Ad Widget

மஹிந்தவின் நிலக்கீழ் மாளிகை : கற்பனை கூட செய்ய முடியாத அளவு நவீன மற்றும் சொகுசு வசதிகள்

கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகைக்கு நேற்றுக் குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவிக்காலத்தில் இந்த மாளிகையை நிர்மாணித்திருந்தார்.

மாளிகையை நிர்மாணிப்பதற்கான நல்லநேரத்தையும் மஹிந்தவின் ஆஸ்தான சோதிடரான சுமணதாச என்பவரே குறித்துக் கொடுத்துள்ளார்.

மாளிகையின் உள்ளே நுழைவதற்கு இரகசியக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் உள்ளே இருந்து கதவை மூடிக் கொண்டால் வெளியில் இருந்து இரகசியக் குறியீட்டின் மூலம் கூடத் திறக்க முடியாதளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மாளிகையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

குளிரூட்டி வசதி, தொலைபேசி , இன்டர்நெட், அகலத்திரை தொலைக்காட்சிகள், சொகுசு இருக்கைகள், நிலமட்டத்திற்கு மேலே ஜனாதிபதி மாளிகையில் நடப்பவற்றைக் கண்காணிப்பதற்கான கமெராக்கள் எனக் கற்பனை கூட செய்ய முடியாத அளவு நவீன மற்றும் சொகுசு வசதிகள் இந்த மாளிகைக்குள் உள்ளடங்கியிருந்தன.

மாளிகையின் மேற்புறம் நில மட்டத்திற்கு மேலாக இரண்டு அறைகள் கொண்ட ஓய்வு விடுதியொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் தமிழ் ஊடக அதிகாரி ஆர்.எப். அஷ்ரப் அலீயும் இந்த ஊடகவியலாளர் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே தமிழ் ஊடகவியலாளராக நிலக்கீழ் அதிசொகுசு மாளிகையை பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்

Related Posts