அனைத்து பாகங்களிலும் கடும் மழை பெய்யலாம்?

வானிலையில் ஏற்பட்டுள்ள தாழமுக்க மாற்றத்தினால் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இன்று (14) அதிக மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து பாகங்களிலும் பகல் இரவு என எந்நேரங்களிலும் இம் மழை பெய்யலாம் எனவும் அத்துடன் இம் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக...

அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கியமை குறித்து நீதி அமைச்சு விளக்கம்

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்களுடன் தொடர்பில்லாதவர்களை பிணையில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவர்களை முற்றாக விடுதலை செய்யவில்லை எனவும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 60 சந்தேகநபர்களை இவ்வாறு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவர்களை விடுவித்தமையானது பாரிய தவறு என சிலர் அர்த்தம் கற்பிக்க முற்படுவதாகவும்...
Ad Widget

பாரிஸ் தாக்குதல்; இலங்கையர்கள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சு அவதானம்

பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை வௌிவிவகார அமைச்சு அவதானத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதில் இலங்கையர்கள் எவரும் சிக்கி இருப்பார்களா என்பது தொடர்பில் அந்த நாட்டு உரிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்வத்தில் 153க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

எனது கருத்துக்கள் பிளவுகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதாக யாராவது கருதினால் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகின்றேன் -மெல்பேர்னில் சுமந்திரன்

தான் கூறும் கருத்துக்கள் பிளவுகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதாக யாராவது கருதினால் அதற்கு தான் மனம் வருந்துவதாகவும் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகின்றேன் .மக்களை குழப்பியதாக யாராவது குற்றஞ்சாட்டினால் அந்த குற்றச்சாட்டை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கு தயவுசெய்து தன்னை மன்னித்துக்கொள்ளுமாறும் - தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் அவுஸ்திரேலியாவில் வெள்ளிகிழமை இடம்பெற்ற...

தந்தை செல்வா, தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் இவர்களைத் தொடர்ந்து எமது மக்கள் நேசிக்கும் ஒரே நபர் வடக்கு முதல்வர் – சிறீதரன்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட தமிழீழத்தின் சமகால அரசியல் பற்றிய கருத்துரைகளும்இ கலந்துரையாடலும் எனும் நிகழ்வு கனடா றொரான்டோவில் 10.11.2015 அன்று பேராசிரியர் சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் வீடியோக் காணொளி மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்....

கெஹலிய ரம்புக்வெலவுக்கு யாழ்.நீதிமன்றம் பிடியாணை

யாழ்.மாவட்டத்தில் வைத்துக் கடத்தப்பட்டு காணாமல்போன லலித், குகன் வழக்கில் முன்னாள் தகவல் தொடர்பாடல் ஊடகத்துறை அமைச்சருக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ஜே.வி.பி கட்சியிலிருந்து பிரிந்து சென்ற நிலையில் யாழ்.மாவட்டத்தில் அரசியல் பணியாற்றிய லலித், குகன் ஆகியோர் கடத்தப்பட்டுக் காணாமல்போயினர். இந்நிலையில் குறித்த சம்பவத்தையடுத்து முன்னாள் தகவல் தொடர்பாடல் ஊடகத்துறை அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெவல...

சுமந்திரனுக்கெதிராக மெல்பேர்ணில் போராட்டம்! கூட்டம் ரத்து!

இலங்கையிலிருந்து சென்ற யாழ்மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் M A சுமந்திரனுக்கெதிராக மெல்பேர்ணில் Scoresby, St Judes Community Centre க்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து அந்த மண்டபத்தில் நடப்பதாக இருந்த பொதுக்கூட்டம் ரத்துச் செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். பிந்திய செய்தி குறித்த கூட்டம் பிறிதொரு இடத்தில்...

WT1190F மர்மப்பொருள் இலங்கை அருகில் விழும் காட்சி வெளியானது

WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள் விண்வெளியில் இருந்து இலங்கை நேரப்படி இன்றுக்காலை 11.48 க்கு,  இலங்கையின் தென் கடற்பகுதியில் விழும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில், அந்த மர்மப் பொருளானது பகல் 12.45 வரை விழவில்லை என்றும் அந்த மர்மப் பொருள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் தங்காலை கண்காணிப்பு மத்தியநிலையத்துக்கு கிடைக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஐக்கிய...

இனி தேநீரில் சீனி கலப்பது தடை!

தேனீர்  வழங்கும் போது,தேநீருக்குள் சீனியை கலக்காது,பிறிதொரு பாத்திரத்தில் சீனியை வைத்து தேவையான அளவு கலந்து கொள்ளும் விதத்தில்,ஹோட்டல்கள்,தேநீர்ச்சாலைகள்,சிற்றுண்டிண்டிச்சாலைகளில்  வழங்குவது அவசியம், என சுகாதார அமைச்சின் விசேட சுற்று நிருபம் அறிவித்துள்ளது. நாளை(14) உலக சிறுநீரக நோயாளர் தினத்தை முன்னிட்டு ,இவ்விசேட விதிகள் நடைமுறைப்படுத்த  உள்ளதாக ,சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் பாலித மகிபால அவர்கள் தெரிவித்துள்ளார்.சுகாதார...

