தியாவில் பல பகுதிகளிலும் உள்ள முகாம்களில் குடியேறியிருந்த இலங்கையர்கள் 45 பேர், நேற்று செவ்வாய்க்கிழமை (28) சர்வதேச விமான நிலையத்தனூடாக இலங்கையை வந்தடைந்தனர். இதன் பிரகாரம் திருச்சி, திண்டுக்கல், கன்னியாகுமாரி, விழுப்புரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, கரூர், திருநெல்வேலி, இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களிலுள்ள முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் 45 பேரும் முகாம்களின்...

மக்களிற்காக ஒரு சிறுதுரும்பையும் எடுத்து போட்டிருக்காதவர்களே இந்த இணைய போராளிகள்- அனந்தி

போதுமான அரசியல் முதிர்ச்சியற்றவர்களே தன் மீது இணையத்தளங்களில் அவதூறு பரப்பி வருவதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கூறியுள்ளார். போதுமான அரசியல் முதிர்ச்சியற்ற, எதையும் ஆராய்ந்து பார்க்க தெரியாத சிறுகுழுவொன்று இணையத்தளத்தில் உலாவிவருவதாகவும், அவர்கள் தமது சொந்த நலனினடிப்படையில் அவதூறுகளை பரப்பி வருவதாகவும் அனந்தி சசிதரன் கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கப் போவதாக அறிவித்தது,...
Loading posts...

All posts loaded

No more posts