பணிப்புறக்கணிப்பு போராட்டம் வெற்றி பெற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட கடையடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்பை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு நீண்டகாலமாக விடுதலையின்றி அரசியல் கைதிகளாக சிறையில் வாடும் தமிழ் இளைஞர்கள்  ”நல்லாட்சி” அரசு என்று கூறும் அரசாங்கமும்...

யாழில் பூரண ஹர்த்தால். மாவட்டமே வெறிச்சோடியது!

யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் பூரண ஹர்த்தால் நடவடிக்கையினால் யாழ். மாவட்டம் முற்று முழுதாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று கடையடைப்பு, வேலைநிறுத்தங்களை மேற்கொண்டு பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய...

ஹர்த்தாலுக்கு EPDP ஆதரவு

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இன்று வெள்ளிக்கிழமை (13) வடக்கில் அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தாலுக்கு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் ஆதரவு வழங்குவதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 'அரசியல் கைதிகளின் விடுதலையானது அவசியமானது. அவர்களின் விடுதலையை வலியுறுத்திய வகையில் மேற்கொள்ளப்படும் இந்தக் ஹர்த்தாலுக்கு எமது ஆதரவை வழங்குகின்றோம். அடிப்படைத் தேவைகள் தவிர்ந்து, மற்றவர்கள் அனைவரும்...

யாழில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிப்பு – வைத்திய நிபுணர் சிவன்சுதன்

யாழ் மாவட்டத்தை உள்ளடக்கிய வடமாகாணத்தில் நீரிழிவு நோயின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றது என யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் சிவன்சுதன் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் உள்ளவர்களே அதிகளவில் இந் நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (11) நண்பகல் நடைபெற்ற...

கே.பி க்கு எதிராக 192 குற்றச்சாட்டுக்கள்; அதில் 46க்கு சாட்சிகள் இல்லை

முன்னாள் விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரிவு தலைவர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி சம்பந்தமாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடக் கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தது....

இலங்கையின் தென் பகுதிக்கு இன்று மர்மப்பொருள் விழும்!

விண்ணில் இருந்து ´WT1190F´ என்று பெயரிடப்பட்ட மர்மப்பொருள் ஒன்று இன்று இலங்கை நேரப்படி 11.48 இற்க்கு வீழ்வதை அடுத்து, இலங்கையின் தென்பகுதி கடற்பிரதேசம் பறப்பற்ற பிரதேசமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருள், கரைக்கு அண்மித்த கடற்பகுதியிலேயே வீழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. காலிக்கும் ஹம்பாந்தோட்டைக்கும் இடைப்பட்ட கடல்பகுதியிலேயே இந்த மர்மப்பொருள் வீழும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் குறித்த...

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாது செய்ய முடியுமான அனைத்தையும் செய்வேன்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாது செய்வதற்கு தன்னால் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தனக்குள்ள அதிகாரங்களை கைவிட்டு ஜனநாயக சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்புவது இன்றியமையாத ஒன்று எனத் தெரிவித்தார். மறைந்த கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் நேற்று மாலை பாராளுமன்ற மைதானத்தில்...

நம்பிக்கையை தளரவிடாது தொடர்ந்து போராடுங்கள்! – காணாமற்போனோரின் உறவினர்களிடம் ஐ.நா அதிகாரி

நம்பிக்கையை கைவிடாது தொடர்ந்து போராடுங்கள், எங்களால் முடிந்த நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயம் எடுப்போம் என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் தெரிவித்தார் காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா செயற்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ரியூக் பெய்ங். காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் வாக்கு மூலத்தை பெற்றுவதற்காக காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராயும் ஐ.நா செயற்குழு யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின்...

பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் விபரம்

அரசியல் கைதிகளில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் உரியமுறையில் இன்னும் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவரவில்லை, இதனால் நேற்று பிணையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரை மாத்திரமே இன்று அவர்களின் உறவினர்கள் சரீரப் பிணையில் அழைத்துச்சென்றனர். இவ்வாறு நேற்று சரீரப் பிணையில் செல்ல அனுமதிப்பட்டவர்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளன . 1. தங்கராஜா புவனேஸ்வரன் 2. சுந்தரலிங்கம் அகிலன் 3....

விடுதலை செய்யப்பட்டவர்கள் 6 பேர் போதைப்பொருள் வியாபாரிகளும், கொலை கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சிங்களவர்கள் -சுரேஸ் பிரேமச்சந்திரன் .

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் விடுதலையினைக்கோரி தொடர்ந்து 5 தினங்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில், குறித்த கைதிகளில் 18 கைதிகளின் உடல்நிலை மோசமாகியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

கைதிகள் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் வடக்கு மாகாண அமைச்சரவை சந்திப்பு

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவார்கள் என வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சந்திப்பு பற்றி முதலமைச்சர்...
Loading posts...

All posts loaded

No more posts